ஐ ஹேட் யூ பட் – 30

(Latest Tamil Sex Stories - I Love U But 30)

Raja 2013-10-28 Comments

“யார் ஃபோன்ல..??”

“அது ஒரு பெருசு.. செம ப்ளேட் போட்டுருச்சு..!!” சொல்லிக்கொண்டே அசோக் அவளுக்கு எதிரே அமர்ந்தான்.

“ஹ்ம்ம்.. ராங் நம்பர் மாதிரி ஆரம்பிச்ச..?? அப்புறம் பாத்தா சிரிச்சு சிரிச்சு ரொம்ப நேரம் பேசிட்டு இருக்குற..??”

“ஹாஹா.. ராங் நம்பர் இல்ல.. தெரிஞ்சவர்தான்..!! சரி அவரை விடு.. நம்ம மேட்டருக்கு வா..!! ஹ்ம்ம்ம்… எங்க விட்டோம்..?? ஆங்.. எதுக்கு உன் மேல எனக்கு கோவமான்னு கேட்ட..??”

“நான் கேட்டதுக்கு காரணம் இருக்கு அசோக்.. அதை அப்புறம் சொல்றேன்..!!”

“ஏன்.. இப்போ சொன்னா என்ன..??”

“ப்ச்.. அப்புறம் சொல்றேன்றன்ல.. கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லு..!!”

ப்ரியா சொல்லவும், அசோக் சில வினாடிகள் அவளுடைய முகத்தையே அமைதியாக பார்த்தான். மெலிதாக புன்னகைத்தான். அப்புறம் நெற்றியை சுருக்கி யோசிப்பது மாதிரி பாவ்லா செய்துகொண்டே ஆரம்பித்தான்.

“ஹ்ம்ம்.. என்ன சொல்றது..?? கோவம் கொஞ்சம் இருக்கு.. ஆனா..”

அசோக் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவர்கள் பேச்சுக்கு மீண்டும் ஒரு இடையூறு..!! இந்தமுறை இவர்கள் அமர்ந்திருந்த அறைக்கதவு ‘லொட்.. லொட்..’ என்று தட்டப்பட்டது. இருவரும் தலையை திருப்பி பார்த்தார்கள். வெளியே கவிதா நின்றுகொண்டிருந்தாள். ப்ரியா ‘உள்ள வா..’ என்பது போல சைகை செய்ய, அவள் கைப்பிடி திருகி அந்த அறைக்குள் நுழைந்தாள்.

“என்ன கவிதா..??” ப்ரியா கேட்டாள்.

“உன் மொபைல் அங்க அடிச்சுட்டே கெடக்குது ப்ரியா.. அதான் சொல்லலாம்னு வந்தேன்..!!”

“ஓ.. மொபைலை ரூம்லேயே விட்டு வந்துட்டனா.. ச்ச..!!” ப்ரியா தலையில் தட்டிக்கொண்டாள். அப்புறம் அசோக்கிடம் திரும்பி,

“ஹேய்.. வெயிட் பண்ணு அசோக்.. இதோ வந்துடறேன்..!!” என்றுவிட்டு எழுந்து வெளியே சென்றாள்.

ஓட்டமும் நடையுமாக சென்று தனது அறைக்குள் நுழைந்தாள். டேபிள் மீது அலறிக்கொண்டிருந்த செல்போனை அவசரமாய் எடுத்து கால் பிக்கப் செய்தாள். காதில் வைத்துக் கொண்டதுமே,

“சொல்லுங்க டாடி..!!” என்றாள்.

“என்னம்மா.. வேலையா இருந்தியா..??” அடுத்த முனையில் வரதராஜனின் குரல் சோர்வாக ஒலித்தது.

“கொஞ்சம் வேலைதான்.. பரவால சொல்லுங்க..!! என்ன.. திடீர்னு கால் பண்ணிருக்கீங்க..??”

“அ..அது.. அது வந்து..” அவர் தயங்கினார்.

“ஹ்ம்ம்.. சொல்லுங்க டாடி..!!”

“எ..எப்படி அதை சொல்றதுன்னு எனக்கு தெரியலைம்மா.. சொல்றதுக்கே ரொம்ப கஷ்டமா இருக்கு..!!” அப்பாவின் குரலில் ஒரு அதீத கவலை தொனிக்க,

“என்னாச்சு டாடி..??” ப்ரியா இப்போது சற்றே கலவரமாய் கேட்டாள்.

“நே..நேத்து சொல்லிட்டு இருந்தன்ல.. அ..அந்த எடம் நமக்கு அமையலம்மா..!!” வரதராஜன் தயங்கி தயங்கி சொன்னார்.

“எ..என்ன டாடி சொல்றீங்க..??”

“ஆமாம்மா.. பையன் வீட்டுக்கு நேராவே போயிட்டு வர்றேன்னு காலைல சொல்லிருந்தன்ல..?? கொஞ்ச நேரம் முன்னாடி.. வரலாமான்னு கேக்குறதுக்காக பையனோட அண்ணனுக்கு கால் பண்ணினேன்.. அவரு ‘வரவேணாம்.. இந்த சம்பந்தம் அமைய நாங்க குடுத்து வைக்கலை..’ன்னு சொல்லிட்டாரு..!!”

“ஏ..ஏன் அப்டி சொன்னாரு..??” எகிறுகிற இதயத்துடிப்புடன் ப்ரியா கேட்டாள்.

“என் தம்பிக்கு உங்க பொண்ணை புடிக்கலைன்னு சொன்னாரு..!!” வரதராஜன் சொல்ல, ப்ரியாவின் இதயத்தை இப்போது பக்கென்று ஒரு பயம் வந்து கவ்வியது.

“அ..அவன்.. அவன் என் ஃபோட்டோ பாத்தானாமா..??” வார்த்தைகள் அவளிடம் இருந்து தடுமாற்றமாய் வெளிப்பட்டன.

“அது தெரியலைம்மா.. ஆனா.. அவர் ஏன் உன்னை புடிக்கலைன்னு சொன்னாருன்னு.. எனக்கு தெரிஞ்சு போச்சு..!!”

“ஏ..ஏன்..??” ப்ரியா குழப்பமும் கவலையுமாய் கேட்டாள்.

“அந்த தம்பி வேற ஒரு பொண்ணை விரும்புதும்மா.. அது அவங்க வீட்டுக்கு இன்னும் தெரியாது.. அதான் எல்லா கொழப்பமும்..!!”

“அ..அதெப்படி உங்களுக்கு தெரியும்..??”

“அந்த தம்பிதான்மா சொல்லுச்சு..!! அவங்க அண்ணன்ட்ட நம்பர் வாங்கி.. இப்போத்தான் அந்த தம்பிட்ட பேசினேன்..!!”

“இப்போவா..????”

“ஆமாம்மா.. பேசி முடிச்சுட்டு உடனே உனக்கு ஃபோன் அடிக்கிறேன்..!!”

வரதராஜன் சொல்ல, ப்ரியா கண்களை சுருக்கிக்கொண்டு, தனது நெற்றியை பற்றி பிசைந்தாள். ‘அப்படியானால்.. சற்றுமுன் அசோக்கிற்கு வந்த கால் அப்பாவிடம் இருந்தா..?? அவன் ப்ளேடு, பெருசு என்று சொன்னதெல்லாம் அப்பாவைத்தானா..??’

“ந..நல்லா தெளிவா கேட்டீங்களா டாடி..?? வேற ஒரு பொண்ணை லவ் பண்றேன்னு சொன்னானா..??” ப்ரியா நெஞ்சில் வேதனையும் குரலில் நப்பாசையுமாய் கேட்டாள்.

“ஆமாம்மா.. தெளிவா கேட்டுட்டுத்தான் சொல்றேன்.. என்ன காரணம்னு தெரிஞ்சுக்கத்தான அந்த தம்பிக்கு நான் ஃபோனே பண்ணினேன்.. அதை தெளிவா கேக்காம இருப்பனா..?? அந்தப்பொண்ணை கூட நான் பாத்திருக்கேன்மா..!!”

“எ..எந்தப் பொண்ணை..??” ப்ரியா உதறலாக கேட்டாள்.

“அந்த தம்பி விரும்புற பொண்ணைம்மா..!! அன்னைக்கு அவர்கூட ஒரு பொண்ணு பைக்ல வந்தான்னு சொன்னேன்ல.. அந்தப் பொண்ணுதான்..!! அந்தப்பொண்ணைத்தான் அவர் ரொம்ப நாளா விரும்புறாராம்..!!”

வரதராஜன் சொல்லிக்கொண்டே போக.. ப்ரியா இப்போது அப்படியே நொறுங்கிப் போனாள்..!! அவளுடைய இதயத்தில் யாரோ ஈட்டியை பாய்ச்சியது மாதிரி இருந்தது அவளுக்கு..!! கால்கள் வலுவிழந்து போனவளாய் பொத்தென்று சேரில் அமர்ந்தாள்.

‘அவ்வளவுதானா..?? அவன் எனக்கு இல்லையா..?? வேறொருத்திக்கு சொந்தமானவனா என் அசோக்..?? எல்லாம் முடிந்து போயிற்றா..?? என் காதலுக்கு நேர்ந்த கதி இதுதானா..?? இத்தனை நாளாய் கண்ட கனவெல்லாம் கானல் நீரா..??’

ப்ரியாவுக்கு கண்களில் பொசுக்கென்று கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. உதடுகளை கடித்து அவள் கட்டுப்படுத்த முயன்றும், உடைப்பெடுத்து கன்னம் வழியாக ஓடியது. அவள் அவசரமாய் அந்த கண்ணீரை தன் புஜத்தில் துடைத்துக் கொண்டாள். மூக்கை ஒருமுறை உறிஞ்சிக் கொண்டாள்.

அசோக்கின் மீது இப்போது அவளுக்கு வேறொரு விதமான கோவமும் திடீரென வந்தது. ‘இத்தனை நாளாய் யாரையோ காதலித்துக் கொண்டு.. அந்த விஷயத்தை கூட என்னிடம் சொல்லவில்லையே அவன்..?? என்னை காதலியாக நினைக்கத்தான் அவனுக்கு மனதில்லை என்றால்.. நல்ல தோழியாக கூட அவன் என்னை கருதவில்லை போலிருக்கிறதே..?? அப்படி கருதியிருந்தால் அவனுடைய காதலை பற்றி என்னிடம் மறைத்திருப்பானா..?? எனக்கு தெரியாமல் எந்த பெண்ணை அப்படி ரகசியமாக காதலிக்கிறான்..?? ஒருவேளை.. ஒருவேளை..’ ப்ரியாவின் மனதில் ஒரு குறுகுறுப்பு எழ,

“அ..அந்தப்பொண்ணு எப்படி இருந்தா டாடி..??” தன் அழுகையை மறைத்துக்கொண்டு மெல்லிய குரலில் கேட்டாள்.

“நல்லா குண்டா இருந்ததும்மா.. அவரை மாமா மாமான்னு கூப்பிட்டுச்சு..!!”

‘சந்தேகமே இல்லை.. செண்பகமேதான்..!! காதலிக்கிறார்களா இருவரும்..?? மாமா மாமா என்று அவள் அவனிடம் குழையும்போதே எனக்கு புரிந்திருக்க வேண்டும்..!! ச்சே.. எவ்வளவு ஏமாளியாக இருந்து விட்டேன்..??’ ப்ரியா அவ்வாறு வேதனையாக நினைத்துக் கொண்டிருக்கும்போதே, வரதராஜன் ஒரு பெருமூச்சுடன் சொன்னார்.

“ஹ்ஹ்ம்ம்ம்.. ஒருவேளை நீ அந்த தம்பியை சந்திச்சு பேச நெனச்சிருக்கியோன்னு தோணுச்சுமா ப்ரியா.. தேவை இல்லாம இன்னொரு கொழப்பம் வரவேணாம்னுதான் இப்போ அவசரமா உனக்கு ஃபோன் பண்ணுனேன்..!!”

‘ஆமாம்.. அப்பா சொல்வதும் சரிதான்.. அவனுடைய மனதை அறிந்து கொள்ளாமல் என்னுடைய காதலை அவனிடம் சொல்ல துணிந்து விட்டேன்..!! நல்லவேளை.. அவனிடம் எதுவும் சொல்லவில்லை.. நான் வெட்கமில்லாமல் ‘ஐ லவ் யூ..’ என்று அவனிடம் வழியப்போய்.. அதைக்கேட்டு அவன் கைகொட்டி சிரித்திருந்தால்..?? என் நிலைமை எவ்வளவு அவமானகரமானதாக இருந்திருக்கும்.. கேவலம்தானே..?? இல்லை.. இந்த விஷயம் அசோக்கிற்கு தெரியவே கூடாது..!!’ Pundai Nakki Edukkum Latest Tamil Sex Stories

– தொடரும்

What did you think of this story??

Comments

Scroll To Top