நெஞ்சோடு கலந்திடு – 27

(NENJODU KALANTHIDU 27)

Raja 2014-01-28 Comments

“இங்க பாரு.. இது பொண்ணுக பசங்ககிட்ட சொல்லுற டயலாக்.. ஒரு பொண்ணு இன்னொரு பொண்ணுகிட்ட சொல்லக் கூடாது.. நம்பர் சொல்லு.. எனக்கு அவர்கிட்ட பேசணும்..”

“எதுக்குன்னு சொல்லு.. தர்றேன்..”

“ம்ம்.. நீதான் லவ் பண்ணலைன்னு சொல்றியே.. அவர் வேற கொஞ்சம் ஸ்மார்ட்டா இருக்குறாரு.. நான் அவருக்கு ரூட்டு போடலாம்னுதான்..!!”

“ஓஹோ..?? ஏன்.. ஒருநாள் பேசுனதுலையே உன்னை மயக்கிட்டானா..?” இப்போது திவ்யாவின் குரலில் ஒருவித ஏரிச்சல் ஏறியிருந்தது.

“அப்படியே வச்சுக்கோ.. நீ நம்பர் குடு..!!”

“குடுக்க முடியாது.. போடீ..!!” திவ்யா கத்தினாள்.

“ஹாஹா.. இதுக்காகத்தான் நம்பர் கேட்டேன்..”

“எதுக்காக..?”

“நீ டென்ஷன் ஆகுறியான்னு பாக்குறதுக்காக..!! அப்பா.. அவரை லவ் பண்ணப் போறேன்னு சொன்னதும் எப்படி உனக்கு கோவம் வருது..!! சரி சரி.. கோச்சுக்காத கண்ணு.. எனக்கு அவரை லவ் பண்ற மாதிரிலாம் ஒன்னும் ஐடியா இல்ல..!! நீயே வச்சுக்கோ உன் ஆளை..!! நான்லாம் போட்டிக்கு வர மாட்டேன்..!!” அஞ்சு கிண்டலாக சொல்ல, திவ்யா டென்ஷனானாள்.

“இப்போ நீ என்கிட்டே செருப்படி வாங்காம போக மாட்டேன்னு நெனைக்கிறேன்..!!”

“ஏண்டி..??”

“பின்ன.. லூசு மாதிரி உளறிட்டு இருந்தா..?? உனக்கு அவன் நம்பர்தான வேணும்..? சொல்றேன் நோட் பண்ணிக்கோ.. அவனை லவ் பண்ணிக்கோ.. மேரேஜ் பண்ணிக்கோ.. என்ன எழவை வேணா பண்ணிக்கோ.. எனக்கு ஒரு கவலையும் இல்ல..!!”

“ஏய்.. சீரியஸா சொல்றியா..?”

“பார்த்தா எப்படி தெரியுது உனக்கு..?”

“அப்போ நெஜமாவே நீ அவரை லவ் பண்ணலையா..?”

“பண்ணலை பண்ணலை..!! அவன்தான் என்னை லவ் பண்றான்.. அதுகூட எனக்கு போன வாரந்தான் தெரியும்..!! அவனால நானே செம கடுப்புல இருக்கேன்.. போயிடு..!!”

“அப்புறம் யாருக்காக இங்க வெயிட் பண்ணிட்டு இருக்குற..?”

“நான் வேற ஒருத்தரை லவ் பண்றேன்.. அவருக்காகத்தான் இப்போ வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.. போதுமா..?”

“வேற ஒருத்தரா..? அது யாரு..?”

“அவர் பேர் திவாகர்..!!”

“அவர் எப்படி பழக்கம்..?”

“ஏன்..? ஆன்லைன் மூலமா..!!”

“எத்தனை நாளா அவரை உனக்கு தெரியும்..?”

“ம்ம்ம்.. ஒரு ரெண்டு மூணு மாசமா..?”

“அசோக்கோட லவ்வை உதறி எறிஞ்சுட்டு.. அந்த திவாகரைத்தான் நீ கல்யாணம் செய்துக்க போறியா..?”

“ஆ..ஆமாம்..” திவ்யா சொல்லி முடிக்கும் முன்பே,

“போடீ லூசு..!!” அஞ்சு ஆத்திரமாக கத்தினாள்.

“ஏண்டி கத்துற..?”

“அப்புறம் என்ன..? அசோக் பத்தி நீயே எங்கிட்ட எவ்வளவு சொல்லிருக்குற.. சின்ன வயசுல இருந்து உன் மேல எவ்வளவு பிரியம் வச்சிருக்கார்னு..!! அவரை விட.. நேத்து வந்த அந்த திவாகர்தான் உனக்கு பெருசா போயிட்டானா..? உன்னை மாதிரி தப்பா முடிவெடுக்குற ஒருசில பொண்ணுகளாதான் எல்லா பொண்ணுகளுக்குமே கெட்ட பேர்டி.. பொண்ணுகன்னாலே நல்லவனை நம்ப மாட்டாளுகன்னு..!!”

“இங்க பாரு அஞ்சு.. நீ விஷயம் தெரியாம பேசுற.. அசோக் பத்தி உனக்கு முழுசா தெரியாது..!!”

“ஆமாம்.. அவரைப் பத்தி எனக்கு முழுசா தெரியாதுதான்.. அவர்கூட ஒரே ஒருநாள்தான் பேசிருக்கேன்.. கொஞ்ச நேரந்தான் ஸ்பென்ட் பண்ணிருக்கேன்..!! ஆனா அந்த கொஞ்ச நேரத்துலையே.. அவர் உன் மேல எவ்வளவு லவ் வச்சிருக்கார்னு என்னால முழுசா புரிஞ்சுக்க முடிஞ்சது..!!”

“அ..அப்படி என்ன பண்ணிட்டான்..?” இப்போது திவ்யாவின் குரலில் ஒருவித கலக்கமும், ஆர்வமும் பிறந்திருந்தது.

“ஹாஹா.. உனக்கு எப்படி தெரியும்..? நீதான் மயக்கம் போட்டு மட்டையாயிட்டியே..? நாங்க ரெண்டு பேருந்தான உன்னை அள்ளிக் கொண்டு போயி வீட்ல போட்டோம்..!!”

“எ..என்ன பண்ணான்னு சொல்லு..”

“எதுக்கு..?? இப்போ தெரிஞ்சு என்ன பண்ணப் போற..?? நான் சொல்லிட்டா மட்டும் உனக்கு புரியப் போகுதா..?? அதான்.. எனக்கு ஒரு இருபது நிமிஷத்துல புரிஞ்ச விஷயம்.. உனக்கு இருபது வருஷமா புரியலைன்னு சொல்றியே..?? இப்போ மட்டும் புரிஞ்சுக்கவா போற..??”

“ப்ளீஸ்டி..” திவ்யா கெஞ்சலாக கேட்க,

“ம்ம்ம்.. அழுதாரு.. துடிச்சாரு.. கண்ணீர் விட்டாரு..!! போதுமா..??” அஞ்சு அலறினாள்.

“………………..”

“அன்னைக்கு அந்த மனுஷன் துடிச்ச துடிப்பு.. உனக்கு என்னாச்சோன்ற அந்த பயம்.. அழுகையை அடக்க முடியாம அவர் பட்ட வேதனை..!! சத்தியமா அதெல்லாம் நான் சினிமாலயும், கதைலயும்தாண்டி பாத்திருக்கேன்..!! ஒரு பொண்ணுக்காக இப்படி துடிக்கிற ஆம்பளை கிடைக்கிறது ரொம்ப கஷ்டம் திவ்யா..!! எனக்குலாம் இப்படி ஒருத்தன் கெடைச்சா.. காலம் பூரா அவன் காலடில விழுந்து கெடப்பேன்..!!”

“………………..” அஞ்சு பேச பேச திவ்யா அமைதியாகவே இருந்தாள்.

“சரி விடு.. எனக்கெதுக்கு அதெல்லாம்..? உன் மேல அவ்ளோ பிரியமா இருந்த அவரையே நீ தூக்கி எறிஞ்சுட்ட.. நான் சொல்றதையா கேட்கப் போற..? இது உன் வாழ்க்கை.. உன் இஷ்டம்..!! நான் கெளம்புறேன்..!!”

சொன்ன அஞ்சு விடுவிடுவென சென்று கார்க்கதவை திறந்து உள்ளே புகுந்து கொண்டாள். காரை ஸ்டார்ட் செய்தாள். கியர் மாற்றி கிளம்பும் முன், திவ்யாவை ஒருமுறை ஏறிட்டு மெல்லிய குரலில் சொன்னாள்.

“நீ ஏதோ பெரிய தப்பு பண்றேன்னு எனக்கு தோணுது திவ்யா.. பாத்துக்கோ.. டேக் கேர்..!!”

கார் சீறிக்கொண்டு கிளம்பியது. திவ்யாவுக்கோ அசோக்கின் நினைவுகள் மனதுக்குள் பீறிக்கொண்டு கிளம்பியது. சிறுவயதில் இருந்து அசோக்குடனான நினைவுகள் ஒன்றன் பின் ஒன்றாய் அவளுடைய மனதில் வந்து மோத, அவளையும் அறியாமல் கண்களில் நீர் துளிர்க்க ஆரம்பித்தது. பிரம்மை பிடித்தவள் போல நின்று கொண்டிருந்தவள், ஒரு சில வினாடிகள் கழித்துதான் தன் எதிரே வந்து நின்ற திவாகரின் காரை கவனித்தாள். உடனே கண்களில் வழிந்த நீரை அவசரமாய் துடைத்துக் கொண்டாள். உதடுகளில் ஒரு செயற்கை புன்னகையை வரவழைத்துக் கொண்டாள்.

அத்தியாயம் 28

அசோக் அந்த ஷாப்பிங் மால் முன்பாக பைக்கை நிறுத்தி பார்க் செய்தான். கண்ணுக்கு கொடுத்திருந்த குளிர் கண்ணாடியை எடுத்து ஷர்ட் பாக்கெட்டில் செருகிக் கொண்டான். ஹெல்மட் கழற்றி கையில் எடுத்துக்கொண்டு கலைந்திருந்த தலையை, பைக்கின் மிரர் பார்த்து சரி செய்துகொண்டான். நடந்து அந்த ஷாப்பின் மாலுக்குள் நுழைந்தான்.

ஐந்தடுக்குகள் கொண்ட அந்த ஷாப்பிங் மாலின் முதல் தளத்தில்தான் அவன் செல்ல வேண்டிய ஷாப் இருந்தது. வாட்ச் சேல்ஸ் அண்ட் ரிப்பேர் ஷாப்..!! அலுத்துப்போயோ, ஆற்றல் தீர்ந்து போயோ ஓடாமல் சுணங்கும் கடிகார முட்களை மீண்டும் ஓட வைக்கும் இடம்..!!

போன வருடம் அசோக்கின் பிறந்த நாளுக்கு திவ்யா ஒரு வாட்ச் பரிசளித்திருந்தாள். அவளுடைய பாக்கெட் மணி எல்லாம் சேகரித்து வைத்து, ஐந்தாயிரம் ரூபாய்க்கு அந்த வாட்சை வாங்கி அசோக்கிற்கு பரிசளித்திருந்தாள். அசோக்கிற்கு அந்த வாட்ச் என்றால் உயிர்..!! என்னதான் இருந்தாலும் அவனுடைய உயிர்க்காதலி அவனுக்கு அளித்த அன்பு பரிசல்லவா..?

திவ்யா அசோக்கை விட்டு பிரிந்துவிட்டது அந்த வாட்சுக்கும் தெரிந்து விட்டதோ என்னவோ..? இரண்டு நாட்களுக்கு முன்பாக.. ஓடமாட்டேன் என்று அடம் பிடித்து, இரண்டு முட்களும் அசையாமல் ஓரிடத்தில் நின்றுகொண்டன. பேட்டரி மாற்றிப் பார்த்தும் புண்ணியம் இல்லை..!! நேற்றுதான் அந்த கடையில் வந்து சரி செய்வதற்காக கொடுத்திருந்தான். இன்று மாலை வந்து திரும்ப வாங்கிக்க சொல்லியிருந்தான் அந்த கடையின் முதலாளி..!!

முதல் தளத்தை அடைந்து அந்தக் கடையை நெருங்கிய அசோக், கடும் எரிச்சலுக்கு உள்ளானான். காரணம்.. கடை பூட்டப்பட்டு கிடந்ததுதான்..!! ‘ப்ச்.. இதுக்காகத்தான் ஆபீஸ்ல இருந்து சீக்கிரம் கிளம்பி வந்தனா.. ? முடியாட்டா ஏன் கமிட் பண்ணிக்கிறானுக..? நாட்டுல ஏன் எவனுக்குமே பொறுப்புன்றதே இருக்க மாட்டேன்னுது..?’ சலிப்படைந்தவனின் கண்களில் கடைக்கு வெளியே, சிவப்பு பெயிண்டில் எழுதப்பட்டிருந்த அந்த வாசகம் தென்பட்டது.

“கடை உரிமையாளர் சி.சிட்டி பாபு. தொடர்பு கொள்ள – XXXXXXXXXX”

‘சிட்டி பாபுவாம் சிட்டி பாபு.. சரியான சீட்டிங் பாபு..’ மனதுக்குள் அந்த கடை உரிமையாளரை திட்டிய அசோக், செல்போன் எடுத்து கதவில் எழுதியிருந்த அந்த நம்பருக்கு கால் செய்தான். நான்கைந்து ரிங் சென்றதும் கால் பிக்கப் செய்யப்பட்டது. அடுத்த முனையில் கசகசாவென்று ஒரே இரைச்சல்.

“ஹலோ..”

“ஹலோ..”

“நான் பேசுறது கேக்குதா ஸார்..?”

“கேக்குதுப்பா.. சொல்லு..”

“என் பேர் அசோக்.. ஒரு வாட்ச் ஒன்னு.. ரிப்பேர் பண்ண கொடுத்திருந்தேன்.. நேத்து..”

“சரி.. அதுக்கு என்ன இப்போ..?”

“என்ன இப்போவா..? இன்னைக்கு ஈவினிங் வந்து வாங்கிக்க சொல்லிருந்தீங்க ஸார்.. வந்து பாத்தா கடை அடைச்சு கெடக்கு..”

“ஏன் தம்பி.. இன்னைக்குனா இன்னைக்கேவா வந்து நிப்ப..? போயிட்டு நாளைக்கு வா.. கடை இன்னைக்கு லீவு..!!”

Comments

Scroll To Top