ஐ ஹேட் யூ பட் – 20

(Sex Stories In Tamil - I Hate You But 20)

Raja 2013-10-18 Comments

Sex Stories In Tamil – “ம்ம்ம்.. இடியாப்பம்லாம் கெடைக்கும்.. போதுமா..??”

“ம்ம்ம்..!!” செண்பகத்தின் முகத்தில் இப்போது ஒரு திருப்தியும், பிரகாசமும்.

“அவ்வளவுதானா.. வேற ஏதாவது தெரிஞ்சுக்கனுமா..??” அசோக் சலிப்பாகவே கேட்டான்.

“ம்ம்ம்.. ம்ம்ம்.. ம்ம்ம்..” என்று நெற்றியை தேய்த்தவாறு கொஞ்ச நேரம் யோசித்த செண்பகம், அப்புறம்

“ஆங்.. டைமிங்லாம் எப்படி..??” என்று கேட்டாள் பட்டென.

“டைமிங்லாம் ஒன்னும் கெடயாது.. எல்லா நேரமும் கேஃப்டீரியா தெறந்திருக்கும்.. நீ நெனச்ச நேரத்துக்கு போய் கொட்டிக்கலாம்..!!”

“ஐயோ.. நான் ஆபீஸ் டைமிங் கேட்டேன் மாமா..!!”

என்று அவசரமாய் சொன்னவள், ‘ஹஹா.. ஹஹா.. ஹஹா..’ என டூத்பேஸ்ட் விளம்பரத்தில் வரும் மாடல் போல லூசுத்தனமாய் சிரித்தாள். அசோக் அவளையே சில வினாடிகள் முறைப்பாக பார்த்தான். அப்புறம் தீர்ந்து போன சிகரெட்டை கீழே போட்டு ஷூ காலால் நசுக்கியவாறே..

“கெளம்பலாமா..??” என்றான் இறுக்கமான குரலில்.

இருவரும் மீண்டும் பைக்கில் கிளம்பினார்கள். மிதமான வேகத்தில் அசோக் பைக்கை செலுத்த, செண்பகம் ஒரு கையால் அவனுடைய தோளை பிடித்துக்கொண்டு சாலையோர கடைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தாள். வண்டி சில்க்போர்டை தாண்டி வலது பக்கம் திரும்பிய போது, அசோக்கின் புஜத்தை சொறிந்தாள்.

“என்ன..??” அசோக் பைக்கை செலுத்திக்கொண்டே கேட்டான்.

“ரெஸ்யூம் பிரிண்ட் அவுட் எடுக்கணும் மாமா.. ஏதாவது கடைல நிறுத்துங்க..!!”

அடுத்த ஐந்தாவது நிமிடம்.. இருவரும் அந்த புக் ஷாப்பில் இருந்தார்கள்..!! அசோக் புத்தகங்களை எல்லாம் வேடிக்கை பார்த்தவாறு நின்றிருக்க.. செண்பகம் எடுத்த பிரிண்ட் அவுட்டையும், ஜெராக்சையும் ஃபைலுக்குள் திணித்துக் கொண்டிருந்தாள்..!!

“முடிஞ்சதா..??” என்று கேட்ட அசோக்கிடம்,

“இவங்களுக்கு ஒரு ட்வென்டி ஃபைவ் ரூபீஸ் குடுங்க மாமா..!!”

“ஏன்.. உன்கிட்ட இல்லையா..??”

“எங்கிட்ட சேன்ச் இல்ல மாமா.. தவுசண்ட் ரூபீசா இருக்கு..!!”

a-3

அசோக் வேண்டா வெறுப்பாக பர்ஸ் திறந்து பணம் எடுத்துக் கொடுத்தான். ‘ஃபைவ் ரூபீஸ் சேன்ச் இல்லா..’ என்ற கடைக்காரனிடம், ‘பரவால.. சாக்லேட் எடுத்துக்குறேன்..!!’ என்றுவிட்டு பாட்டில் திறந்து சாக்லேட் அள்ளிக்கொண்டாள். அதை அப்படியே தனது பேக்கில் போட்டு.. ஜிப்பை இழுத்து மூடியவள்.. தன்னையே முறைத்துக்கொண்டிருந்த அசோக்கிடம் திரும்பி.. ‘கெளம்பலாமா மாமா..??’ என்றாள் புன்னகையுடன்.

மீண்டும் பைக் பயணம்..!! வண்டி எலக்ட்ரானிக் சிட்டி நோக்கி பறந்துகொண்டிருந்தது. செண்பகம் ஏதேதோ கேள்விகள் கேட்டுக்கொண்டே வர, அசோக் அசுவாரசியமாய் பதில் சொல்லிக்கொண்டே வந்தான். ஆபீஸ் வளாகத்தை நெருங்கும்போது செண்பகம் மீண்டும் அசோக்கின் புஜத்தை சொறிந்தாள்.

“என்னடி…??” இப்போது அசோக்கின் குரல் சற்றே எரிச்சலாக ஒலித்தது.

“ஒரு சின்ன ரெக்வஸ்ட் மாமா..!!”

“என்ன..??”

“அங்க வந்து.. மத்தவங்க முன்னாடி.. என்னை செம்புன்னு கூப்பிடாதீங்க.. ப்ளீஸ்..!! செண்பகம்னு கூப்பிடுங்க..!!”

அவள் கெஞ்சலாக சொல்ல, அசோக் இப்போது அவசரமாய் ப்ரேக் அடித்து வண்டியை நிறுத்தினான். ஹெல்மட் கண்ணாடியை மேலே ஏற்றிவிட்டு, அவளை திரும்பி பார்த்தான். செண்பகம் எதுவும் புரியாமல் திருதிருவென விழித்தாள்.

“என்ன மாமா..??” என்றாள் குழப்பமாய்.

“எறங்குடி..!!” அசோக்கின் குரலில் ஒருவித எரிச்சல்.

“எதுக்கு..??”

“எறங்குன்னு சொல்றேன்ல.. எறங்கு..!!”

அசோக் கத்தவும் செண்பகம் பதறிப்போய் பைக்கில் இருந்து கீழே இறங்கிக் கொண்டாள். சிறிது தூரத்தில் தெரிந்த அவர்களது ஆபீஸ் வளாகத்தை நோக்கி சுட்டு விரலை நீட்டி அசோக் சொன்னான்.

“அந்தா தெரியுது பாரு.. அதுதான் எங்க ஆபீஸ்..!! இங்க இருந்து நடந்தே போ.. கேட்ல செக்யூரிட்டி இருப்பாங்க.. உன் இன்டர்வ்யூ கால் லெட்டர் காட்டினா.. அவங்களே உன்னை கைட் பண்ணுவாங்க.. சரியா..?? ‘உனக்கு தெரிஞ்சவங்க யாராவது இங்க வொர்க் பண்றாங்களா’ன்னு யாராவது உன்னை கேட்டாங்கன்னு வச்சுக்கோ.. தப்பி தவறி கூட என் பேரை சொல்லிடாத.. புரியுதா..??”

“ஏன்..??” செண்பகம் நெற்றியை சுருக்கியவாறு கேட்டாள்.

“ப்ச்.. கேள்விலாம் கேட்க கூடாது..!! சொல்லாத.. அவ்வளவுதான்..!!” அசோக் முறைப்பாக சொன்னான்.

“சரி.. சொல்லலை..!!”

“ஹ்ம்ம்.. குட்..!! நான் கெளம்பட்டுமா..??” கேட்டுவிட்டு அசோக் கிக்கரை உதைக்க போக,

“அப்போ நெக்ஸ்ட் எப்போ மீட் பண்றது..??” செண்பகம் அவசரமாய் கேட்டாள்.

“இன்டர்வ்யூ முடிஞ்சதும்.. இதே எடத்துல வந்து நின்னுட்டு கால் பண்ணு..!!”

“ஹையோ.. இன்டர்வ்யூ மூணு நாலு ரவுண்ட் இருக்கே.. ஈவினிங் ஆயிடுமே..!!”

“ஆகட்டும்.. என்ன இப்போ..??”

“இல்ல.. மதிய சாப்பாட்டுக்கு.. பணம்..!!”

“உன்கிட்ட இல்லையா..??”

“தவுசண்ட் ரூபீசா இருக்கு மாமா..!!”

செண்பகம் அப்பாவியாய் சொல்லிவிட்டு வழக்கம்போல கட்டை விரலை கடித்தாள். அசோக் அவளையே ஓரிரு வினாடிகள் எரிச்சலாய் பார்த்துவிட்டு, பாக்கெட் தடவி ஒரு ஐம்பது ரூபாயை எடுத்து அவளிடம் நீட்டினான். வெறுப்புடனே கிக்கரை உதைத்து, ஆக்சிலரேட்டரை முறுக்கினான்.

அத்தியாயம் 12

a-4

அன்று மாலை ஐந்து மணி வாக்கில்.. அசோக்கின் மொபைலுக்கு செண்பகம் கால் செய்தாள்..!! ப்ரியா தந்திருந்த ஒரு வேலையை திருப்தி இல்லாமல் செய்துகொண்டிருந்த அசோக், ஏற்கனவே எரிச்சலில் இருந்தான்..!! அந்த எரிச்சலுடன்தான் கால் பிக் செய்து காதில் வைத்தான்..!!

“ம்ம்.. சொல்லு செம்பு..!!” என்றான் இறுக்கமாக.

“இன்டர்வ்யூ முடிஞ்சது மாமா..!!” செண்பகத்தின் குரலிலோ ஒரு உற்சாகம்.

“என்னாச்சு.. ஊத்திக்கிச்சா..??” அசோக் ஆசையாக கேட்டான்.

“இல்ல இல்ல.. வேலை கெடைச்சிடுச்சு..!!” அவள் இவன் ஆசைக்கு ஆப்பு வைத்தாள்.

“கிழிஞ்சது..!! இவனுகளுக்கு அறிவுன்றதே கெடயாது..!!” அசோக் இப்போது சலிப்பாக சொன்னான்.

“யாரை சொல்றீங்க..??”

“எங்க கம்பனிகாரனுகளுக்குத்தான்..!! ஏற்கனவே ஒரு தடவை.. அழகா இருக்குன்றதுக்காக ஒரு மக்கு பீஸுக்கு வேலைக்கு சேர்த்துத்தான்.. அது இப்போ அழிச்சாட்டியம் பண்ணிட்டு அலையுது..!! ஹ்ம்ம்.. திருந்தவே மாட்டேன்றானுக.. திரும்ப திரும்ப அதே தப்பு பண்றானுக..!!”

அசோக் செண்பகத்தை மக்கு என்று மறைமுகமாக கிண்டல் செய்தான். அது எல்லாம் அவள் மண்டைக்குள் ஏறவில்லை. ஆனால் அவன் சொன்னதில் இருந்த இன்னொரு விஷயத்தை மட்டும் ஷார்ப்பாக கவனித்தவளாய்..

“ஹை.. அப்போ நான் அழகா இருக்கேன்னு சொல்றீங்களா மாமா..??” என்றாள் அசட்டுத்தனமாய்.

“ம்க்கும்.. அதை மட்டும் கரெக்டா கவனி.. நீயும் திருந்தவே மாட்டடி..!! சரி.. எப்போ ஜாயின் பண்ண சொல்லிருக்காங்க..??”

“கரண்ட் கம்பனில ஒன் மன்த் நோட்டீஸ் பீரியட் இருக்குன்னு சொன்னேன்.. அதான்.. ஒன் மன்த் கழிச்சு ஜாயின் பண்ண சொல்லிருக்காங்க..!!”

“ஹ்ம்ம்..எவ்ளோ தந்தாங்க..??”

“ஃபோர் பாயின்ட் டூ..!!”

“நல்ல பேக்கஜ்தான்..!! ம்ம்ம்.. என்ன பண்ணிட்டு இருக்குற இப்போ..??”

“நீங்க சொன்ன இடத்துல நிக்கிறேன் மாமா..!! கெளம்பி வர்றீங்களா..?”

“இங்க பாரு செம்பு.. மாமாக்கு கொஞ்சம் வேலை இருக்கு.. நான் கெளம்ப லேட் ஆகும்..!! நீ என்ன பண்ற.. அப்டியே ஒரு ஆட்டோ புடிச்சு வீட்டுக்கு ஓடிப் போயிடுற..!! ஓகேவா..??” அசோக் கூலாக சொல்ல,

“எ..என்ன மாமா.. இ..இப்படி சொல்றீங்க..??” அடுத்த முனையில் செண்பகம் பதறினாள்.

“ஏன்.. என்னாச்சு..??”

“நான் எப்படி ஆட்டோல போறது..??”

“ஏன்.. போனா என்ன..??”

“எனக்கு கன்னடா தெரியாதே..!!”

“ஓ.. தெலுங்கு மட்டும் தெரியுமாக்கும்..?? எனக்குந்தான் கன்னடாலாம் தெரியாது..!!”

“ப்ச்.. வெளையாடாதீங்க மாமா..!! எங்கிட்ட ஆட்டோக்கு குடுக்குறதுக்கு சேன்ச் கூட இல்லல.. தவுசண்ட் ருபீசா இருக்குது..!! ப்ளீஸ் மாமா.. நீங்களே வந்து வீட்டுல விட்டுடுங்க.. எனக்கு பயமா இருக்கு மாமா.. ப்ளீஸ்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்..!!”

இன்னும் சிறிது நேரம் விட்டிருந்தால், செண்பகம் அழுதே இருப்பாள். அந்த அளவிற்கு உடைந்து போன குரலில் அசோக்கிடம் கெஞ்சினாள். அவளுடைய கெஞ்சலை அசோக் சிறிது நேரம் தலையை சொறிந்தவாறு கேட்டுக்கொண்டிருந்தான். அப்புறம்..

“ஏய்.. ஏய்.. ச்சீய்.. அழாத..!! நானே கொண்டுபோய் விட்டுத் தொலைக்கிறேன்.. அங்கேயே நில்லு.. இதோ வந்துடறேன்..!!” என்று வேண்டா வெறுப்பாக சொன்னான்.

“ஹ்ம்ம்.. தேங்க்ஸ் மாமா..!!”

செண்பகம் நிம்மதியாக சொன்னாள். காலை கட் செய்து பேகில் போட்டுக்கொண்டாள். தனியாக நின்றவாறு அங்கும் இங்கும் பராக்கு பார்த்துக் கொண்டிருந்தவள் முன்பு, ஒரு பத்து நிமிடத்திற்கெல்லாம் அந்த பைக் சரக்கென்று வந்து நின்றது. வந்ததுமே செண்பகத்தின் மீது எரிந்து விழுந்தான் அசோக்.

“அனகோண்டா சைசுக்கு இருக்குற.. ஆட்டோல போக பயமா இருக்குன்னு அழற..!! உனக்குலாம் வேலை குடுத்திருக்கானுக பாரு..?? எந்த மக்குப்பையன்டி உன்னை இன்டர்வ்யூ பண்ணினது..??”

“ஹாஹா.. பையன் இல்ல மாமா.. பொண்ணு..!!” செண்பகம் சொல்லிவிட்டு பற்களை காட்டி இளித்தாள்.

“சரி.. மக்குப்பொண்ணு..!!”

“ஐயோ.. பாவம் மாமா அவங்க.. திட்டாதிங்க..!!”

Comments

Scroll To Top