மதன மோக ரூப சுந்தரி – 3

(Tamil Hot Sex Stories - Madhana Moga Roopa Sundari 3)

Raja 2014-08-16 Comments

Tamil Hot Sex Stories – நான் அறைக்குள் நுழைந்தேன். அந்தக்கால படங்களில் மன்னர்கள் வசிக்கும் அறை என்று செட் போட்டிருப்பார்களே..? அந்த மாதிரி பிரம்மாண்டமாய் இருந்தது. சுவரெங்கும் பெரிது பெரிதாய் ஓவியங்கள் மாட்டப் பட்டிருந்தன. ஒரே ஒரு மெழுகுவர்த்தி மட்டும் எரிந்து கொண்டிருந்தது. நான் ஓரமாக கிடந்த அந்த கட்டிலில் ஏறி, மெத்தையில் படுத்துக் கொண்டேன். ஜம்மென்று இருந்தது. நான் மிகவும் களைப்பாக உணர்ந்தேன். கழுத்து வேறு இன்னும் வலித்துக் கொண்டு இருந்தது. கைவைத்து கொஞ்சம் மசாஜ் செய்துவிட்டுக் கொண்டே தூங்கிப் போனேன்.

16

எவ்வளவு நேரம் தூங்கினேன் என்று தெரியவில்லை. என்னுடைய நெற்றியை யாரோ தடவுவது மாதிரி இருக்க, பட்டென்று விழித்துக் கொண்டேன். சுந்தரிதான் எனக்கு அருகில் அமர்ந்து என் நெற்றியை தடவி விட்டுக் கொண்டிருந்தாள். அந்த மங்கலான மெழுகுவத்தி வெளிச்சத்தில் அவளுடைய முகம், ஒருவித அமானுஷ்யத்தனமாய் காட்சியளித்தது. நான் நடுங்கும் குரலில் அவளை அழைத்தேன்.

“சுந்தரி…!!”

நான் சொன்னது அவள் காதில் விழுந்த மாதிரியே தெரியவில்லை. ஒருமாதிரி நிலைகுத்திய பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள். குளிரில் நடுங்குபவள் மாதிரி எதோ முணுமுணுத்துக் கொண்டே இருந்தாள். நான் காதை கூர்மையாக்கி என்ன சொல்கிறாள் என்று கவனித்தேன்.

“வந்துட்டியா அசோக்.. வந்துட்டியா..? எனக்கு குடுத்த கஷ்டம்லாம் போதும்னு.. என்னை தேடி வந்துட்டியா..? ராஜா..!! இனி உன்னை எங்கேயும் போக விடமாட்டேன்..!! என் கண்ணா…!! என்கூடதான் இருக்கணும்..!! சரியா..? சரின்னு சொல்லு…!! என்னை விட்டு போக மாட்டேன்னு சொல்லு..!! ப்ளீஸ்…!! ப்ளீஸ்…!!”

“சுந்தரி… சுந்தரி…!! கமான்.. வேக்கப்…!!”

நான் எழுந்து அவளுடைய தோளைப் பிடித்து அசைக்க, அவள் பட்டென்று என்னை இறுக்கி அணைத்துக் கொண்டாள். என் முகமெல்லாம் ‘இச்.. இச்.. இச்..’ என்று முத்தம் கொடுக்க ஆரம்பித்தாள். நான் அதை சுத்தமாக எதிர்பார்க்கவில்லை. திணறிப் போனேன். என்ன இது..? என்ன நடக்கிறது இங்கே..? எனக்கு ஒருவித குழப்பமாகவும், பயமாகவும் இருந்தாலும் அவளுடைய அணைப்பில் இருந்து விலகிக் கொள்ளவேண்டும் என்று மட்டும் தோன்றவே இல்லை.

அவளுடய மார்புப்பந்துகள் என் நெஞ்சில் மெத்தென்று அழுந்தி நசுங்கின. அவளுடய கைகள் என்னை வளைத்து, என் முதுகை பிடித்து பிசைந்தன. அவள் சூடியிருந்த மல்லிகையில் இருந்து எழுந்த இனிய நறுமணம், என் மூக்கை துளைத்து எதுவோ செய்தது. அவளுடைய உதடுகள் ஈரமாய் என் முகம் எங்கும் மாறி மாறி ஒத்தடம் கொடுக்க, நான் மயங்கி.. கிறங்கிப் போனேன். மெல்ல மெல்ல என் கைகளால் சுந்தரியை வளைத்துக் கொண்டேன். என் மார்போடு சேர்த்து இறுக்கினேன். அவளுடைய காதோரமாய் கிசுகிசுப்பான குரலில் சொன்னேன்.

“சுந்தரி…!! நான் உங்க அசோக் இல்லை…!!”

“ம்ம்.. தெரியும்..!!” அவள் என்னை மேலும் இறுக்கிக் கொண்டே சொன்னாள். நான் மெல்ல அவளுடைய அணைப்பில் இருந்து விலகியபடியே கேட்டேன்.

“அப்புறம் ஏன் இப்படி நடந்துக்குறீங்க..?”

“எனக்கு தெரியலை..!! இத்தனை நாளா என் அசோக் வரமாட்டானானு ஏங்கிட்டு இருந்தேன்.. இப்போ நீங்க வந்ததும்.. என் தவிப்புலாம் தீர்ந்து போன மாதிரி பீல் பண்ணுறேன்..!! நீங்க அந்த அசோக் இல்லைன்னு எனக்கு புரியுது.. ஆனா நான் தேடிட்டு இருந்தது நீங்கதான்.. நீங்கதான்னு.. என் மனசு கெடந்து துடிக்குது..!! என்னையே என்னால கண்ட்ரோல் பண்ண முடியலை..!! ப்ளீஸ் அசோக்… என்னை தடுக்காதீங்க.. ப்ளீஸ்..!!”

சொல்லிவிட்டு அவள் என்னை மீண்டும் இறுக்கி அணைத்துக் கொண்டாள். இப்போது என் மார்பெங்கும் முத்தம் கொடுத்து நிறைத்தாள். நான் செயலிழந்தவன் ஆனேன். அவளுடைய களங்கமில்லாத அன்பு என்னை சிலிர்க்க வைத்தது. என்னை ஆசையாக முத்தமிடும் அந்த பேரழகியையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்புறம் அவளுடய கூந்தலை மென்மையாக கோதி விட்டேன். நெற்றியில் ஈரமாய் முத்தமிட்டேன்.

கொஞ்ச நேரம் என்னுடைய மார்பில் முத்தம் கொடுத்துக் கொண்டிருந்த சுந்தரி, பின் என்னை நிமிர்ந்து பார்த்து அழகாக புன்னகைத்தாள். நானும் புன்னகைக்கவும் காதலாக என் கழுத்தில் மாலை போல கைகளை போட்டு வளைத்துக் கொண்டாள். ஏற்கனவே வலித்துக் கொண்டிருந்த கழுத்து, அவள் கையை போட்டதும் சுரீர்ர்.. என்று பயங்கரமாக வலித்தது. ‘ஆஆஹ்ஹ்ஹ…’ என்று வேதனையாக முனகினேன்.

17

“என்னாச்சு அசோக்.. ம்ம்…?” சுந்தரி பதறிப்போய் கேட்டாள்.

“கழுத்து வலிக்குது சுந்தரி..!!”

“எங்க காட்டுங்க…!!”

சுந்தரி என் கழுத்தை கவனமாக.. கவலையாக பார்த்தாள், ஒரு டாக்டர் உற்று நோக்குவது மாதிரி. மெல்ல தடவிக் கொடுத்தாள். நான் அண்ணாந்து பார்த்து அவளுக்கு கழுத்தை காட்டியவாறே சொன்னேன்.

“ஆக்சிடன்ட் ஆனப்போ கழுத்து சுளுக்கிருக்கும்னு நெனைக்கிறேன்..!!”

“ம்ம்.. ரொம்ப வலிக்குதா..?” சுந்தரியின் குரலில் ஒரு அதீத காதல் கலந்திருந்தது.

“ஆமாம்..!!”

“என் ராஜாவுக்கு கழுத்து வலிக்குதா..? ம்ம்ம்…? நான் கிஸ் பண்றேன்.. எல்லாம் சரியாப் போயிடும்..!!”

சுந்தரி சொல்லிக்கொண்டே என் கழுத்தில் ‘இச்.. இச்.. இச்..’ என்று தன் உதடுகளை ஒற்றி எடுக்க ஆரம்பித்தாள். அதுவரை திகுதிகுவென தீப்பிடித்தமாதிரி எரிந்து கொண்டிருந்த கழுத்து, அவளுடைய ஈரமான உதடுகள் படவும் ஜில்லென்று இருந்தது. ஒரே நிமிஷத்தில் என் கழுத்து வலி காணாமல் போனமாதிரி ஒரு உணர்வு.

நான் அவளுடைய முகத்தை பிடித்து நிமிர்த்தினேன். எழில் கொஞ்சும் அவள் முகத்தை ஆசையாக பார்த்தேன். காதலாக கேட்டேன்.

“கிஸ் பண்ணவா சுந்தரி..?” நான் கேட்டதும் அவள் புன்னகைத்தாள்.

“இன்னும் எங்கிட்ட கேக்கணுமா..?”

நான் குனிந்தேன். மெல்ல என்னுடைய உதடுகளால், அவளுடைய உதடுகளை தேடிப் பிடித்தேன். சரியாக பொருத்திக் கொண்டேன். நிதானமாக, ஆசையாக, மென்மையாக சுவைத்தேன். சுந்தரியும் ஆர்வமாக என்னுடன் ஒத்துழைத்தாள். அவள் இதழில் இருந்து கசிந்த நீர், தேன் மாதிரி இனித்தது. அதை அப்படியே உறிஞ்சிக் குடித்தேன். அந்த தேன் தந்த போதை கிர்ரென்று என் உச்சந்தலையில் ஏறுவது மாதிரி இருந்தது. கிறங்கிப் போனேன்.

போதையுடன் நான் அவளுடைய இதழ்களை சுவைத்துக் கொண்டிருக்க, அவளும் தன் உதடுகளை வசதியாக பிளந்து காட்டியபடி இருந்தாள். என் மார்பை தேய்த்துக் கொடுத்தாள். உலகை மறந்து நான் சுந்தரியை அவ்வாறு முத்தமிட்டுக் கொண்டு இருக்கும்போதுதான், என் காதோரமாய் அந்த குரல் கேட்டது. இதயத்தை கத்தியால் கிழிக்கிற மாதிரி ஒரு வறண்டு போன குரல். ஒரு குழைந்தையின் ஏக்கமான குரல்.

“அம்மா…..!!!!!!!!!!!!”

எனக்கு திக்கென்று இருந்தது. பட்டென்று சுந்தரியின் உதட்டில் இருந்து வாயை எடுத்து திரும்பி பார்த்தேன். அங்கே.. அந்த மெல்லிய வெளிச்சத்தில்.. ஒரு குட்டிப்பெண் நின்றிருந்தாள். நான்கு வயது இருக்கும். பெரிய ஆண் அணியும் சட்டை ஒன்றை அங்கி மாதிரி அணிந்திருந்தாள். அவளுடைய முகம் ஒரு மாதிரி வெளிறிப் போயிருந்தது. கண்களில் பார்வை நிலைகுத்திப் போய் இருந்தது. தலை முடி சடை சடையாய்.. எண்ணையை பார்த்தே பல நாள் ஆனமாதிரி தோன்றியது.

“சுந்தரி… இது…!!” நான் பதற்றமான குரலில் கேட்டேன்.

“என் பொண்ணு அசோக்..!! மாயா.. வாடா கண்ணா..!!”

சுந்தரி சொல்லிவிட்டு அந்த குட்டிப்பெண்ணை நோக்கி கை நீட்ட, அந்த மாயா மெல்ல நடந்து தன் அம்மாவிடம் வந்தாள். என்னை வித்தியாசமாக ஒரு பார்வை பார்த்தாள். ஒருவித பயப்பார்வை அது. என் முகத்தை மிரட்சியாக பார்த்தாள். அம்மாவின் இடுப்பை இறுக்கமாக கட்டிக் கொண்டாள். ஒருமுறை என் முகத்தை நிமிர்ந்து பார்த்தவள், மீண்டும் சுந்தரியின் மடியில் முகத்தை புதைத்துக் கொண்டாள்.

“என்னடா கண்ணா.. தூக்கம் வரலையா..?” சுந்தரி மாயாவின் தலைமுடியை வருடிக் கொடுத்தபடி கேட்டாள்.

“இல்லைம்மா..!! நீ எங்க போன..?”

“அம்மா இங்கதாண்டா இருக்கேன்..!! உன்னை விட்டுட்டு எங்க போவேன்..?”

இப்போது அந்த குட்டிப்பெண் மெல்ல திரும்பி என்னை பார்த்தாள். விழிகளை விரித்து.. மிரண்டு போன மாதிரி..

“இது யாரு…?” என்று என்னை நோக்கி கை நீட்டினாள்.

18

“இது… இது.. நான் அடிக்கடி சொல்வேன்ல..? அந்த அசோக் அங்கிள்.. ரொம்ப நாளுக்கப்புறம் ஊர்ல இருந்து வந்திருக்காங்க..!!”

“எனக்கு பயமா இருக்கும்மா..!!” அந்த குட்டிப்பெண்ணின் பயப்பார்வை இதயத்தை பிசைவது மாதிரி இருந்தது.

“ச்சே.. ச்சே..!! அங்கிள் ரொம்ப நல்லவங்கடா..!! அப்டிலாம் பயப்படக் கூடாது.. சரியா..?”

“என்னை விட்டுட்டு நீ இந்த அங்கிளோட போயிடுவியா..?”

Comments

Scroll To Top