மலரே என்னிடம் மயங்காதே – 17

(Tamil Hot Sex Stories - Malarae Ennidam Mayangathae 17)

Raja 2014-02-27 Comments

“ஏன் மலர் சாப்பிடலை..?” நான் இப்போது மலரிடம் திரும்பி கேட்டேன்.

“கா..காலைல இருந்து வயிறு சரியில்ல.. அதான்…”

“ப்ச்.. சும்மா சொல்லாத.. மொதல்ல நீ சாப்பிடு.. அப்புறம் ஸ்டேஷன் கெளம்பலாம்..”

“இல்லைத்தான்.. இப்போ எனக்கு பசிக்கலை.. என்னை கம்பெல் பண்ணாதீங்க ப்ளீஸ்..!! நான் ட்ரெயின்ல போய் ஏதாவது சாப்பிட்டுக்குறேன்..!!”

அப்புறம் நான் அவளை வற்புறுத்தவில்லை.. விட்டுவிட்டேன்..!!

ஒரு பத்து நிமிடத்திலேயே நாங்கள் வீட்டை விட்டு கிளம்பினோம். தோளில் ஒரு சின்ன ஹேன்ட் பேக்கும், கையில் ஒரு பெரிய ட்ராவல் பேக்குடனும் மலர் வந்தாள். அபியை கையில் வாங்கிக்கொண்டு, ஒரு நிமிடத்திற்கும் மேலாக.. அவனுக்கு முத்தமாக கொடுத்து கொஞ்சினாள். பின்பு கண்கள் கலங்க அவனை ஷ்யாமின் அம்மாவிடம் தூக்கி கொடுக்க, அவள் அவனை வாங்கிக்கொண்டு அவர்கள் வீட்டை நோக்கி நடந்தாள். அபி கண்ணில் இருந்து மறையும் வரை அவனையே பார்த்துக் கொண்டிருந்த மலர், அப்புறம் விழி நீரை சுண்டிவிட்டு, என்னிடம் திரும்பி,

“போகலாம்த்தான்..!!” என்றாள்.

இருவரும் கேட் திறந்து வெளியேறினோம். காரை நெருங்கியபோதுதான் சாவியை வீட்டுக்குள்ளேயே விட்டு வந்ததை உணர்ந்தேன். மலரிடம் சொல்லிவிட்டு, மீண்டும் கதவு திறந்து வீட்டுக்குள் நுழைந்தேன். டீப்பாயில் இருந்த கார்சாவியை எடுத்துக் கொண்டேன். நடுவீட்டில் நின்று வீட்டை ஒருமுறை சுற்றிப் பார்த்தேன்.

வீடு நிறைய எக்கச்சக்கமாய் பொருட்கள் இறைந்து கிடந்தும், எல்லா இடங்களிலுமே ஒரு வெறுமை நிறைந்திருந்தை என்னால் உணர முடிந்தது. இந்த சோபாவில் இனிமேல் எனக்கு எதிராக அமர்ந்து, மலர் பேச மாட்டாள். இந்த டிவியில் இனிமேல் தினமும் காலை ‘இந்த நாள் இனிய நாள்’ பார்க்க மலர் இருக்க மாட்டாள். என் மகனை மார்மீது போட்டுக்கொண்டு, அந்த ஊஞ்சலில் அமர்ந்து, இனி ஆட மாட்டாள். பால்கனியில்.. தொட்டியில் தொங்கும் மலர்ச்செடிகள்.. அவள் நீரூற்றாமல் வாடிப்போக வாய்ப்பிருக்கிறது..!! ஆனந்தம் என்பது இனி இந்த வீட்டை நெருங்கவே தயங்கப் போகிறது..!!

3

கதவை தாழிட்டு வெளியே வந்தேன். மலர் கையில் வைத்திருந்த பேக்கை வாங்கி டிக்கியில் போட்டேன். காரில் ஏறி ஸ்டார்ட் செய்தேன். மலர் எனக்கு அருகே அமர்ந்து கதவை அடைத்துக்கொண்டதும், கியர் மாற்றி ஆக்சிலரேட்டரில் கால் வைத்து அழுத்தினேன்.

“ஸ்டேஷனுக்கு அ..அப்பா வர்றதா சொல்லிருந்தாரு.. நீ..நீங்க வந்திருக்கீங்க..?”

“எனக்கு உன்னை பாக்கணும் போல இருந்தது.. அதான் வந்தேன்..!! ஏன் வரக் கூடாதா..?”

சொல்லிவிட்டு நான் அவளை கூர்மையாக பார்க்க, அவள் இப்போது தன் பார்வையை வேறுபக்கமாக திருப்பிக் கொண்டாள். சாலையை வெறித்தாள்.

“நான் திரும்ப திரும்ப கேக்குறேன்னு நெனைக்காத மலர்.. அ..அங்க போறதுல உனக்கு எதுவும் பிரச்னை இல்லையே..?”

“என்ன பிரச்னை.. அதெல்லாம் ஒண்ணுல்ல..”

“சந்தோஷமாத்தான போற..?”

“சந்தோஷமாத்தான் போறேன்..!!”

“ம்ம்ம்.. வே..வேற ஏதாவது எங்கிட்ட சொல்லனும்னு நெனைக்கிறியா..?” என் குரல் இப்போது சற்றே ஏக்கமாக ஒலித்தது.

“இல்ல.. ஒன்னும் இல்ல..”

அவள் உறுதியான குரலில் சொல்ல, நான் ஆக்சிலரேட்டரை அழுத்தமாக மிதித்தேன். கார் ஹை ஸ்பீடில் சீறியது..!! இதயம் தீப்பற்றிக் கொண்ட மாதிரி திகுதிகுவென எரிய.. உள்ளத்தில் எழுந்த உணர்சிக் குமுறலை.. நான் உதடுகள் கடித்து அடக்கிக் கொண்டேன்..!! சாலையில் கவனம் செலுத்தி காரை செலுத்த.. நிஜமாகவே சிரமமாக இருந்தது..!!

ஒரு அரைமணி நேரத்தில் ஸ்டேஷனை அடைந்தோம். ஸ்டேஷன் வழக்கத்துக்கு மாறாக காட்சியளித்தது. ஸ்டேஷனுக்கு வெளியே திரள்திரளாய் ஜனங்கள் நிரம்பி வழிந்தன. கொட்டு மேளங்களும் வாத்தியங்களும் ‘திடும்.. திடும்..’ என முழங்கிக் கொண்டிருந்தன. வெடிச்சத்தம் வேறு அவ்வப்போது காதைப் பிளந்துகொண்டிருந்தது. நான் ஏற்கனவே இருந்த மனநிலையை அது மேலும் மோசமாக்கியது..!!

காரை எங்கே பார்க் செய்வது என்று தெரியவில்லை. கார் பார்க்கிங் ஏரியா முழுவதும் எக்கச்சக்கமாய் மக்கள் கும்பல்..!! நான் கார்க்கண்ணாடியை இறக்கி, அந்த கும்பலை கண்ட்ரோல் செய்து கொண்டிருந்த ஒரு ட்ராபிக் கான்ஸ்டபிளிடம் கேட்டேன்.

“என்னாச்சு ஸார்.. ஏன் இவ்வளவு கூட்டம்..?”

“சுவாமி மருதூர் சிற்றம்பல அடிகளார் தெரியுமா ஸார்.. பெரிய ஆன்மீகவாதி..”

“ஆமாம்..”

“அவர் ஒரு மாசம் அமெரிக்கா முழுக்க சுற்றுப் பயணம் போயிட்டு.. இந்து மதத்தை பற்றி சொற்பொழிவாற்றிட்டு.. ரெண்டு நாள் முன்னாடிதான் மும்பைல வந்து இறங்கினார்.. இன்னைக்கு ட்ரெயின் மூலமா சென்னை திரும்ப வர்றார்.. அவரை வரவேற்கத்தான் இவ்வளவு பக்தகோடிகள்..!!” அந்த கான்ஸ்டபிள் பொறுமையாக சொன்னதிலிருந்தே அவருக்கும் அந்த அடிகளாரை மிகவும் பிடிக்கும் என்று தோன்றியது.

“அது சரி.. இப்படி கும்பலா இருந்தா.. ஸ்டேஷன்குள்ள எப்படி போறது..?”

“இன்னும் பத்து நிமிஷத்துக்குத்தான் இந்த கும்பல் இருக்கும் ஸார்.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க..!! இல்லன்னா.. அங்க பாருங்க.. அங்க ஒரு சப்வே இருக்கு.. அது வழியா போனா.. ஸ்டேஷன்க்குள்ள போயிடலாம்..!!” அவர் தூரமாக கை காட்டினார்.

“ஓஹோ..? காரை எங்க பார்க் பண்றது..?”

“அந்த சப்வேக்கு பக்கத்துலையே.. ஒரு பார்க்கிங் ஏரியா இருக்கும் பாருங்க..!!”

“ஓ..!! தேங்க்ஸ் ஸார்..!!”

நான் கண்ணாடியை மேலே ஏற்றிவிட்டு காரை கிளப்பினேன். அந்த கான்ஸ்டபிள் கை காட்டிய இடத்தை அடைந்து, காரை பார்க் செய்தேன். டிக்கி திறந்து பேகை எடுத்துக் கொண்டேன். மலர் அந்த பேகை வாங்க கை நீட்டினாள்.

“குடுங்கத்தான்.. நான் வச்சுக்குறேன்..!!”

“பரவால விடு.. நான் கொண்டு வர்றேன்..!!”

ஸ்டேஷன் வாசலில் அவ்வளவு கும்பல் இருந்தது. ஆனால் இந்த இடம் ஆள் ஆர்வமே இல்லாமல் காட்சியளித்தது. இருவரும் அந்த சப்வே நோக்கி நடந்தோம்.

“ட்ரெயின் ஏறுனதும் ஏதாவது சாப்பிட்டுரு மலர்.. சரியா..?”

“ம்ம்.. சரித்தான்..”

“உன் அக்கவுன்ட்டுக்கு கொஞ்சம் பணம் ட்ரான்ஸ்பர் பண்ணிருக்கேன்.. வேலை கெடைக்கிறவரை அதை செலவுக்கு வச்சுக்கோ..!! எப்போ பணம் தேவைப்பட்டாலும்.. எனக்கு தெரியப்படுத்து.. ஓகேவா..?”

“ம்ம்..”

– தொடரும் Bra Kalattum Tamil Hot Sex Stories

What did you think of this story??

Comments

Scroll To Top