முடிவுக்கு வந்தேன்

(Tamil Hot Stories - Mudivukku Vanthen)

Raja 2014-08-01 Comments

அன்று ஆரம்பித்ததுதான்.. தினம் காலை கேட்டில் நிற்போம்.. மதுமிதா அதான் அந்த “நியூட்ரிக்ஷன் அன்ட் டயட்டிக்ஸ்” டிபார்ட்மென்ட் புது லெக்சரர் வர வரைதான் நான் அங்கு இருப்பேன். அவள் வந்த்ததும் அவள் கூடவே ஆபீஸ் ரூம் வரை வந்து அவள் அட்டென்டன்ஸ் சைன் பன்னிவிட்டு அவளது டிபார்ட்மென்ட் செல்லும் போது கூடவே சென்று விட்டு விட்டு பின்தான் கேன்டீன் செல்வேன். சான்ஸ் கிடைக்கும் போதெல்லாம் அவளிடம் ஏதாவதுப் பேசுவேன். என் எண்ணத்தைப் புரிந்துக் கொண்ட அவள் என்னைப் பார்த்ததும் விலகி விடுவாள். காலேஜ் முடிந்ததும் 1.00 மணிக்கு 2ஆம் நம்பர் பஸ்ஸில்தான் அவள் செல்வாள்.. அவளை பஸ் ஏத்தி விட்டுத்தான் ஹாஸ்டல் வருவேன். இப்படியாக என் மதுமிதா முயற்சித் தொடர்ந்தது.

அன்று எங்கள் காலெஜில் புதிய ஸ்டூடன்ஸ்க்கு வெல்கம் கொடுக்கும் விழா. கோவையின் அப்போதைய முன்னனி இசைக்குழு ” சேரன் ஆர்கெஸ்ட்ரா” வினரின் கச்சேரி.. ஆடிட்டோரியத்தில் எல்லோரும் இருந்தோம். மதுமிதா 5 ஆவது வரிசையில் அமர்ந்திருந்தாள். சிலப் புதுப் பாடல்களுக்குப் பின் “ரோஜா மலரே ராஜக்குமாரி” பாடல் பாடப்பட்ட்து. அதைப் பாடிய ஆண் குரல் எங்கள் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தவன். நான் மதுமிதாவையேப் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்தப் பாடலை தன் கண்களை மூடி ரசித்துக் கொண்டிருந்தாள். பாடல் முடிந்ததும் நான் மேடையேறி மைக்கில் பாடலைப் பாடிய சேகரைப் பாராட்டிவிட்டு “நாம் எல்லோரும் இந்தப் பாட்டை ரசிச்சோம் ஆனால் நம்மில் ஒருவர் மட்டும் தவறிப் போய் தூங்கி விட்டார்..அது வேறு யாரும் இல்லை நம்ம லெக்சரர் மதுமிதா மேடம்தான் அவருக்காக மீண்டும் இதேப் பாடலை பாடவேண்டும்” என்றேன். மொத்த கல்லூரி மானவர்களும் கைத்தட்டினார்கள். பின் நான் “மன்னிக்கனும் மதுமிதா மேடம் தூங்கவில்லை கண்மூடி அழகாக ரசித்தார்கள் அதற்காக ஒன்ஸ்மோர் வெண்டும்” என்றேன். பலத்த கரகோசத்துடன் அதேப் பாடல் மீண்டும் பாடப் பட்டது.

அன்று விழா முடிந்ததும் வழக்கம்போல மதுமிதாவை பஸ்ஸ்டாப்பில் ஸீ ஆ·ப் பன்ன நின்றிருந்தேன். என்னைப் பார்த்ததும் நேராக என்னிடம் வந்தவள்.. “மிஸ்டர் சித்தார்த் நான் உங்களுக்கு என்னத் தப்பு பன்னினேன் ஏன் என்னை ஓட ஓட விரட்டுகிறீர்கள்..ப்ளீஸ் இன்னையோட என்னை விட்டு விடுங்கள்.. நான் என்னை அறியாமல் ஏதாவது தப்பு செய்திருந்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இன்னொரு முறை என்னிடம் இப்படி பிஹேவ் பன்னினால் நான் ரிஸைன் பன்னிட்டுப் போவதைத் தவிர வேற வழியில்லை” என்றாள்.

எனக்கு பயங்கர அதிர்ச்சி.. எதுவுமே பேசமுடியலை.. அவளுக்கு எந்த பதிலும் சொல்லாமல் ஹாஸ்டல் நோக்கி நடக்க ஆரம்பித்தேன். அதன் பின் 15 நாட்களுக்கு நான் மதுமிதாவின் கண்களிலெயேப் படவில்லை..

ஒருநாள் நாங்கள் நன்பர்கள் எல்லோரும் புதிதாக ரிலீஸ் ஆகியிருந்த “சாமரம்” எனும் மலையாளப் படம் சென்றோம். பிரதாப் போத்தன், ஜரினாவஹாப் நடித்தது. ப்ரதாப் காலெஜ் ஸ்டூடன்ட் ஜரினா லெக்சரர்.. இருவரும் ப்ரதாப் ஜரினாவைக் காதலிப்பதாகக் கதை.. அது என்னை மிகவும் பாதித்தது.. படம் முஇந்தும் 2,3 நாள் அதே நினைவாக இருந்தது.

பின் ஒரு முறை என்எஸ்எஸ் க்காக பக்கத்தில் உள்ள கிராமத்தை சுத்தம் செய்ய எங்கள் கல்லூரி மாணவர்கள் சென்றோம். அங்கு மதுமிதாவும் வந்திருந்தாள். அவளை கிடத் தட்ட 20 நாட்களாக நான் பார்க்கவேயில்லை. மதியம் சாப்பிடும் போது என் அருகில் வந்தாள். “என்ன சித்தார்த்.. என்னை கலாட்டா பன்ன வேண்டாம் என்றுதானே சொன்னேன்.. என் பக்கமேத் திரும்ப மாட்டேன் என்கிறீர்கள்.. கோபமா” என்றாள். நான் ” அதெல்லாம் ஒன்றுமில்லை மேடம் நான் சும்மா விளையாட்டா ஏதோ செய்யப் போய் அது உங்களை ஹர்ட் பன்னிடுச்சென்னு வருத்தம்.. த்ட்ஸ் ஆல்” என்று சொன்ன்னேன்.ஆனால் இந்த 20 நாளில் நான் என்னையறியாமல் மதுமிதாவை நேசிக்கிறேனோ என எனக்குள் பயம்.. காதல் கத்தரிக்காய் எல்லாம் நம்பாத வயது.. கொஞ்ச நேரத்தில் அவளை சீண்டிப் பாக்கலாமே என ” மேடம் சாமரம் ன்னு ஒரு மூவி வந்திருக்கு பாத்தீங்களா.. சூப்பர்ப் மூவி.. மிஸ் பன்னாதீங்க” என்றேன். மாலை கலையும் நேரத்தில் அவளிடம் மீண்டும் சாமரம் பாக்கச் சொல்லிவிட்டு பைக்கில் நான் ஹாஸ்டல் வந்துவிட்டேன்.

3 நாட்கள் கழித்து நாங்கள் ஆடிட்டோரியம் படியில் உட்கார்ந்து தம் அடித்துக் கொண்டிருந்தோம். திடீரென மதுமிதா அங்கு வந்தாள். ” சித்தார்த் ஒரு நிமிடம் வரமுடியுமா?” என்றாள். நான் அவளுடன் கேன்டீன் சென்றேன். அங்கு யாரும் இல்லாத 5 ஆவது ஹாலுக்குச் சென்று ஒரு ஓரமாக அமர்ந்தாள். என்னையும் உட்காரச் சொன்னாள். நேராக என்னிடம் ” உன் மனசில என்ன நினைச்சுக்கிட்டு இருக்க.. ஆர் யூ இன் லவ் வித் மீ? சொல்லு.. நான் உன்னைவிட வயசில பெரியவ.. நீ ஸ்டூடன்ட் நான் லெக்சரர்.. எதை வச்சு இப்படி ஒரு எண்ணம் உனக்கு வந்தது..” என்றாள்.

நான் பதிலுக்கு ” ஹலோ நான் தானே லவ் பன்றேன் பதிலுக்கு நீங்களும் என்னை லவ் பன்னனும்னு சொன்னேனா? உங்களுக்கு தொல்லைத் தரக்கூடாதுன்னுதான் நான் விலகி வந்துட்டேன்ல.. இப்பா நீங்களாதான் என்னைக் கூப்பிட்டுப் பேசுறீங்க.. எஸ் ஐ லவ் யூ.. அன்ட் ஐ வில் பி லவ்விங் யூ எவெர்.. டில் தெ என்ட் ஆ·ப் மை லை·ப் ” என்றேன்.

அவள் கண்கள் கலங்க ” சித்தார்த் ப்ளீஸ் லிசன் மீ.. நான் ஒரு விடோ.. எம்.எஸ் சி படிக்கும்போதே எனக்கு மேரேஜ் ஆகிடுச்சு.. கல்யானம் ஆன 2 மாதத்திலேயே புருசனை பலிக் கொடுத்துட்டு விதவையா இருக்கேன். என்னால இன்னொரு ஆள நினச்சுக் கூடப் பாக்க முடியாது.. என் துக்கத்தைக் கரைச்சுக்கத்தான் நான் வேலைக்கு வரேன்.. ஆனால் இங்கேயும் இப்படியா?.. என்னை ஆண்டவன் ஏன் இப்படி சோதிக்கிறான்னு தெரியலை.. ப்ளீஸ் லீவ் மீ.. என்னை விட்டுடு” என நா தழுத்தழுக்கச் சொன்னாள்.

நான் பயங்கர அதிர்ச்சியடைந்தேன்.. இவள் வாழ்க்கை இத்தனை சோகமானதா.. அந்த சோகம்தான் அவள் கண்களில் எப்போதும் தெரிவதா?.. அந்த கணமே முடிவுக்கு வந்தேன்.. எப்படியாவது மதுமிதாவின் மனதை மாற்றி அவளை வாழ்க்கைத் துனையாகக் கொள்ள வேண்டும் என்று. Kunju Sappum Tamil Hot Stories

What did you think of this story??

Comments

Scroll To Top