கண்ணாமூச்சி ரே ரே – 63

(Tamil Kama Stories - Kannamoochi Rae Rae 63)

Raja 2014-07-21 Comments

Tamil Kama Stories – தங்கள் அறையின் முகம் பார்க்கும் கண்ணாடியை பார்த்து ஏமாந்துபோய் நின்றாள்.. பிறகு திடீரென ஒரு ஞாபகம் வர, அறையைவிட்டு வெளியே ஓடிவந்தாள்.. பரபரப்பாய் படியிறங்கினாள்.. பச்சோந்திகள் நெளிந்த ஒரு படியை தாவிக்குதித்து தரையில் விழுந்து புரண்டாள்..!!

“ஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹா..!!!!!!!”

16

வீட்டு தரையோடு அடங்கியிருந்த இருந்த நிலவறைக்கதவை திறந்தாள்..!!

“ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்…..!!!!!”

மரஏணியில் கால்பதித்து அவள் கீழிறங்க.. பக்கவாட்டில் இறங்கி, அவளை முந்திக்கொண்டு உள்ளே ஓடியது அந்த காட்டுப்புலி..!!

யானைத் தந்தங்கள் பதிக்கப்பட்ட அந்த ஓவல் ஷேப் நிலைக்கண்ணாடியில் டார்ச் வெளிச்சத்தை தெளித்தாள்.. தனக்கு அருகே நின்று, ‘க்க்கர்ர்ர்.. க்க்கர்ர்ர்..’ என உறுமிக்கொண்டிருக்கிற காட்டுப்புலியை கண்டுகொள்ளாமல், தூசுபடிந்த கண்ணாடியின் பரப்பில் எழுதப்பட்டிருந்த வாசகத்தை வாசித்தாள்..!!

“வெள்ளையாம் வெள்..” அவள் வாசித்துக் கொண்டிருக்கும்போதே, அறைக்குள அலறலாக ஒலித்தது தாமிராவின் பாடல்.

“வெள்ளையாம் வெள்ளைக்கொடம்.. தரையில விழுந்தா சல்லிக்கொடம்..!!! ஹாஹாஹாஹா..!!”

விடுகதையின் விடையை சட்டென கண்டுபிடித்த ஆதிரா.. மரஏணி நோக்கி ஓடினாள்.. நிலவறையில் இருந்து வெளிப்பட்டாள்.. கதவுக்கருகே நின்று ‘ஊஊஊஊஊஊஊ’வென்று ஊளையிட்ட ஓநாய்க்கு..

“ஆஆஆஆஆஆஆ..!!”

என ஒரு அலறலை மட்டும் உதிர்த்து உருண்டுவிட்டு, மீண்டும் எழுந்து ஓடினாள்..!!

அப்புறம் சிறிதுநேரம் ஆதிரா அவ்வாறுதான் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தாள்.. அவ்வப்போது வழியில் குறுக்கிடுகிற மிருகங்களை அலட்சியம் செய்தவாறு.. அலறலாய் வீட்டுக்குள் ஒலிக்கிற தாமிராவின் குரலுக்கு மிரண்டுகொண்டே.. கால்க்காயத்தில் ‘சுருக் சுருக்’கென்று கிளம்பிய வலியை கண்டுகொள்ளாமல்..!!

தங்கையுடன் சிறுவயதில் சிரித்து விளையாடிய புதையல்வேட்டை விளையாட்டு.. இப்போது ஆவியான அவளுடன் அதே விளையாட்டை மீண்டும் மிரட்டலாக விளையாடிக் கொண்டிருந்தாள்.. கணவனை கண்டுபிடித்துவிடுகிற வேகத்துடனும், வெறியுடனும்..!!

ரெஃப்ரிஜிரேட்டர் திறந்தாள்.. உள்ளே அலைஅலையாய் நெளிந்துகொண்டிருந்தன சில விஷப்பாம்புகள்.. உயிரை கையில் பிடித்துக்கொண்டு அந்த பாம்புகளுக்கு இடையே கையை நீட்டினாள்.. முட்டை அடுக்குகளுக்குள் செருகியிருந்த அந்த ஆட்டோஃக்ராப் புத்தகத்தை வெளியே உருவினாள்..!!

“வ்வ்வ்வ்விஷ்ஷ்ஷ்க்க்க்க்…!!”

சீறிய ஒரு கரியநிற பாம்பின் முகத்தில் கதவை அறைந்து சாத்தினாள்.. ஆட்டோஃக்ராப் புத்தகம் திறந்து அடுத்த குறிப்பை வாசித்தாள்.. வாசித்த அடுத்தநொடியே வீட்டுக்கு வெளியே ஓடினாள்..!!

கேட்டில் தொங்கிய தபால்பெட்டியை திறந்தாள்.. சடசடவென சிறகடித்து பறந்தது ஒரு சிட்டுக்குருவி.. உள்ளே ஜம்மென்று வீற்றிருந்தது அந்த மாத்ரியோஷ்கா பொம்மை..!! பரபரவென அந்த பொம்மையை திருகி திறந்தாள்.. அதனுள்ளே அடுத்த பொருளுக்கான புதிர் நிரம்பிய துண்டுச்சீட்டு..!! விடையை ஓரளவுக்கு அனுமானித்தவாறே வீட்டுக்குள் விரைந்தாள் ஆதிரா..!!

“மஞ்சத்தே படுத்துவாழ்ந்து மருவப்பார்பார்ப்பாள் தாசியல்ல.. வஞ்சியராய் மேல்புரண்டு வசியஞ்செய்வாள் வேசியல்ல..!!” – வீட்டுக்குள் தாமிராவின் குரல் எல்லா திசைகளிலும் எதிரொலித்துக் கொண்டிருந்தது..!!

படிக்கட்டுகளில் படபடவென ஏறி தங்கள் அறையை அடைந்தாள்.. படுக்கையில் கிடந்த தலையைணையை எடுத்து வீச.. அந்த புத்தகம் கிடைத்தது.. சிவப்பு எழுத்துக்களில் அதன் தலைப்பு..!!

“கண்ணாமூச்சி ரே ரே..!!”

அதன் பின்அட்டையில் இன்னொரு விடுகதை..!!

“வேலியில படர்ந்திருக்கும்..
வெள்ளையா பூ பூக்கும்..
கனியும் செவந்திருக்கும்..
கவிஞருக்கும் கைகொடுக்கும்..!!”

17

ஆதிரா சிலவினாடிகள் நெற்றியை தேய்த்தாள்.. அவளது தோள்ப்பட்டையில் வந்தமர்ந்து ‘க்காஆஆ.. க்காஆஆ..’வென காதுக்குள் இரைந்த காகத்தை, வெறுப்புடன் ஒரு அறை அறைந்து விரட்டினாள்..!! அதேநேரம் விடுகதைக்கு விடையும் அவளது மூளையில் பளிச்சிட.. படியிறங்கி ஹாலுக்கு ஓடினாள்.. அவளது பாதத்தை தொடர்ந்தே நெளிநெளியாய் நெளிந்து தாங்களும் கீழிறங்கின சில பாம்புகள்..!!

“கண்ணாமூச்சி ரே ரே.. கண்டுபுடி ரே ரே..!!”

“ரே ரே.. ரே ரே.. ரே ரே..!!”

ஹாலில் தாமிராவின் அகங்காரச் சிரிப்பும், அதன் எதிரொலிப்பும்..!!

“ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்…..!!!!!”

வீட்டுப் பின்புறக்கதவை திறந்தாள் ஆதிரா.. திறந்த வேகத்தில் கும்மிருட்டுக்குள் திடுதிடுவென ஓடினாள்.. வீட்டுக்குள்ளிருந்த விலங்குகளும், பறவைகளுமே இப்போது அவளை மொத்தமாய் பின்தொடர்ந்தன..!!

வீட்டின் பின்புறத்தில் உயரமாய் வளர்ந்திருந்தது அந்த நாவல்மரம்.. அதனருகே வேலியில் படர்ந்திருந்தது அந்த கோவைப்பழக்கொடி..!! மரத்தை நெருங்கிய ஆதிரா.. அந்த புதருக்குள் கைவிட்டு கிளற..

“ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்..!!”

புதருக்குள் இருந்து புற்றீசல் போல வெளிப்பட்டு, சரசரவென பறந்தோடின நூற்றுக்கணக்கான பட்டாம்பூச்சிகள்.. பலவித வண்ணங்களுடனும், கண்ணைப்பறிக்கும் அழகுடனுமான பட்டாம்பூச்சிகள்.. ஆதிராவின் முகத்தை மோதி, இறகுகளால் வருடிக்கொடுத்து, ஜிவ்வென்று பறந்து சென்றன அத்தனை பட்டம்பூச்சிகளும்..!! ஒருகணம் திகைத்துப்போன ஆதிரா.. அப்புறம் அந்தப் புதருக்குள் இருந்து கிளம்பிய ஒரு வெளிச்சக்கீற்றை கவனித்தாள்.. கஷ்டப்பட்டு கையை நீட்டி அந்தப்பொருளை வெளியே எடுத்தாள்..!!

செல்ஃபோன்.. ஆதிராவின் பழைய செல்ஃபோன்.. தாமிராவுடன் குழலாற்றில் தவறிவிழுந்த செல்ஃபோன்..!! ஒளிர்ந்துகொண்டிருந்த அதன் திரையில் பளிச்சிட்ட வாசகம்.. ஆதிராவுக்கு தாமிரா நியமித்த அடுத்த இலக்கிற்கான குறிப்பை வழங்கியது..!! அதை வாசித்து முடித்த ஆதிரா.. ஒரிருவினாடிகள் நெற்றியை சுருக்கியவாறு அப்படியே அமர்ந்திருந்தாள்.. விடையை தீவிரமாக யோசித்த அவளது மூளைக்குள் ஒரு பொறி தட்டுப்பட..

“சி..சிங்கம்.. சிங்கம்..” என்று தடுமாற்றமாய் முனுமுனுத்தாள். உடனே தொடர்ந்து,

“சிங்கமலை..!!” என்று தைரியமும், நம்பிக்கையுமாய் உரக்க கத்தினாள்.

ஆதிராவின் தேடுதல்வேட்டை மீண்டும் தீவிரமானது.. சிங்கமலைக்கு கொண்டுசெல்கிற அந்த குறுகலான மலைப்பாதையில் விர்ரென வேகமெடுத்து கிளம்பினாள்.. சுற்றிலும் அடரிருள் சூழ்ந்திருக்க, அதற்கிடையே டார்ச்லைட் வெளிச்சத்துடன் ஓடினாள்..!! அவளுடன் சேர்ந்தே விரைந்தன விலங்குப்படையும், பறவைக்கூட்டமும்..!! அவளது உச்சந்தலைக்கு மேலே காற்றில் மிதந்து மிதந்து நெளிந்து சென்றது தாமிராவின் ஆவியுருவம்..!! மலைச்சரிவில் நிலவிய மயான அமைதியை கிழித்துக்கொண்டு ஒலித்தது தாமிராவின் சிரிப்பொலி..!!

“ஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹா..!!!!!!!”

செருப்பு அணியாத ஆதிராவின் பட்டுப்பாதத்தை குத்திக்கிழித்தன பாதையில் கிடந்த பாறைக்கற்கள்.. கண்ணீர் வழிந்த அவளது தளிர்முகத்தை தடவிக்கீறின வழியில் வளர்ந்திருந்த முட்செடிகள்..!! வெட்டுக்காயத்தின் சுருக் சுருக்கென்ற வலியை, பற்கள் கடித்து பொறுத்துக்கொண்டு.. வேகவேகமாய் மலைச்சாலையில் மேலேறிக் கொண்டிருந்தாள் ஆதிரா..!! மழை இப்போது நின்றிருந்தாலும்.. அது விட்டுச்சென்றிருந்த ஈரம் இன்னும் பாதையில் தேங்கியிருந்தது.. நடந்துசென்ற ஆதிராவின் கால்களை வழுக்கச் செய்தது..!!

“ஆஆஆஆஆஆ..!!” அவ்வப்போது இடறி விழுந்து ஈனஸ்வரத்தில் கத்தினாள்.

18

ஒருவழியாக சிங்கமலையின் உச்சியை வந்தடைந்தாள்.. அவளுடன் வந்த மிருகங்களும், பறவைகளும் ஆங்காங்கே நகர்ந்து நின்றுகொண்டன.. தாமிராவின் உருவத்தை இப்போது காணவில்லை.. விலங்குகளுக்கு மத்தியில் தனியாளாய் தவிப்புடன் நின்றிருந்தாள் ஆதிரா..!! அவளுக்கு மூச்சிரைத்து மார்புகள் ஏறியிறங்கின.. நெஞ்சுக்கூடு காற்றுக்காக ஏங்கி பதறியது..!!

‘என்ன செய்வது இப்போது.. இங்கே எதற்கு என்னை அழைத்து வந்திருக்கிறாள்..??’

எதுவும் புரியாமல்.. வெண்ணிலாவின் வெளிச்சம் மட்டுமே படர்ந்திருந்த அந்த பிரதேசத்தை வெறிக்க வெறிக்க பார்த்தவாறு நின்றிருந்தாள்.. சற்றே தைரியம் பெற்றவளாய் தங்கையின் பெயரை சொல்லி அழைத்தாள்..!!

“தாமிராஆஆ.. தாமிராஆஆ..!!” – அவள் அவ்வாறு அழைத்துக் கொண்டிருக்கும்போதே,

“அக்காஆஆஆஆஆ..!!!” – இதயத்தை பிசைவது மாதிரி ஒலித்தது தாமிராவின் ஓலம்.

பதறிப்போன ஆதிரா, சப்தம் வந்த திசைப்பக்கமாக சற்றே நகர்ந்தாள்.. மலைவிளிம்பை அடைந்து கீழே வெளிச்சத்தை தெளித்தாள்..!! தாமிராவின் உருவம் இப்போது கண்ணுக்கு புலப்பட்டது.. மகிழம்பூ மரக்கிளைகளுக்குள் பின்னிக்கொண்டு கிடந்தாள் தாமிரா.. உயிர்துறக்கும் தருவாயில் உடன்பிறந்தவளை பார்த்து அழைத்தது போலவே, இப்போதும் இவளைநோக்கி கைநீட்டி பரிதாபமாக அழைத்தாள்..!!

“அக்காஆஆஆஆஆ..!!!”

தங்கையை அந்தநிலையில் பார்க்கவும், அவளது அந்த பரிதாபக்குரலை கேட்கவும்.. ஆதிராவுக்கு உடல் சில்லிட்டுப்போனது, அப்படியே அழுகை பீறிட்டு கிளம்பியது..!! கண்களில் இருந்து பொலபொலவென நீர்கொட்ட.. ‘ஓ’வென்று அழுது அரற்றியவாறே.. தங்கையை பார்த்து ஏக்கமாக கைநீட்டினாள்..!!

“தாமிராஆஆஆ..!!” என்று தவிப்புடன் அழைத்தாள். ஆனால் தாமிராவோ,

“ஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹா..!!!!!!!”

என்றொரு கேலிச்சிரிப்பை உதிர்த்துவிட்டு காற்றில் மாயமாய் மறைந்துபோனாள்..!! கண்ணில் உறைந்துபோன கண்ணீருடன், ஆதிரா மட்டும் இப்போது அந்த மலையுச்சியில் தனித்து நின்றிருந்தாள்..!!

“தாமிராஆஆ.. தாமிராஆஆ..!! எங்கடி இருக்குற..??”

“………………………………”

“வெளையாண்டது போதுண்டி.. அவரை எங்க வச்சிருக்குற.. சொல்லு..!!”

“………………………………”

ஆதிரா கெஞ்சினாள்.. தாமிராவிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.. சுற்றிலும் அடர்த்தியான நிசப்தம்..!! பனி படர்ந்த உயரமான மலைச்சிகரம்.. நிலவு வெளிச்சத்தில் நனைந்திருந்த காட்டுமரங்கள்.. வீசும் காற்றின் ‘விஷ்ஷ்ஷ்ஷ்’ என்ற ஓசை.. மலையடிவாரத்தில் ஓடுகிற குழலாற்றின் ‘சலசலசல’ சப்தம்.. அவ்வப்போது வாய்திறந்து கர்ஜித்த காட்டுப்புலி.. கையில் டார்ச்சுடன் ஒற்றையில் நிற்கிற ஆதிரா..!!

“கண்ணாமூச்சி ரே ரே.. கண்டுபுடி ரே ரே..!!”

“ரே ரே.. ரே ரே.. ரே ரே..!!”

திடீரென காட்டுமரங்களுக்குள் எதிரொலித்தது தாமிராவின் குரல்.. உடனே ஆதிராவின் மூளைக்குள் ஒரு பளிச்..!! முன்பொருமுறை அவள் கண்ட கனவில்.. தங்கையுடன் கண்ணாமூச்சி விளையாடி.. இதே சிங்கமலையை வந்தடைந்தது நினைவுக்கு வந்தது..!!

Comments

Scroll To Top