கண்ணாமூச்சி ரே ரே – 4

(Tamil New Sex Stories - Kannamoochi Rae Rae 4)

Raja 2014-05-04 Comments

Tamil New Sex Stories – பிறகு.. ப்ளவுசை மட்டும் தேடிப்பிடித்து அணிந்துகொண்டவள்.. அப்படியே எழுந்து சென்று குளியலறைக்குள் நுழைந்தாள்..!! குளித்து முடித்து வெளியே வந்து வேறு உடை அணிந்து கொண்டாள்.. டவல் சுற்றிய கூந்தலுடன் கதவை திறந்து ஹாலுக்குள் பிரவேசித்தாள்..!!

“ஓம் சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்.. ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே..!!”

10

சுப்ரபாதம் முடிந்து விஷ்ணு சஹஸ்ரநாமம் இப்போது வீட்டுக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது.. குமிழ் ஒன்றை திருகி எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் குரல்பருமனை சற்று குறைத்தாள்..!! பூஜையறைக்குள் நுழைந்து.. கைகள் கூப்பி.. கண்கள் மூடி.. கால்கள் மடக்கி அமர்ந்துகொண்டாள்..!!

‘பெருமாளே..!! இப்போ.. இந்த நிமிஷத்துல.. என் மனசுல இருக்குற நிம்மதியும் சந்தோஷமும்.. எப்போவும் எனக்கு வேணும்னு ஏக்கமா இருக்கு.. அதுக்கு நீதாம்ப்பா அருள் புரியணும்..!! மனசுல இருக்குற குழப்பங்களை தீர்த்து வை.. மஞ்சளும் குங்குமமும் எனக்கு நிலைக்க வை..!!’ – என்கிற ரீதியில் மனமுருக வேண்டிக் கொண்டாள்.

ஐந்து நிமிடங்கள் கழித்து பூஜையறையை விட்டு உற்சாகமாக வெளியே வந்தாள்..!! சுவற்றில் மாட்டியிருந்த அந்த பெரிய சைஸ் புகைப்படம் கண்ணில் படவும்.. கால்கள் தயங்கியவளாய் சற்று நின்றாள்.. முகத்தில் சலனமில்லாமல் அந்த புகைப்படத்தையே சில வினாடிகள் பார்த்தாள்..!!

ஆதிராவும் அவளுடைய தங்கை தாமிராவும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம்..!! இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்துக்கொண்டு.. கள்ளம் கபடம் இல்லாத ஒரு வெள்ளைப் புன்னகையை.. காமிராவை பார்த்து சிந்திக் கொண்டிருந்தனர்..!! அழகு கொஞ்சும் தங்கையின் முகத்தையே அன்பொழுக பார்த்த ஆதிரா.. கண்களை படக்கென மூடி கடவுளை மீண்டும் நினைத்துக் கொண்டாள்.. உதடுகள் முனுமுனுக்க கடவுளிடம் ஏதோ பிரார்த்தனை செய்து கொண்டாள்..!!

கண்திறந்தவள் நீளமாய் ஒரு பெருமூச்சை உதிர்த்தாள்.. ஹாலின் இன்னொரு மூலையில் இருக்கிற சமையலறைக்கு நடந்தாள்..!! சமையலறைக்குள் நுழைய.. ஆதிராவின் அம்மா பூவள்ளி பார்வைக்கு கிடைத்தாள்.. பாத்திரம் கழுவிக் கொண்டிருந்தாள்..!! அம்மா ஏறிட்டு பார்க்கவும், ஆதிரா அழகாக ஒரு புன்னகையை சிந்தினாள்..!!

“என்னம்மா பண்ணிட்டு இருக்குற..??”

“பாத்தா தெரியல.. பாத்திரம் கழுவிட்டு இருக்குறேன்..!! காபி போடலாம்னு நெனச்சேன்..!!”

“சரி.. எங்கிட்ட விடு.. நான் பாத்துக்குறேன்..!!”

“இல்ல ஆதிரா.. பரவா..”

“ப்ச்.. சொல்றேன்ல.. நான் பாத்துக்குறேன்.. நீ கெளம்பு.. போய் ரெஸ்ட் எடு.. நான் காபி போட்டு எடுத்துட்டு வரேன்..!!”

சொன்ன ஆதிரா அம்மாவின் கையில் இருந்த பால் பாத்திரத்தை பிடுங்கிக் கொண்டாள்.. குழாய் நீரை கொஞ்சமாய் திறந்து விட்டுக் கொண்டாள்.. ப்ரஷ் கொண்டு பாத்திரத்தை தேய்த்து சோப்பு நுரையை பொங்க வைத்தாள்..!! பூவள்ளி அதன்பிறகும் நகர மனமில்லாமல் அங்கேயே நின்றிருந்தாள்.. அப்புறம் காய்கறி தட்டில் கிடந்த தேங்காயை அவள் கையில் எடுக்க.. ஆதிரா அதட்டினாள்..!!

“அதை எதுக்கு எடுக்குற..??”

“இல்லடி.. நீ காபி போடுற நேரத்துல.. சட்னி ரெடி பண்ணலாம்னு..!!”

“ப்ச்.. சொன்னா உனக்கு புரியாதா.. எல்லாம் நான் பாத்துக்குறேன்.. நீ போய் ஹால்ல உக்காரு போ..!!”

ஆதிராவின் குரலில் ஒருவித எரிச்சல் தொனித்தாலும்.. அதையும் தாண்டி அவள் முகத்தில் வெளிப்பட்ட ஒரு உற்சாகம்தான் பூவள்ளியின் கவனத்தை கவர்ந்தது..!! தேங்காயை தட்டில் வைத்துவிட்டு.. மகளின் முகத்தையே சிறிது நேரம் ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தாள்..!!

11

‘எத்தனை நாளாயிற்று.. இவளிடம் இந்த உற்சாகத்தை பார்த்து..?? தாமிரா போனதில் இருந்தே.. இந்த குடும்பத்தில் நிம்மதி என்பது இல்லாமல் இருந்தது.. இவளுடைய முகத்திலும் சந்தோஷம் என்பது செத்துப் போயிருந்தது..!! மோசமான அந்த சூழ்நிலையில் இருந்து.. கொஞ்சம் கொஞ்சமாய் இந்த குடும்பம் சகஜ நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிற வேளையில்.. இவளுடைய இந்த புது உற்சாகத்தை பார்ப்பதற்குத்தான் மனதுக்கு எவ்வளவு இதமாக இருக்கிறது..??’ பூவள்ளி அவ்வாறு அகத்துக்குள் ஆனந்தப்பட்டுக் கொண்டிருக்கையிலேயே,

“என்னம்மா.. என்னமோ என்னை புதுசா பாக்குற மாதிரி.. அப்படி பாக்குற..??” ஆதிரா புன்னகையுடன் கேட்டாள்.

“ம்ம்.. புதுசாத்தான்மா பாக்குறேன்..!!”

“எ..என்ன சொல்ற.. எனக்கு புரியல..!!”

குழப்பமாக கேட்ட ஆதிராவுக்கு அவளுடைய அம்மா பதில் ஏதும் சொல்லவில்லை..!! மகளை நெருங்கி.. அவளுடைய மதிமுகத்தை இரு கைகளாலும் தாங்கி தடவி.. பிறகு அந்த கைகளை தனது உதட்டில் ஒற்றி முத்தமிட்டாள்..!!

“இன்னைக்கு மாதிரியே என்னைக்கும் சந்தோஷமா இருக்கணும்டி என் தங்கம்..!!”

அம்மா அன்பை பொழிந்ததில் ஆதிரா சற்று நெகிழ்ந்துதான் போனாள்.. நாணத்துடன் கூடிய ஒரு புன்னகையை உதடுகளில் கசியவிட்டாள்..!!

“இ..இருப்பேன்மா.. இப்படியே சந்தோஷமா இருப்பேன்.. போதுமா..??”

“அது போதும்டி..!!”

“ம்ம்ம்ம்ம்.. நீ ஹாலுக்கு போ.. நான் காபி போட்டு எடுத்துட்டு வரேன்..!!”

பூவள்ளி சமையலறையை விட்டு அகலவும்.. ஆதிராவை ஒரு சுறுசுறுப்பு தொற்றிக்கொண்டது..!! படபடவென பாத்திரம் கழுவி முடித்தவள்.. பத்தே நிமிடங்களில் காபியும் தயார் செய்துவிட்டாள்..!! ஹாலுக்கு சென்று.. தட்டில் இருந்த மூன்று தம்ளர்களில் ஒன்றை அம்மாவிடம் நீட்டியவாறே..

“அப்பா எங்கம்மா போயிட்டாரு..??” என்று கேட்டாள்.

“ம்க்கும்.. எங்க போயிருப்பாரு..?? வீட்டுக்கு பின்னால இருக்குற தோட்டத்துல நிப்பாரு..!! காலங்காத்தாலேயே தோட்டத்துல இருக்குற செடியையெல்லாம் கட்டிப்புடிச்சு முத்தம் குடுக்கலைன்னா.. உங்க அப்பாவுக்கு காலைச்சாப்பாடே எறங்காது..!!” பூவள்ளி அவ்வாறு கேலியாக சொல்லவும், ஆதிரா சிரித்துவிட்டாள்.

“ஹஹா.. சரி சரி.. அவருக்கு காபி வச்சுட்டு போறேன்.. வந்ததும் குடிக்க சொல்லு..!!”

இரண்டாவது தம்ளரை டீப்பாயில் வைத்துவிட்டு.. ஆதிரா உள்ளறைக்கு திரும்பினாள்..!! நடந்து சென்று தங்கள் அறைக்குள் நுழைந்தாள்.. கதவை சாத்திவிட்டு.. காபியை டேபிளில் வைத்துவிட்டு.. கட்டிலில் மெல்ல அமர்ந்து.. கணவனை துயில் எழுப்பலானாள்..!!

“அத்தான்.. எழுந்திரிங்க.. டைமாச்சு..!!”

அவ்வளவுதான்..!! எல்லா படங்களில், எல்லா கதைகளிலும் வருகிற எல்லா ஹீரோக்களையும் போலவே.. விருட்டென்று எழுந்த சிபி, ஆதிராவை இழுத்து தன் மார்போடு போட்டு, இறுக்கி அணைத்துக்கொண்டான்..!!

“ஐயோ.. என்னத்தான் இது.. விடுங்க..!!” எல்லா ஹீரோயின்களையும் போலவே, ஆதிராவும் சிபியின் சில்மிஷம் பிடிக்காத மாதிரி சிணுங்கினாள் .

“அதுக்குள்ள குளிச்சாச்சா..?? நல்லா வாசமா இருக்குற..??” அவளுடைய சிணுங்கலை மதியாமல், ஆதிராவின் கூந்தல் நுகர்ந்தான் சிபி.

“ஆமாம்..!! ம்ம்ம்ம்ம்ம்… விடுங்கத்தான்.. நான் போகணும்..!!”

“எங்க போற..??”

“டிபன் ரெடி பண்ணனும்..!!”

“அதுலாம் அத்தை பாத்துப்பாங்க.. விடு..!! நீ கொஞ்ச நேரம் இருந்துட்டு போ..!!”

“ஹையோ.. வேலை பாக்குறேன்னு சொன்னவங்களையும் நான்தான் வேணாம்னு வெரட்டிட்டு வந்திருக்கேன்.. வேறவழியில்ல.. நான்தான் போய் இப்போ ரெடி பண்ணனும்..!!”

12

ஆதிரா அவ்வாறு சொன்னதும், இப்போது சிபி அவளை பிடித்திருந்த பிடியை சற்றே நெகிழ்த்தினான்.. மனைவியின் முகத்தை ஏறிட்டு பார்த்தான்.. சற்றே கிண்டலான குரலில் கேட்டான்..!!

“ம்ம்.. அறிவுகெட்ட ஆதிரா அப்படி ஏன் பண்ணினாளாம்..??”

“ஹ்ம்ம்..?? வெக்கங்கெட்ட நீங்க இப்படி பண்ணுவிங்கன்னு எனக்கு எப்படி தெரியுமாம்..??”

“ஹாஹாஹா..!! ம்ம்.. அப்போ.. நான் இப்படி பண்ணுவேன்னு தெரிஞ்சிருந்தா.. எல்லா வேலையும் அத்தை தலைல கட்டிட்டு வந்திருப்பியா..??” மனைவியின் குறும்புக்கு சிரித்த சிபி, விடாமல் கேலியாக கேட்டான்.

“ஹ்ஹ.. அப்படிலாம் நான் சொல்லவே இல்லையே..??” ஆதிராவோ நாக்கு துருத்தி அவனுக்கு பழிப்பு காட்டினாள்.

“ஹாஹாஹாஹா..!!”

முன்பை விட பலமாக சிரித்த சிபி, இப்போது ஆதிராவின் இடுப்பை விடுவித்தான்.. ஒரு கையால் காபி எடுத்து உறிஞ்சியவாறே, இன்னொரு கையை ஆதிராவின் தோள் மீது போட்டு.. அவளை தன்னோடு இதமாக அணைத்துக் கொண்டான்..!! ஆதிராவோ அந்த அணைப்புக்கு நெளிந்தவளாய்,

“சீக்கிரம் குளிச்சுட்டு வாங்கத்தான்.. நான் போய் டிபன் ரெடி பண்றேன்..!!” என்றவாறு எழ எத்தனித்தாள்

“ஹேய்ய்ய்.. இருடா.. என்ன அவசரம்..??” சிபி அவளுடைய கையை பற்றி கட்டிலில் அமரவைத்தான்.

“எனக்கு ஒன்னும் அவசரம் இல்ல.. உங்களுக்குத்தான் டைம் ஆச்சு..??”

“எனக்கு என்ன டைம் ஆச்சு..??”

“ப்ச்.. பத்து மணிக்கு ஃப்ளைட்.. கெளம்ப வேணாமா..??”

ஆதிரா அவ்வாறு கேட்கவும் சிபி இப்போது பட்டென அமைதியானான்.. நீளமாக ஒரு பெருமூச்சை வெளிப்படுத்தியவன், தலையை மெல்ல தொங்கப் போட்டுக் கொண்டான்..!!

சிபி ஒரு ப்ரஃபஷனல் ஃபோட்டோக்ராஃபர்.. பெங்களூரில் தலைமையகத்துடன் இயங்கும் உதயவாணி என்கிற கன்னட நாளிதழின் மைசூர் கிளையில் பணி புரிகிறான்..!! அலுவல் நிமித்தமாக இன்று அவன் டெல்லி பயணிக்க திட்டமிடப்பட்டிருந்தது.. அந்த பயணத்திற்கான ஃப்ளைட் பற்றிதான் ஆதிரா இப்போது சொன்னது..!!

சிபி இப்போது தலையை கொஞ்சமாய் நிமிர்த்தி.. மனைவியின் முகத்தை ஏறிட்டு.. ஏக்கமான குரலில் கேட்டான்..!!

“கெளம்பனுமா ஆதிரா..??”

“என்ன கேள்வி இது..?? ஃப்ளைட் டிக்கெட் புக் பண்ணியாச்சு.. டெல்லில நீங்க தங்குறதுக்கு ஹோட்டல் ரிசர்வ் பண்ணியாச்சு.. ஒரு வாரத்துக்கு தேவையான ட்ரெஸ்லாம் அயர்ன் பண்ணி வச்சாச்சு..!! இப்போ வந்து இப்படி கேட்டா என்ன அர்த்தம்..??”

“ம்ம்..?? எனக்கு போகப் பிடிக்கலன்னு அர்த்தம்..!!”

“ஏன் போக பிடிக்கல..??”

“ஏன்னு உனக்கு தெரியாதா..??”

சிபி குறும்பாக கேட்டுவிட்டு, மனைவியின் கண்களையே குறுகுறுவென பார்த்தான்.. அந்த பார்வையின் அர்த்தத்தை புரிந்துகொண்டதும், பட்டென ஒரு வெட்கச் சிவப்புக்கு உள்ளானது ஆதிராவின் முகம்..!! நாணத்தால் அவளையும் அறியாமல் தலைதாழ்த்திக் கொண்டவள்.. அந்த அர்த்தம் புரியாத பாசாங்குடனே சொன்னாள்..!!

“இ..இல்ல.. எனக்கு தெரியல.. நீங்க சொல்லுங்க..!!” Bra Jatti Tamil New Sex Stories

– தொடரும்

What did you think of this story??

Comments

Scroll To Top