அசோக் காலிங் அசோக் – 11

(Tamil Sex Stories - Ashok Calling Ashok 11)

Raja 2014-03-13 Comments

Tamil Sex Stories – “ம்ம்.. சொல்லு..!!” அவள் அவசரப் படுத்தினாள். யோசிக்க நேரமில்லாமல் நான் உளறினேன்.

“ஆங்..!! நேத்து என் பாட்டி கனவுல வந்து திட்டினாங்க..!!”

“என்ன திட்டினாங்க..?”

1

“உனக்குலாம் மானிட்டரே இல்லையாடான்னு..”

“என்னது..????”

“ஐயயோ..!! ஸாரி.. மனசாட்சியே இல்லையான்னு திட்டுனாங்க..!!”

“உன் பாட்டி பேர் என்ன..?” அவள் பட்டென அடுத்த கேள்வியை வீசினாள்.

“ம்ம்.. தீபிகா படுகோனே..!!”

“ப்ச்..!! சொல்லுடா..!!”

“பாட்டி பேர்லாம் ஏன் கேக்குற..?”

“இதோ.. இப்படி திணர்ற பாத்தியா.. அதுக்குத்தான்..!!”

“நான்லாம் ஒன்னும் திணறலை..!! என் பாட்டி பேரு… ம்ம்ம்… ஆங்..!! அழகுவேணி..!!”

“சரி.. லாஸ்டா.. எப்போ, எந்த பொண்ணோட, எந்த சிச்சுவேஷன்ல செக்ஸ் வச்சுக்கிட்ட..? படபடன்னு சொல்லு பார்ப்போம்..!!”

“அ..அது.. அது…”

நான் வகையாக மாட்டிக்கொண்டேன் என்று எனக்கு இப்போது புரிந்து போனது. திணறினேன். திருதிருவென விழித்தேன். திடீரென்று எப்படி ஒரு கட்டுகதையை அவிழ்த்து விடுவது..? அவள் இப்போது என்னைப் பார்த்து ஏளனமாக சொன்னாள்.

“ம்ம்.. பாத்தியா..? சொல்ல முடியலை பாத்தியா..?? அதான் சொன்னேன்.. நீ பொய் சொல்றேன்னு..!!”

“அதுலாம் ஒண்ணுல்ல.. ஒன்னு ரெண்டுணா ஞாபகம் இருக்கும்.. எக்கச்சக்கமா ஆகிப் போச்சா..? ஒழுங்கா ஞாபகத்துக்கு வர மாட்டேன்னுது..!!”

நான் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது மாதிரி மழுப்பலாக சொன்னேன். லேகா அதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை. கொஞ்ச நேரம் என் முகத்தையே காதலுடனும், கனிவுடனும் பார்த்தாள். அப்புறம் உதட்டில் மெல்லிய புன்னகையை கசியவிட்டவள், ஒரு கையால் என் கன்னத்தை தாங்கிப் பிடித்தாள். இதமான குரலில் சொன்னாள்.

“நீ ஏன் இப்படிலாம் பேசுறேன்னு எனக்கு புரியுது அசோக்..!!”

“ஏன் இப்படி பேசுறேன்..?” (எனக்கே ஒன்னும் புரியலை.. இவளுக்கு என்ன புரிஞ்சது..?)

“புரியுதுன்னு சொல்றேன்ல..? உன் மனசை உன்னைவிட நான் நல்லா புரிஞ்சு வச்சுக்குறேன்..!!”

“ஓஹோ..???”

“ஒன்னு மட்டும் சொல்றேன் கேட்டுக்கோ..!! நீ நெஜமாவே அந்த மாதிரி.. பொம்பளைப் பொறுக்கியா இருந்தா கூட.. எத்தனை பொண்ணுக கூட உனக்கு பழக்கம் இருந்திருந்தா கூட.. எனக்கு கவலை இல்ல..!! என்னை கட்டிக்கிட்டதுக்கு அப்புறம்.. எனக்கு ஒரு நல்ல புருஷனா இருந்தா.. அது போதும் எனக்கு..!! உன் கடந்த காலம் பத்திலாம் எனக்கு அக்கறை இல்லை..!! புரிஞ்சதா..? ஐ லவ் யூ அசோக்.. ஐ லவ் யூ ஸோ மச்..!!”

உருக்கமாக பேசியவள், காலேஜ் என்பதையும் மறந்து என் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள். உதடுகளை குவித்து என் மார்பில் இதமாக முத்தமிட்டாள். அங்கேயே முகம் சாய்த்து, தன் விழிகளை மூடிக் கொண்டாள். எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை..!! நான் நினைத்தது ஒன்று.. நடந்தது வேறு..!! அவளை கழட்டிவிடவேண்டும் என்ற எண்ணத்துடன் பொய் சொன்னால், அவளோ தன் காதலால் என்னை கவிழ்த்து விட்டாள். என் மீது லேகாவுக்கு இவ்வளவு காதலா..?? எனக்கே ஆச்சரியமாக இருந்தது..!! அவளை மென்மையாக, ஆறுதலாக அணைத்துக் கொண்டேன். ‘டேய் சீனி..!!!!’ என்று பற்களை கடித்துக்கொண்டு கத்த வேண்டும் போலிருந்தது..!!

ஆனால் அப்போது கத்தவில்லை. அடக்கிக்கொண்டேன். அன்று இரவு சீனியர் கால் செய்யும்போது கத்தினேன். காட்டுத்தனமாய் நான் கத்தியதில் அவர் மிரண்டு போனார்.

“ஆஆஅ…!! ஏன் கத்துற ஜூனி.. காது வலிக்குது…!!”

“பின்ன என்னய்யா..? நான் பாட்டுக்கு ஜாலியா லவ் பண்ணிட்டு இருந்தேன்.. இப்படி சனியன் மாதிரி என் லைஃப்ல வந்து.. எல்லாத்தையும் ஒழப்பிட்டியேயா..!! ச்சே.. என் நிம்மதியே போச்சு..!!”

“ஜூனி.. டென்ஷன் ஆகாம மேட்டர் என்னன்னு சொல்லு..!!”

2

நான் சீனியரிடம் அன்று நடந்த விஷயங்களை எல்லாம் ஒப்பித்தேன். லேகாவை கழட்டி விட நான் சொன்ன பொய்யும், அந்த பொய் புஸ்வானமாய் போய் சேர்ந்த கதையையும் சுருக்கமாக சொன்னேன். அதை பொறுமையாக கேட்ட சீனியர், அப்புறம் சற்றே யோசனையான குரலில் சொன்னார்.

“ம்ம்ம்ம்… உன்னோட ஐடியா நல்ல ஐடியாதான்.. ஆனா ஃபினிஷிங்தான் ராங்கா போயிடுச்சு..!! சரி விடு.. வேற ஏதாவது ஐடியா யோசிக்கலாம்..!!”

“யோவ்.. போய்யா..!! இனிமே நான் நீ சொல்றதை கேக்கப் போறது இல்ல.. நீ என்னை விட்ரு..!! லேகா என்னை எவ்ளோ லவ் பண்றான்னு எனக்கு தெரிஞ்சு போச்சு.. அவ எனக்கு வேணும்..!!”

“புரியாம பேசாத ஜூனி..!! லவ் பண்ற வரைக்கும் எனக்கும் லேகாவுக்கும் எந்த பிரச்னையும் வரலை.. அவ பொண்டாட்டியா வந்தப்புறந்தான் பிரச்னை ஸ்டார்ட் ஆச்சு..!! அது மாதிரிதான்.. உனக்கு இப்போ இது சந்தோஷமா இருக்கும்.. ஆனா ஃப்யூச்சர்ல இதுக்காக நீ ரொம்ப ஃபீல் பண்ணுவ..!! இப்போ உனக்கு கிடைக்கிற மொளகா பஜ்ஜிக்கு ஆசைப்பட்டா.. அப்புறம் அவ மொத்து மொத்துன்னு மொத்துறதையும் வாங்கித்தான் ஆகணும்.. இப்போ உனக்கு கிடைக்கிற பிரியாணிக்கு ஆசைப்பட்டா.. பின்னாடி அவ உன்னை பிரிச்சு மேயுறதையும் தாங்கித்தான் ஆகணும்..!! இந்தமாதிரி சின்ன சின்ன மேட்டருக்கு ஆசைப்பட்டு.. ஃப்யூச்சர்ல பெருசு பெருசா வாங்கிக் கட்டிக்காத..!!”

“என்னவோ சீனி.. நீ லேகா பத்தி சொல்றதெல்லாம்.. நம்புறதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குது..!!”

நான் நம்பிக்கையற்றவனாய் சொல்ல, சீனியர் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தார். எதையோ தீவிரமாக யோசிக்கிறார் போல தோன்றியது. அப்புறம் லேசான தொண்டை செருமலுடன் அவருடைய குரல் ஒலித்தது.

“இங்க பாரு ஜூனி..!! இன்னும் உனக்கு என் மேல நம்பிக்கை வரலைன்னு நெனைக்கிறப்போ.. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு..!! நம்பிக்கை இல்லாம நீ இந்த வேலையை செஞ்சா.. நான் நெனச்சதை நெறைவேத்த முடியாது..!! ஓகே.. நாம இப்போ ஒரு முடிவுக்கு வந்தாகணும்..!! நான் சொல்றதை கவனமா கேளு ஜூனி.. நான் இப்போ கால் கட் பண்றேன்.. உனக்கு ஒரு பத்து நிமிஷம் டைம் தர்றேன்..!! நல்லா யோசி..!! பத்து நிமிஷம் கழிச்சு மறுபடியும் நான் கால் பண்றேன்.. என் மேல உனக்கு முழு நம்பிக்கை வந்தா.. காலை பிக்கப் பண்ணு.. இல்லனா வேணாம்..!! ஒருவேளை நீ பிக்கப் பண்ணலேன்னா.. அப்புறம் நான் உனக்கு கால் பண்ணவே மாட்டேன்.. உனக்கு தொந்தரவு கொடுக்க மாட்டேன்..!! நல்லா யோசிச்சு ஒரு முடிவெடு..!! ஒன்னு மட்டும் புரிஞ்சுக்கோ.. என்னை நீ நம்ப மாட்டேன்னு சொல்றது.. உன்னையே நீ நம்ப மாட்டேன்னு சொல்றது மாதிரி.. !! நீ தப்பான முடிவெடுத்தா.. அதனால என்னை விட அதிகமா பாதிக்கப்படப் போறது நீதான்..!! இதைலாம் ஞாபகம் வச்சுக்கிட்டு நல்ல முடிவா எடு..!! ஓகே..??”

சீரியசான குரலில் சொன்ன சீனியர், காலை கட் செய்தார். இருண்டு போன செல்போன் திரையையே, இமைக்காமல் நான் பார்த்துக் கொண்டிருந்தேன். சீனியர் சொன்ன வார்த்தைகளே மனதுக்குள் திரும்ப திரும்ப ஒலித்துக் கொண்டிருந்தன. அந்த வார்த்தைகளில் இருந்த நியாயம் மெல்ல மெல்ல புரிந்தது. அவர்தான் நான் என்று நிரூபித்து விட்ட பின்பும், அவரை நம்பாமல் நான் இருப்பது முட்டாள்த்தனம் என்று தோன்றியது. லேகாவை நான் நம்புவது அப்புறம் இருக்கட்டும்.. முதலில் என்னையே நான் நம்பாமல் இருந்தால் எப்படி..???

தீவிரமான யோசனைகளிலேயே பத்து நிமிடங்கள் கழிந்தன. சில நொடிகளில் சீனியரிடம் இருந்து திரும்பவும் கால் வந்தது. நான் எடுக்கலாமா வேண்டாமா என்று ஐந்தாறு வினாடிகள் யோசித்தேன். அப்புறம் ஒரு முடிவுக்கு வந்தவனாய், என் கட்டை விரல் நகர்த்தி கால் பிக்கப் செய்தேன். காதில் வைத்தேன். நன்றியில் நனைந்த குரலாய் சீனியரின் குரல் ஒலித்தது.

“தேங்க்ஸ் ஜூனி..!!!”

“பரவால்ல சீனி..”

“இப்போ என்னை முழுசா நம்புறேல..?”

“நம்புறேன் நம்புறேன்.. வேற வழி..?? சொல்லு.. நான் என்ன பண்ணனும்..!!”

“ஓகே.. ஓகே.. மேட்டருக்கு வருவோம்..!! நாளைக்கு லேகாகிட்ட இன்னொரு பொய் சொல்லி.. அவளை கழட்டி விடலாமான்னு பாரு..”

“நான் என்ன சாலமன் பாப்பையாவா..? தினம் ஒரு திருக்குறள் மாதிரி.. டெயிலி ஒரு டூப்பு விட சொல்ற..? இனிமேலாம் அவளை பொய் சொல்லி கழட்டி விட முடியாது..!! அவ நம்ப மாட்டா..!!”

“ஏன்..???”

“நான் பொய் சொன்னா.. அவ என் கண்ணைப் பாத்தே கண்டு பிடிச்சுடுறாய்யா..!!”

“பொய் சொன்னா கண்டு பிடிச்சிடுறாளா..? ச்சை.. எங்கயோ போலீஸ் வேலைல சேர வேண்டியதுலாம்.. பொண்டாட்டியாகி நம்ம உசுரை வாங்குதுகப்பா..!!”

“இனிமே நீ சொல்ற ஐடியாவைத்தான் நான் அப்டியே ஃபால்லோ பண்ணப் போறேன் சீனி.. அவளை கழட்டி விட என்ன பண்ணலாம்னு நீயே சொல்லு..!!”

Comments

Scroll To Top