அசோக் காலிங் அசோக் – 3

(Tamil Sex Stories - Ashok Calling Ashok 3)

Raja 2014-03-05 Comments

Tamil Sex Stories – அரை நிமிடம் அவளுடைய உதட்டுத்தேனை திகட்ட திகட்ட உண்டுவிட்டு திரும்பியபோது… ஆவி பறக்கும் நண்டு சூப்புடனும், ஆவேன பிளந்த வாயுடனும் சர்வர் பையன் நின்றிருந்தான். எதோ பேயிடம் பலமாக அறை வாங்கிவன் மாதிரி அதிர்ந்து போய் அசைவின்றி நின்றிருந்தான். அவ்வளவுதான்..!! லேகா உடனே வெட்கப்பட்டு தலையை கவிழ்ந்து கொண்டாள். எனக்குத்தான் என்ன செய்வதென்றே புரியவில்லை. அந்த சர்வரைப் பார்த்து ‘ஈஈஈஈ” என இளித்தபடி, லூசுத்தனமாய் எதோ உளறினேன்.

1

“அ..அது ஒன்னுல்லப்பா.. அவங்களுக்கு உதட்டுல தூசி விழுந்துடுச்சு.. ஊதி விட்டுட்டு இருந்தேன்.. நீ ஒன்னும் தப்பா நெனச்சுக்காத..”

அப்புறம் அரை மணி நேரம்.. ஆர்டர் செய்த ஐட்டங்கள் அடுத்தடுத்து வந்து கொண்டிருக்க, நாங்கள் சாப்பிட்டோம். லேகா முத்தமிட்டு மாட்டிக்கொண்ட வெட்கம் நீங்காமல், கொஞ்சம் கொஞ்சமாய் கொறித்தாள். எனக்குத்தான் வெட்கம், கூச்சம் ஒரு எழவும் கிடையாதே..? என் இஷ்டத்திற்கு எல்லாத்தையும் மேய்ந்தேன். அந்த சர்வர் பையன் கொஞ்ச நேரத்திற்கு பித்துப் பிடித்தவன் மாதிரியே சுத்திக் கொண்டு இருந்தான். சூப்பர்வைசரிடம் கெட்ட வார்த்தையில் திட்டு வாங்கினான். பாவமாக இருந்தது..!!

சாப்பிட்டு விட்டு அங்கிருந்து கிளம்பினோம். லேகாவே என்னை எனது ரூம் வரை வந்து ட்ராப் செய்தாள். கிளம்புகையில் கையால் உதட்டை தொட்டு காற்றில் ஒரு முத்தத்தை பறக்க விட்டு சென்றாள். நானும் அதைப் பிடித்து என் கக்கத்தில் வைத்துக்கொண்டு மாடிப்படியேறி என் அறைக்கு சென்றேன். காலிங் பெல் அடித்துவிட்டு காத்திருந்தேன். கருப்பு நிறமும், கனத்த தேகமும் கொண்ட அந்த பெண்மணி வந்து கதவை திறந்தாள்.

“வா அசோக்கு.. லேகா பாப்போவோட ஊர் சுத்தினு வர்றியா..?” அவள் ‘ஈஈ’ என இளித்தவாறு கேட்க,

“இ..இல்லத்தை.. ஆ..ஆமாத்தை..” என நான் உளறினேன்.

அந்தப்பெண்மணி வேறு யாரும் இல்லை. என் ரூம்மேட் ஜான்சனின் தூரத்து சொந்தம். அத்தை முறை வேண்டும் என்று என்னிடம் சொல்லியிருக்கிறான். இதே ஊரில்தான் இருக்கிறாள். அவ்வப்போது வந்து ஜான்சனை பார்த்துவிட்டு செல்வாள்.

“ஜானியை எங்கத்தை.. ஆளைக்காணோம்..” என்றேன் நான்.

“குளிச்சுட்டு வர்றேன்னு பாத்ரூம் போயிருக்கான் கண்ணு..!! நீ வா.. உக்காரு..!! காபி போடவா..? சாப்பிடுறியா..?”

“இல்லத்தை.. இப்பத்தான் பிரியாணி சாப்பிட்டேன்.. வேணாம்..”

அப்புறம் நானும் ஜானியின் அத்தையும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தோம். ஒரு ஐந்து நிமிடத்திலேயே ஜானி குளித்துவிட்டு வெளியே வந்தான். அவன் வந்த கொஞ்ச நேரத்தில் அவனுடைய அத்தையும் கிளம்பினாள். அவள் கிளம்பியதும் இவன் டிவி ஆன் செய்து, எம் டிவியில் அலறிய பாடல் ஒன்றுக்கு ‘ஏ.. ஏ.. ஏ..’ என்று கத்தியவாறு என் அருகில் வந்து அமர்ந்தான். ஒரு நிமிடம் கூட ஆகியிருக்காது. நைசாக என்னிடம் தூண்டில் போட்டுப் பார்த்தான்.

“அப்புறம் மச்சி.. லேகா குட்டி என்ன சொல்லுச்சு..?” அவன் நக்கலாக கேட்க, நான் கடுப்பானேன்.

“த்தா.. இனிமே அவளை குட்டி, பொட்டி, ஜட்டின்னுலாம் சொன்ன.. கடுப்பாயிடுவேன் நான்..”

“ஹேய்.. இப்போ ஏன் டென்ஷன் ஆவுற..? புடிக்கலைன்னா சொல்ல வேண்டியதுதான..? சரி விடு.. இனிமே அப்படி கூப்பிடலை..!! லேகா மேடம் என்ன சொன்னாங்கங்க…?” என்று உடனே அவன் போலி மரியாதை காட்டினான்.

“ஒ..ஒன்னும் சொல்லலை.. சும்மா லஞ்ச் சாப்பிட்டு வந்தோம்.. அவ்ளோதான்..”

“ம்ம்ம்ம்…. பாக்கெட்டு ஏதோ பல்ஜாயிருக்குற மாதிரி இருக்கு.. இன்னாது அது..? எதுனா வாங்கித் தந்தாளா..?”

“ப்ச்.. அதுலாம் எதுக்கு உனக்கு..?”

“ஏய்.. சும்மா சொல்லுடா.. அதை தெரிஞ்சுக்கிட்டு நான் என்ன பண்ணப் போறேன்..??”

அவன் கேஷுவலாக கேட்க, நான் அவனை ஏறிட்டு முறைத்தேன். நான் ஏன் முறைக்கிறேன் என்று உங்களுக்கு அவ்வளவாக விளங்காது. அந்த இம்சை எனக்கு மட்டுமே தெரியும். ‘அதை தெரிஞ்சுக்கிட்டு நான் என்ன பண்ணப் போறேன்’ என்று அலட்சியமாக கேட்டான் அல்லவா..? இந்த மாதிரி விஷயங்களை தெரிந்து கொள்ளத்தான் இவன் இந்தப் பிறவியே எடுத்திருக்கிறான். அடுத்தவர்களுடைய ரகசியங்களை அறிந்து கொள்வதில் அப்படி ஒரு ஆர்வம்..!! ஆனால் அவனுக்குள் இருக்கும் ஆர்வம், அவனது குரலில் தெரியாது. இது இரண்டு வருடங்களாக இவன் கூட இருந்ததில் நான் அறிந்து கொண்ட விஷயம்.

2

ஜானியைப் பற்றி கொஞ்சம் சொல்லுகிறேன். என்னுடைய க்ளாஸ்மேட்தான்..!! ஆள் பார்ப்பதற்கு ஆறடி உயர மாடு மாதிரி இருப்பான். ஆண்ட்ரூ ப்ளிண்டாஃபுக்கு அரைக்கால் டவுசர் மாட்டிவிட்டது மாதிரி காட்சியளிப்பான். முகத்தில் எப்போதுமே ஒரு அலட்சியம். முள் முள்ளாய் தலை முடியும், அதே முள் முள்ளாய் தாடியும்..!! ‘முட்டாக்கூ.. கேனைக்கூ.. லூசுக்கூ..’ என்று தொண்டைத்தண்ணி வற்றும் அளவிற்கு எவ்வளவு கேவலமாக திட்டினாலும் கூட, ‘ஹேஹே.. அப்புறம்..?’ என்று கேனைத்தனமாக சிரிக்கக் கூடிய கேரக்டர் அவன். எனக்காவது வெட்கம் மட்டுந்தான் கெடயாது. அவனுக்கு மானம், சூடு, சொரணை என அந்த கேட்டகரியில் வரும் எந்த விஷயமுமே கெடயாது.

அவனைப் பற்றி இந்த அளவு புரிந்து வைத்திருந்தாலும், அவனிடம் எந்த ரகசியத்தையும் என்னால் மறைக்க முடியாது. உளறிக் கொட்டிவிடுவேன். நான் எப்படிப்பட்ட ஓட்டை வாய் என்று நீங்களே புரிந்து கொள்ளுங்கள். இப்போதும் அப்படித்தான். லேகா செல்போன் வாங்கித் தந்த மேட்டரை கறந்து விட்டான். ‘கொடுத்து வச்சவன்டா நீ..’ என்றான்.. ‘போடா.. கோணப்பூ..’ என்று திட்டினேன். ‘தண்ணி வாங்கித்தாடா..’ என்றான். ‘போடா.. சுண்..’ என்று திட்டிவிட்டு என் ரூமுக்கு வந்தேன். மெத்தையில் விழுந்தேன். உறங்கிப் போனேன்.

உண்ட பிரியாணிக்கு உறக்கம் உடனே வந்தது. வாயைப் பிளந்தவாறு தூங்கிப் போனேன். மாலை ஐந்து மணி வாக்கில் எழுந்தேன். முகம் கழுவிவிட்டு வெளியே வந்தேன். நானும் ஜானியும் கீழே இருக்கும் டீக்கடை சென்று டீ சாப்பிட்டுக்கொண்டே, புகை விட்டோம். பின்பு மீண்டும் மாடியேறி மேலே வந்தோம். நான் என் அறைக்குள் நுழைந்து கொண்டேன்.

எனக்கு தம்மடிப்பது, தண்ணியடிப்பது, பெண்களிடம் வழிவது என நிறைய கெட்ட பழக்கங்கள் இருக்கின்றன. ஆனால் எனக்கும் ஒரு நல்ல பழக்கம் இருக்கிறது. என்னவென்று சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்கள். அது.. தினமும் டைரி எழுதுவது..!! கடந்த ஐந்து வருடங்களாக இதை நான் செய்து வருகிறேன். எஸ்.எஸ்.எல்.சி படிக்கும்போது, எஸ்தர் என்ற அழகான டீச்சர் கேட்டுக்கொண்டதற்காக ஆரம்பித்த பழக்கம். அதுமட்டுமில்லாமல் எழுதிய டைரிகளை பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறேன். அவ்வப்போது அதை எடுத்து, எப்போதோ நான் செய்த கோணங்கித்தனங்களை படித்து ரசிப்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஹாபி..!!

ரூமுக்குள் நுழைந்ததுமே எனது இந்த வருட டைரியை எடுத்துக்கொண்டு மெத்தையில் படுத்தேன். இன்று நடந்தவற்றை பற்றி எழுத ஆரம்பித்தேன். ‘அன்புள்ள டைரி.. இன்று என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்.. என்னுடைய முதல் செல்போனை இன்றுதான் நான் வாங்கினேன்..’ நான் எழுதிக் கொண்டிருக்கும்போதே,

“ஆமாம்.. இவரு பெரிய ஆளவந்தான் கமலஹாசன்.. டைரியை லவ்வாங்கி பண்றாரு..!!”

சத்தம் கேட்டு நான் திரும்பிப் பார்த்தேன். ‘ஈஈ..’ என்று இளித்தவாறு ஜானி நின்றிருந்தான். தன் வலது கையால் ஷார்ட்சுக்குள் இருந்த தன் தம்பியை பிடித்து கசக்கியவாறு நின்றிருந்தான். எனக்கு எப்படி டைரி எழுதுவது ஒரு ஹாபியோ.. அதுமாதிரி இவனுக்கு இடுப்புக்கு கீழே இருப்பதை பிடித்து கிட்டார் வாசிப்பது ஒரு ஹாபி..!! அவனைப் பார்த்து நான் பயங்கர கடுப்பானேன். கத்தினேன்.

“ஏய்.. என்னடா வேணும் உனக்கு இப்போ..?”

“ஒன்னும் வேணாம் மச்சி.. நீ எழுது.. நான் டிஸ்டர்ப் பண்ணல..”

“ங்கோத்தா.. அறிவே இல்லையாடா உனக்கு..? நிம்மதியா ஒரு டைரி கூட எழுத விட மாட்டியா நீ..?”

“ஏன் மச்சி திட்டுற..?” அவன் பரிதாபமாக கேட்டான்.

“திட்டுறதா..? இப்போ நீ போகலை.. மிதிக்கிற மிதில.. கொட்டை ரெண்டும் கோலிக்குண்டு மாதிரி தெறிச்சுடும்..!!”

“என்னடா.. ரொம்ப கோவமா இருக்கியா நீ..? சரி சரி.. நீ எழுது.. நான் அப்புறமா எடுத்து படிச்சுக்குறேன்..”

3

கொஞ்சம் கூட சொரணையே இல்லாமல் அவன் சொல்லிவிட்டு நகர, ‘இவனை என்ன செய்வது..?’ என்று நான் கொஞ்ச நேரம் கடுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்புறம் அன்று நடந்த மிச்ச கதைகளை எழுத ஆரம்பித்தேன். செல்போன் ஷோரூமில் லேகா கெஞ்சியது.. ரெஸ்டாரண்டில் அவளுடன் உதடுகள் உரசிக் கொண்டது.. அந்த சர்வர் பையனை கொஞ்ச நேரம் மந்திரித்து விட்ட கோழி மாதிரி ஆக்கியது.. எல்லாம் எழுதினேன்..!!

Comments

Scroll To Top