கண்ணாமூச்சி ரே ரே – 31

(Tamil Sex Story - Kannamoochi Rae Rae 31)

Raja 2014-06-08 Comments

Tamil Sex Story – “ஹேய்.. இது ஏதோ சும்மா கதை மாதிரி இருக்குடி.. நெஜம் மாதிரி தோணல.. நம்ம பாட்டனாரோட கற்பனையா கூட இருக்கலாம்..!!”

“ப்ச்.. இல்லக்கா.. உனக்கு புரியல..!! இந்தக்கதையையும் நெஜத்தையும் மேட்ச் பண்ணிப்பாரு.. உனக்கு க்ளியரா புரியும்..!! பேர்லாம் பாரு.. அகழியை முதலைப்பள்ளம்னு மாத்திருக்காரு.. குறிஞ்சியை குறவஞ்சின்னு மாத்திருக்காரு..!!”

13

“ம்ம்.. அது புரியுது..!!”

“இன்னொன்னு கவனி.. அந்த வில்லனோட பேரு புவனபதி.. அவர் பையன் பேரு தீர்த்தகிரி..!!”

“அதுல என்ன மேட்டர் இருக்கு..??”

“பேரை பாதி பாதியா கட் பண்ணி மிக்ஸ் பண்ணிருக்காருக்கா.. அவங்களோட உண்மையான பேரு புவனகிரி, தீர்த்தபதி..!! புவனகிரி யார்னு தெரியும்ல.. நம்ம பாட்டனாரோட தாத்தா.. சூழ்ச்சியோட முக்கியப்பங்கு அவருக்குத்தான்.. மீதிப்பங்கு அவரோட பையனுக்கு..!! அந்த ரெண்டு பேரோட முடிவு பத்தி கதைல என்ன எழுதிருக்குன்னு பாரு.. அந்த வில்லன் ஒரு பாழடைஞ்ச மண்டபத்துல ரத்தம் கக்கி செத்துப்போறான்.. பத்து பதினஞ்சு நாள் கழிச்சு அழுகிப்போய் அவர் உடலை கண்டு பிடிக்கிறாங்க..!! அவரோட பையன் எங்க போனான்னே தெரியாம.. ஒருநாள் திடீர்னு காணாம போயிர்றான்..!! நம்ம கொள்ளுப்பாட்டி.. நம்ம பரம்பரை பத்தி சொன்ன கதைல.. இதெல்லாம் சொல்லிருக்காங்க.. ஞாபகம் இருக்கா உனக்கு..??”

“ம்ம்ம்..!!”

“இப்போ புரியுதா..?? ஏதோ மனசாட்சி கேக்காமத்தான் அவர் இந்தக்கதையை எழுதிருக்காருக்கா.. ஆனா பயந்து பயந்து எழுதிருக்காரு.. யாருக்கும் சந்தேகம் வரக்கூடாதுன்னு கவனமா எழுதிருக்காரு.. யார் கண்ணுலயும் இதை அவர் காட்டிருக்க மாட்டார்னு நெனைக்கிறேன்..!!”

“ம்ம்ம்..!!”

“இது மட்டும் இல்லக்கா.. இன்னும் நெறைய விஷயம் கலக்ட் பண்ணிட்டு இருக்குறேன்.. பண்ணப்போறேன்.. என்ன நடந்ததுன்னு தெள்ளத்தெளிவா ஆதாரத்தோட ஆராய்ச்சி கட்டுரையா ரிலீஸ் பண்ணப் போறேன்..!! குறிஞ்சியோட உண்மைக்கதை என்னன்னு.. நூறுவருஷம் கழிச்சு எல்லாருக்கும் தெரிய வைக்கப் போறேன்..!!” தாமிரா ஆவேசமாக பேசினாள்.

“ஆ..ஆனா.. இதுல நம்ம குடும்ப கௌரவம் அடங்கி இருக்கே தாமிரா..?? இந்தக்கட்டுரை வெளில வந்தா.. நம்ம குடும்பத்தை பத்தி எல்லாரும் தப்பா பேச மாட்டாங்களா..??” ஆதிரா தயங்கி தயங்கித்தான் கேட்டாள்.

தாமிரா கொஞ்சநேரம் அவளுக்கு பதில் ஏதும் சொல்லவில்லை.. அமைதியாக இருந்தாள்.. பிறகு எங்கேயோ வெறித்து பார்த்துக்கொண்டு.. கூர்மையாக அந்தக் கேள்வியை கேட்டாள்..!!

“படிக்கிறப்போவே நெஞ்சு பதர்ற ஒரு கொடுமையை.. பணத்திமிர்ல சூழ்ச்சியா செஞ்சுமுடிச்ச ஒரு அக்கிரமத்தை.. ஒரு அப்பாவிப் பொண்ணை, ஒரு ஊரே சேர்ந்து கொளுத்தின கொடூரத்தை.. அந்த உண்மையை இத்தனை நாளா மூடிமறைச்ச அநியாயத்தை.. குடும்ப கௌரவம் பாத்துக்கிட்டு இன்னும் மூடிமறைக்க சொல்றியாக்கா..?? சொல்லுக்கா.. சொல்லு..!!”

தாமிராவின் கேள்வியில் ஆதிரா வாயடைத்துப் போனாள்.. பதில் பேச வார்த்தையற்றவளாய் தலையை குனிந்து கொண்டாள்..!!

பழைய நினைவுகளில் மூழ்கி திளைத்தவாறே.. தடுப்பூசி மருந்து தொழிற்சாலைக்கு வந்து சேர்ந்தாள் ஆதிரா.. உள்ளே வர மறுத்த கதிரை கட்டயாப்படுத்தி அழைத்து சென்றாள்..!! ஆதிராவை அடையாளம் கண்டுகொண்ட தொழிலாளர்கள் அவளுக்கு வணக்கம் செய்தனர்.. எல்லோருக்கும் பதில் வணக்கம் செய்தவாறே உற்பத்திக் கூடத்திற்குள் நுழைந்தாள்..!! பணிவாக வணங்கிய சூபர்வைசரிடம் முகிலனை பார்க்கவேண்டும் என்றாள்.. அவர் உடனே இவர்களுக்கு முன்பாக விடுவிடுவென நடந்து, முகிலனின் அறைக்கு அழைத்து சென்றார்..!!

14

குளிரூட்டப்பட்ட அகலமான அறை அது.. மரத்தடுப்பால் இரண்டாக பிரித்திருந்தனர்..!! இவர்கள் இருவரையும் வெளியே அமரவைத்துவிட்டு.. சூபர்வைசர் மட்டும் உள்ளே சென்று முகிலனிடம் ஆதிராவின் வருகையை தெரிவித்தார்..!! சில வினாடிகளிலேயே முகிலன் அவனது பிரத்தியேக அறையில் இருந்து வெளிப்பட்டான்.. முகத்தில் ஒரு புன்னகையுடன்..

“வீட்டுக்கு வந்திருக்கலாம்ல ஆதிரா.. ஆபீசுக்கு வந்திருக்குற..??”

என்று இயல்பாகத்தான் வரவேற்றான்..!! பிறகு கதிரை கவனித்ததும்.. சட்டென சற்று முகம் சுருங்கியவன்..

“என்ன சாப்பிடுற..??” என்றபோது குரலில் ஒரு இறுக்கம்.

“இ..இல்ல.. ஒன்னும் வேணாம்..!!” ஆதிரா அவ்வாறு சொல்கையிலே ஏதோ முக்கியமான விஷயம் என்று புரிந்துகொண்டான்.

“என்ன மேட்டரு..??” என்று முறைப்பாக கேட்டான்.

வந்திருந்த விஷயத்தை தயங்கி தயங்கி ஆதிரா சொல்லிமுடிக்க.. முகத்தை உர்ரென வைத்தவாறே முகிலன் அதை கவனமாக கேட்டுக்கொண்டான்..!! அவ்வப்போது கதிரின் பக்கமாக திரும்பி அவனை எரித்து விடுவதுபோல பார்த்தான்..!! ஆதிரா பேசி முடித்தபிறகும்.. சிலவினாடிகள் எதுவும் பேசாமல் அவளுடைய முகத்தையே கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தான்..!! பிறகு.. கூலாக கேட்டான்..

“இப்போ என்ன தெரிஞ்சுக்கணும் உனக்கு..??”

“தாமிராவுக்கு உங்களால எதும் ஆபத்து வந்ததான்னு தெரிஞ்சுக்கணும்..!!”

“ஹாஹா.. என்ன சொன்ன.. அவளுக்கு என்னால ஆபத்தா.. செம காமடி..!! அவளால இந்த ஊருக்கு வந்த ஆபத்தை சரி பண்றதுக்கு நான் இங்க தெனந்தெனம் முட்டி மோதிக்கிட்டு இருக்கேன்.. நீ என்னடான்னா.. ஹாஹா..!!”

“என்ன சொல்றீங்க.. அவளால இந்த ஊருக்கு என்ன ஆபத்து வந்துச்சு..??”

“என்ன.. அதுவும் உனக்கு மறந்துடுச்சா..?? அஞ்சு வருஷம் முன்னாடி குறிஞ்சி வீட்டுக்குள்ள போய்.. தாமிரா அந்த தகட்டை வெளில எடுத்தது உனக்கு ஞாபகம் இல்ல..?? அம்பது வருஷத்துக்கு மேல குறிஞ்சி இந்த ஊர்ல அட்டகாசம் பண்ணிட்டு இருந்தா.. அதுக்கப்புறம் எங்கப்பா எடுத்துக்கிட்ட முயற்சியால அவ ஆவியை இருவது வருஷமா அடைச்சு வச்சிருந்தோம்.. இந்த ஊரும் நிம்மதியா இருந்துச்சு..!! இருவது வருஷமா இருந்த அந்த அமைதியை.. அஞ்சு வருஷம் முன்னாடி அஞ்சே நிமிஷத்துல உன் தங்கச்சி காலி பண்ணிட்டா..!! இப்போ.. திரும்பவும் குறிஞ்சி அவ ஆட்டத்தை ஆரம்பிச்சுட்டா.. அஞ்சு வருஷத்துல எத்தனை பேர் காணாம போயிருக்காங்க தெரியுமா..?? அதுக்கெல்லாம் காரணம் யாரு..?? தாமிராதான்..!! மூடி வச்ச ஆவியை தெறந்து விட்டா.. அது அவளையே காவு வாங்கிடுச்சு..!!” முகிலனின் பேச்சு ஆதிராவுக்கு எரிச்சலை தந்தது.

“சும்மா இருங்கத்தான்.. தானா நடக்குறதுக்குலாம் தாமிரா மேல பழியை போடாதீங்க..!! அந்த இத்துப்போன தகட்டை வெளில எடுத்ததுக்கு.. இவ்வளவு பெரிய பேச்சுலாம் பேசாதிங்க..!! நீங்கவேணா இந்த மாந்திரிகம், பில்லி சூனியக் கருமாந்திரத்தலாம் நம்பலாம்.. கண்டகண்ட மந்திரவாதி பேச்சை கேட்டுக்கிட்டு கண்ணுமண்ணு தெரியாம ஆடலாம்.. இதெல்லாம் நான் நம்பமாட்டேன்..!! அந்த மந்திரவாதிக பேச்சை கேட்டு தாமிராவை ஏதாவது பண்ணிருப்பிங்களோன்னு கூட எனக்கு சந்தேகமா இருக்கு..!!” ஆத்திரத்தில் ஆதிரா அவ்வாறு ஆவேசமாக சொல்லிக் கொண்டிருக்கையிலேயே,

“கொழந்தை..!!”

என்று ஒருகுரல் அவளை இடையூறு செய்தது.. ஆதிரா உடனே தலையை திருப்பி குரல் வந்த திசையை பார்த்தாள்..!! முகிலனின் பிரத்தியேக அறை வாசலில் தாடி நீண்டிருந்த அந்த ஆள் நின்றுகொண்டிருந்தார்.. அகழி வந்த முதல்நாளன்று முகிலனின் வீட்டில் பூஜை நடத்திக் கொண்டிருந்த அதே ஆள்.. மாந்திரிகவாதி..!! அத்தனை நேரம் முகிலனின் அறைக்குள் அமர்ந்து வெளிப்பக்க பேச்சை கேட்டுக்கொண்டிருந்தவர்.. இப்போது வெளியே எழுந்து வந்திருந்தார்..!! அறைவாசலில் நின்று தலையை ஒருபக்கமாக சாய்த்து ஆதிராவையே கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தார்.. பிறகு மெல்ல நடந்து அவளை நெருங்கினார்..!!

“உன் பேர் என்னம்மா கொழந்தை..??” என்று கேட்டார்.

“…………………” ஆதிரா சற்றே திகைத்துப்போய் பேச்சு வராமல் நின்றிருந்தாள்.

“கேக்குறேன்ல.. சொல்லும்மா.. உன் பேர் என்ன..??”

“ஆ..ஆதிரா..!!” தடுமாற்றமாக சொன்னாள் ஆதிரா.

15

“ஹ்ம்ம்.. ஆதிரா.. நல்ல பேர்.. கண்ணகிக்கு நிகரான கற்புக்கரசி.. புருஷன் உசுரை காப்பாத்த தீயில பாஞ்சவ.. சரியா..??”

“…………………”

“ஆதிராக்கண்ணு தப்பா எடுத்துக்கலைனா நான் ஒரு விஷயம் சொல்லட்டுமா..??”

“சொ..சொல்லுங்க..!!”

“நமக்கு புரியலைன்றதுக்காக ஒரு விஷயத்தை பத்தி தப்பா சொல்றது.. ரொம்ப ரொம்ப தப்பு..!!”

“…………………”

“மனுஷங்கள்ல நல்லவங்க கெட்டவங்க இருக்குற மாதிரிதான்.. மாந்திரிகத்துலயும் நல்லது கெட்டது இருக்குது..!! அதுக்காக மாந்திரிகமே வேணான்னு சொல்லிடுறதா..?? மனுஷங்களே வேணாம்னு உலகத்தை அழிச்சுடலாமா..?? ம்ம்..??” கேட்டுவிட்டு அவர் புன்னகைக்க,

“…………………” ஆதிராவால் பதில் பேச முடியவில்லை.

“மாந்திரிகம்னாலே கெட்டதுன்னு இல்ல.. என்னை பாத்தா கெட்டவன் மாதிரியா இருக்கு உனக்கு..?? நாப்பது வருஷமா மாந்திரிகம் பண்ணிக்கிட்டு இருக்கேன்.. இதுவரை கெட்ட சக்திக்குத்தான் என்னால கெடுதல் வந்திருக்கே ஒழிய.. நல்லவங்க யாருக்கும் எந்த கெடுதலும் வந்தது இல்ல..!!”

“…………………”

“ரிக், யஜூர், சாமம், அதர்வணம்னு.. நாலு வகையான வேதம் கேள்விப் பட்ருக்கியா..?? அதுல அதர்வணம் என்னன்னு தெரியுமா..?? முழுக்க முழுக்க மாந்திரிகம்..!! நம்ம முன்னோர்ங்க நாலு வேதத்துல ஒண்ணா வச்சு மரியாதை செஞ்ச மாந்திரிகத்தை.. இந்த காலத்து புள்ளைங்க இவ்வளவு கேவலமா நெனைச்சுட்டு இருக்கீங்க.. என்னத்த சொல்றது..??”

Comments

Scroll To Top