ஆண்மை தவறேல் – 1

(Latest Tamil Sex Stories - Aanmai Thavarael 1)

Raja 2013-11-11 Comments

Latest Tamil Sex Stories – மீண்டும் ஒரு சிம்பிளான கதையை கையில் எடுத்திருக்கிறேன். கதை சொல்லும் விதத்தையும், இந்தக்கதைக்காக நான் உருவாக்கிய சில கேரக்டர்களையும் நம்பியே இந்தக்கதையை ஆரம்பிக்கிறேன். எது ஆண்மை..? எது ஆண்பிள்ளைத்தனம்..? என்பது பற்றி என்னுடைய கருத்தை இந்தக்கதையில் சொல்ல கொஞ்சம் முயற்சிக்கிறேன். கதை சற்று நிதானமாகவே நகரும். உங்களுடைய பொறுமைக்கு பெரும் சோதனை காத்திருக்கிறது. என்னுடைய முயற்சிகள் அனைத்தையும் இதுவரை உற்சாகப்படுத்திய உங்களிடம் இருந்து, இந்த முயற்சிக்கும் அத்தகைய உற்சாகத்தை எதிர்பார்த்து, இந்தக்கதையை ஆரம்பிக்கிறேன். நன்றி..!! – ஸ்க்ரூட்ரைவர்

aanmai3

அத்தியாயம் 1

அதிகாலை இருளில் அந்த இடம் தெப்பலாக நனைந்திருந்தது. நேரம் அப்போது 4.30..!! நான்கு புறமும் இரும்புக்கம்பி வேலிகளால் சூழப்பட்ட அந்தக் கட்டிடம், அந்த அதிகாலை இருளுக்குள் அமைதியாக நின்றிருந்தது. நான்கு அடுக்குகள் கொண்ட.. அகலமாய் விரிந்திருந்த.. பிரம்மாண்டமான கட்டிடம்..!! கட்டிடத்தை சுற்றிலும் உயரம் உயரமாய் வளர்ந்திருந்த பச்சை பசேல் மரங்கள், இப்போது கரிய நிறத்தில் காட்சியளித்தன.. காற்றுக்கு மெல்ல தலையசைத்துக் கொண்டிருந்தன..!!

அது ஒரு மாணவர் விடுதி.. கோவையில் இருக்கும் ஒரு பிரபலமான பொறியியல் கல்லூரிக்கு சொந்தமான மாணவர் விடுதி..!! மாணவர்கள் தங்கியிருந்த அறைகள் எல்லாம் இந்த நேரத்தில், விளக்குகள் அணைக்கப்பட்டு இருண்டிருந்தன. கேட்டுக்கு இருபுறமும் நின்றிருந்த உயரமான ஸ்டீல் போஸ்டுகளில் மட்டும் இரண்டு குழல் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. விளக்குகள் உமிழ்ந்த வெள்ளை நிற வெளிச்சத்தின் அடியில், வாட்ச்மேன் வாய் பிளந்தவாறு சேரில் உறைந்திருந்தான்.

கட்டிடத்தின் நான்கு அடுக்குகளிலும் தெரிந்த நூற்றுக்கும் மேற்பட்ட இருண்ட ஜன்னல்களில், ஒன்று மட்டும் இப்போது பளிச்சென வெளிச்சமாய் ஒளிர்ந்தது. விளக்கினை உயிர்ப்பித்த அசோக், உடனே கண்களை இறுக்கி மூடிக் கொண்டான். திடீர் வெளிச்சத்துக்கு கூசியதால், அவன் கண்களை மூடிக்கொள்ளவில்லை. அவனுடைய அறையின் சுவர் எங்கிலும் ஆபாச சித்திரங்கள் ஒட்டப் பட்டிருக்கும். அரைகுறை உடைகளோடு.. அளவுக்கு மீறி வளர்ந்திருக்கும் தங்களுடைய அங்கங்களை காட்டியவாறு.. பெண்கள் அந்த சித்திரங்களில் சிரிப்பார்கள். காலையில் எழுந்ததுமே அந்த ஆபாசத்தை காணக் கண்கூசிதான் அசோக் விழிகளை அவ்வாறு மூடிக்கொண்டான். இது தினமும் வழக்கமாக நடக்கும் ஒன்றுதான்.

கண்களை மூடிக்கொண்டவன், இரண்டு கைகளையும் முன்புறமாக நீட்டி.. சுவரையும், சுவரோடு பொருந்தியிருந்த அலமாரியையும் தடவி தடவியே.. அறையின் அடுத்த மூலையில் இருந்த அந்த டேபிளை அடைந்தான். அதன் மீதிருந்த அவனது பெட்டியை திறந்தான். உள்ளே கைவிட்டு தன் மூக்கு கண்ணாடியை தேடி அணிந்து கொண்டான். அப்புறம் தன் இமைகளை மெல்ல பிரித்தான். பெட்டியின் உட்புறமாக ஒட்டப்பட்டிருந்த விநாயகரின் படத்தில் கண் விழித்தான்.

சில வினாடிகள் கடவுளின் படத்தையே பார்த்துக் கொண்டிருந்தவன், அப்புறம் மெல்ல திரும்பி அறையை பார்வையிட்டான். சிறிய அறைதான். அறையின் இரண்டு ஓரங்களிலும், சுவரை ஒட்டி கிடக்கும் இரண்டு ஒற்றைக் கட்டில்கள்தான் பிரதானம். ஒரு கட்டிலில் முழு உடலையும் போர்வையால் போர்த்தியவாறு அவன் உறங்கிக் கொண்டிருந்தான். அசோக்கின் அறை நண்பன் புருஷோத்தமன்..!! அவன்தான் சுவற்றில் சிரிக்கும் சிங்காரிகளை வரைந்த ஓவியன். நல்ல ஓவியத்திறமை அவனுக்கு.. அந்த திறமையை இந்த மாதிரி ஓவியங்கள் வரைய பயன்படுத்திக் கொண்டிருக்கிறான்.

அசோக் ஒருமுறை விழிகளை சுழற்றி அந்த ஓவியங்களை பார்த்தான். அவனுடைய மனதினில் ஒரு கெட்ட விதமான காம எண்ணம் சரசரவென ஊற ஆரம்பித்தது. சில விநாடிகள்தான்..!! அப்புறம் படக்கென தலையை உதறிக் கொண்டு பார்வையை வேறு பக்கம் திருப்பினான். உடனடியாய் சுறுசுறுப்பானவன், டேபிளுக்கு அடியில் இருந்த பக்கெட்டை வெளியே இழுத்தான். ப்ரஷ் எடுத்து பேஸ்ட் பிதுக்கிக் கொண்டான். சோப்பு டப்பாவும், டவலும் எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறினான்.

அசோக்கின் சொந்த ஊர் சென்னைதான். செல்வ செழிப்பான ஒரு குடும்பத்தில் பிறந்தவன். அசோக்கிற்கு அம்மா கிடையாது.. அவனுக்கு ஐந்து வயது இருக்கும்போதே இவ்வுலகை விட்டு பிரிந்துவிட்டாள்..!! அசோக்குடைய அப்பா ஒரு தொழிலதிபர். மனைவி பிரிந்த பிறகு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளாமல், இனி மகன்தான் தன் ஒரே சொந்தம் என்று முடிவு செய்து கொண்டவர்.

அசோக் ஒரு அப்பாவி.. சிறுவயதில் இருந்தே அவனுக்கு வாய்த்த நண்பர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். யாருடனும் அவ்வளவு எளிதில் நெருங்கி பழகிவிட மாட்டான். உலக அறிவு என்பது அவனை பொறுத்தவரையில் ஒரு குறுகிய வட்டத்துக்குள்தான்..!! அவனுக்கு தெரிந்ததெல்லாம் படிப்பு.. படிப்பு.. படிப்புதான்..!! நீங்களும் தொடர்ந்து படியுங்கள்.. அசோக்கைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ளலாம்..!!

ஒரு பதினைந்து நிமிடங்களில் அசோக் மீண்டும் அறைக்கு திரும்பினான். இப்போது குளித்து முடித்து மிகவும் புத்துணர்வுடன் இருந்தான். வேறு உடைகளை அணிந்து கொண்டவன், திருநீறு அள்ளி நெற்றி நிறைய பூசிக்கொண்டான். மீண்டும் விநாயகர் படத்தை எடுத்து வைத்துக்கொண்டு அமர்ந்தான். கண்கள் மூடி பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தான். அவனுடைய உதடுகள் காரிய சித்தி மந்திரத்தை முணுமுணுத்துக் கொண்டிருந்தன..!!

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான் – விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினால் கண்ணிற் பணிமின் கனிந்து

ஒரு ஐந்து நிமிடங்களுக்கு மந்திரம் சொன்னவன், அப்புறம் புத்தகத்தை எடுத்து விரித்து வைத்து, படிக்க ஆரம்பித்தான். இன்றுதான் கடைசி செமஸ்டரின் கடைசி எக்ஸாம்..!! இன்றோடு இந்த இளநிலை இஞ்சினியரிங் டிக்ரிக்கான உழைப்பு ஒரு முடிவுக்கு வருகிறது..!! நான்காண்டுகளான.. இந்த கல்லூரி, இந்த ஹாஸ்டல் வாழ்க்கைக்கும் இன்றுதான் இறுதி நாள்..!! அசோக் அடுத்த ஒரு மணி நேரத்துக்கு அப்படியே உலகத்தை மறந்து, புத்தகத்துக்குள் மூழ்கிப் போனான்.

கிழக்கு இப்போது மெல்ல வெளுக்க ஆரம்பித்திருந்தது. ஹாஸ்டலிலும் இப்போது நிறைய ஜன்னல்கள் வெளிச்சத்தை வெளியிட ஆரம்பித்திருந்தன. வாட்ச்மேன் கூட விழித்துக்கொண்டு.. சும்மா நின்றிருந்த நாய்கள் மீது கல்லெறிந்து விரட்டியவாறு.. சுறுசுறுப்பாக காணப்பட்டான். ஹாஸ்டலுக்கு எதிர்ப்புறம் இருக்கும் டீக்கடை ஒன்றில், குத்துப்பாட்டு ஒன்று சத்தமாக ஒலித்தது. காலையிலேயே கண்விழித்துக் கொண்ட காகங்களும் குருவிகளும், கத்திக்கொண்டு அங்கும் இங்கும் இலக்கில்லாமல் பறந்தன.

படிப்பில் மூழ்கியிருந்த அசோக்கிற்கு திடீரென்றுதான் அது நினைவுக்கு வந்தது. புருஷோத்தமன் நேற்று இரவு எங்கோ சென்று ஊர் சுற்றிவிட்டு, நள்ளிரவுக்கு மேல்தான் அறைக்கு திரும்பினான். தூங்கிக்கொண்டிருந்த அசோக்கை எழுப்பி..

“அசோக்.. கா..காலைல ஒரு ஆறு மணிக்குலாம் என்னை எழுப்பி விட்ரு.. சரியா..?”

என்று ஆல்கஹால் ஸ்மெல்லுடன் வாய்குழற சொன்னான். அசோக்கோ தூக்கக் கலக்கத்துடன் முனகினான்.

“ம்ம்ம்…”

“த்தா.. மறந்துடாதடா..!! நா..நாளைக்கு எக்சாமுக்கு ஒரு மசுரும் படிக்கலை.. காலைல நீ எழுப்பி விடலைன்னா.. கப்புதான்..!!”

“ம்ம்ம்.. சரிடா..!!”

புருஷோத்தமனின் நினைவு வந்ததும், அசோக் உடனே டேபிள் மீதிருந்த கடிகாரத்தை பார்த்தான். ஆறு மணியாகி இப்போது ஐந்து நிமிடங்கள் ஆகியிருந்தன. சேரில் இருந்து எழுந்துகொண்ட அசோக், புருஷோத்தமனின் அருகில் சென்று அவனுடைய தோள்பட்டையை பற்றி உலுக்கினான்.

“டேய்.. புருசு.. டேய்..”

அவ்வளவுதான்..!! புருஷோத்தமன் படக்கென்று உடலை ஒரு சிலுப்பு சிலுப்பினான். போர்வைக்குள் இருந்து வெளிப்பட்ட அவனது வலது கால், அசோக்கின் வயிற்றிலேயே ஓங்கி ஒரு உதை விட்டது. நல்ல வலுவான உதை..!! அசோக் அப்படியே பொறி கலங்கிப் போய் நான்கைந்து அடிகள் பின்வாங்கினான். கண்களில் முணுக்கென்று கண்ணீர் கோர்த்துக் கொண்டது.

“அம்மாஆஆஆஹ்ஹ்..!!!”

என்று வலியில் முக்கியவாறு, வயிற்றைப் பிடித்துக்கொண்டு அப்படியே தரையில் அமர்ந்தான். உடலின் ஒவ்வொரு அணுவும் வேதனையில் துடிப்பதை அவனால் உணர முடிந்தது. கொஞ்ச நேரத்திற்கு மூச்சு விடவே அவனுக்கு மிகவும் சிரமமாக இருந்தது. பின்பு மூச்சு சீரானதும், வயிற்றைப் பிடித்துக் கொண்டு அவ்வாறு அமர்ந்த நிலையிலேயே மீண்டும் புருஷோத்தமனை அழைத்தான்.

“டேய்.. புருசு.. எந்திரிடா..!!” அசோக்கின் பரிதாப அழைப்புக்கு,

“ம்ம்ம்…” என்று ஒரு உறுமல் மட்டுமே புருஷோத்தமனிடம் இருந்து வெளிப்பட்டது.

அசோக் கொஞ்ச நேரம் அப்படியே அமர்ந்திருந்தான். அப்புறம் எழுந்து மீண்டும் புருஷோத்தமனை நெருங்கினான். இந்த முறை அவனுடைய தோளைப் பற்றி பலமாக உலுக்கிவிட்டு, அவன் உதை விடுவதற்குள், ஓடிப்போய் தூரமாக நின்றுகொண்டான். உதைத்துப் பார்த்து ஏமாந்த புருஷோத்தமன், கடுப்புடன் எழுந்து அமர்ந்தான். அறையின் ஓரமாக பம்மிக் கொண்டு நிண்டிருந்த அசோக்கை பார்த்து கை நீட்டி, கெட்ட வார்த்தைகளில் அர்ச்சனை செய்ய ஆரம்பித்தான்.

“த்தா.. நாறக்…, முட்டாப்……, ……, ……, ……, அறிவிருக்காடா..??”

Comments

Scroll To Top