நண்பனின் முன்னால் காதலி – 15

(Nanbanin Munnal Kadhali 14)

rahulraj 2015-09-06 Comments

This story is part of a series:

tamil udal uravu அதற்கு அப்புறம் சுவாதி கருவை கலைக்கமால் எப்போதும் போல வந்து ஹோஸ்டலுக்கு வந்து விட்டாள் .அவள் விக்கியிடம் அபார்சன் பண்ணமால் விட்டதை பற்றி எதுவும் சொல்லவில்லை அவனும் அவள் அபார்சன் பண்ணி இருப்பாள் என நினைத்து கொண்டு அவளுக்கு போன் எதுவும் பண்ணவில்லை .

மேலும் விக்கிக்கு வார நாட்களில் அவன் கம்பெனியில் வேலை அதிகமாக இருக்கும் அதனால் அவன் மற்ற விசயங்களில் கவனம் செலுத்த மாட்டான் .ஏன் அவன் பலவினமாக இருக்கும் பெண்கள் விசயம் கூட முன்பே சொன்னது போல் அவன் வார இறுதி நாட்களில் மட்டும்தான் வைத்து கொள்வான் .

அதனாலே அவன் மற்ற விசயங்களை ஞாபகம் வைத்து கொள்வதில்லை .

இப்படியாக ஒரு வாரம் சென்றது அவன் அன்று வழக்கம் போல வேலை முடித்து விட்டு வீட்டில் களைப்பில் படுத்து இருந்தான் .பின் அவன் வீட்டிற்கு வள்ளியும் மணியும் அவனை பார்க்க வந்தார்கள் .

என்ன இந்த பக்கம் ரெண்டு பேரும் வந்துருக்கிங்க என கேட்டான் விக்கி .சும்மாதாண்டா எனக்கு 6 மாசம் ஆச்சுல அதான் டாக்டர் கிட்ட போயி டெலிவரி டேட் கேட்டுட்டு வந்தோம் அப்படியே வர வழிலேயே உன் புது வீடு இருக்கறது ஞாபகத்துக்கு வந்துச்சு அதான் உன்னையே பாத்துட்டு அப்படியே அடுத்த மாச வளைகாப்புக்கு கூப்பிடலாம்னு வந்தேன் என்றாள் வள்ளி .

நல்லது என்னைக்கு டேட் சொல்லிருக்காங்க என கேட்டான் .அநேகமா ஜனவரி மாசம்னு சொல்லிருக்காங்க ஓரளவு கரெக்ட்டா எட்டாவது மாசம் சொல்லுவாங்க

ம்ம் என் பிள்ளை புது வருசத்துல பிறக்க போகுது என்று வள்ளி சிரித்து கொண்டு சந்தோசத்தோடு சொன்னாள் .

ஒரு வாரம் வேலைப்பளுவில் இருந்ததால் இந்த கர்ப்பம் ,குழந்தை என்கிற வார்த்தைகளை எல்லாம் சுத்தமாக மறந்து இருந்தான் விக்கி .இப்போது வள்ளி வந்து குழந்தை டெலிவரி என்று பேசவும் அவனுக்கு அப்போதுதான் சுவாதி ஞாபகம் வந்தது .அவள் இந்நேரம் கருவை கலைத்திருப்பாலா இல்லையா என்று யோசித்து கொண்டு இருந்தான் .கலைத்திருப்பாள் ஏன்னா என் மூலம் வர குழந்தையே எந்த பொண்ணு சுமப்பா அப்படின்னு நினைச்சு கிட்டு இருந்தான் .

மணி வந்து உன் வீட்ல திங்க எதாச்சும் இருக்கடா அப்படின்னு கேட்டப்பதான் அவன் நிஜ உலகத்துக்கு வந்தான் .கிச்சன்ல இருக்குடா சாப்பாட்டு ராமா என்றான் விக்கி சிரித்து கொண்டே

அவன் கிச்சன் போனதும் வள்ளி அவனிடிம் டேய் சுவாதி உன் ஆபிஸ்க்கு எல்லாம் வராலமே என்ன விஷயம் என்ன உங்க ரெண்டு பேருக்கும் லவ் வந்துருச்சா என்று கிண்டலடித்து சிரித்தாள் .

அத எல்லாம் ஒன்னும் இல்லை என்றான் வேகமாக .பின் அந்த பக்கம் இருந்து மணி எதையோ தின்னு கொண்டே வந்தான் . மணி வந்ததும் டேய் ஓட்ட வாயா சும்மா இருக்க மாட்ட எல்லா விஷயத்தையும் வீட்ல போயி உலறிடுவியா ரகசியமாவே எதையும் வச்சுருக்க மாட்டியா என்று அவனை திட்டினான் .

சாரி மச்சி ஆம்பிளக யார்கிட்ட வேணும்னாலும் ரகசியம் காக்கலாம் பொண்டாட்டிகிட்ட மட்டும் ரகசியம் காக்க முடியாது அது ரொம்ப கஷ்டம் என்று சொல்லி சிரித்தான் மணி .

சரி அவர விடு சுவாதி எதுக்கு உன் ஆபிஸ்க்கு வந்தா அத முத சொல்லு என்று வள்ளி ஆர்வமாக கேட்டாள் .

உண்மை விசயத்தை சொன்னால் வள்ளி ஆடி போயிடுவாள் .அதோடு சுவாதியை அபார்சன் பண்ண சொன்ன விஷயம் தெரிந்தால் எங்கிட்டும் வள்ளி கடுப்பில் பேசமால் கூட போயிடுவாள் என புரிந்து கொண்டு

ஒன்னும் இல்ல அவ பிரண்டுக்கு என் கம்பெனில ஏதும் வெகன்சி இருக்கான்னு கேட்டு வந்தா அதுவும் ஒரு தடவதான் வந்தா அவளவுதான் அதுக்கு அப்புறம் அவள நான் பாக்கவே இல்ல என்றான் .

நிஜம் சொல்றியா இல்ல பொய் சொல்றியா என்றாள் வள்ளி .நான் ஏன் பொய் சொல்ல போறேன் என கேட்டான் விக்கி .இல்ல உன் முகரைய பாத்தா ஏதோ மறைக்கிற மாதிரி இருக்கே என சந்தேகத்தோடு கேட்டாள் .

அதாலம் ஒன்னும் இல்லையே என்று விக்கி சமாளித்தான் .ஆனால் வள்ளி விடமால் சந்தேகத்தோடு இல்லையே என்று அவள் பேச ஆரம்பிக்கும் போது அவளுக்கு வாந்தி வந்து வேகமாக பாத் ரூம் போயி வாந்தி எடுத்து கொண்டு இருந்தாள் .

அதை பார்த்த விக்கி என்னடா எதுவும் கெட்டு போனாத சாப்பிடாலா இப்படி வாந்தி எடுக்குறா என மணியிடம் கேட்டான் .டேய் லூசு அது கர்ப்ப வாந்திடா மாசமா இருக்கப்ப பொண்ணுக இப்படிதான் வாந்தி எடுப்பாளுக என்றான் .

ஒ அப்படியா எனக்கு இந்த கர்ப்பம் ,குழந்தை ,கண்றாவி இத பத்தி எல்லாம் ஒன்னும் தெரியாதுடா என்று விக்கி சொன்னான்.

விக்கி அவனுக்கு கர்ப்பம் குழந்தை பற்றி சொல்லி கொண்டு இருக்கும் வேளையில் அவன் குழந்தையை அவனுக்கே தெரியமால் சுமந்து கொண்டு கர்ப்பமாக உள்ள சுவாதி ஹோஸ்டலில் அதே கர்ப்ப வாந்தியை எடுத்து கொண்டு இருந்தாள்.

சுவாதி கருவை கலைக்கமால் ஹோஸ்டல் வந்து யாருக்கும் தெரியமால் ஒரு வாரம் சமாளித்து விட்டாள் .அதே போல் தன் வேலை பார்த்த பாம்பே தமிழ் ஏப் எமில் இருந்தும் ஒரு இரண்டு வாரம் மெடிக்கல் லீவ் எடுத்து கொண்டாள் .

ஹோஸ்டலில் சுவாதியின் ரூம் மெண்டான அஞ்சலி அக்காவும் அவங்க வீட்டுகாரறரையும் குழந்தைகளையும் பார்க்க டெல்லி போனதால் இவள் மட்டும்தான் அந்த ரூமில் இருந்தாள் .அதுவும் அவளுக்கு சாதகமாகவே இருந்தது

அதனால் அவள்மட்டும் தனியாக இருந்ததால் அவள் நினைத்த நேரம் வாந்தி எடுத்து கொண்டு இருந்தாள் .

ஆனால் அன்று அஞ்சலி அக்கா ஊரில் இருந்து வரவும் இவள் சரியாக அந்நேரம் பாத் ரூமில் வாந்தி எடுத்து கொண்டு இருந்தாள் .

அவள் வாந்தி எடுப்பதை பார்த்த அஞ்சலி என்னடி நேத்து ஏதும் பார்ட்டி போயி நிறைய குடிச்சுட்டியா என கேட்டார்கள் .

அஞ்சலி அக்காவிடம் வாந்தி எடுத்த களைப்பில் மூச்சு வாங்கி கொண்டே வாங்கக்கா நீங்க எப்பக்கா வந்திங்க என சுவாதி கேட்டாள் .

நான் வரரது இருக்கட்டும் நீ எந்த பார்ட்டில போயிட்டு கண்டதையும் குடிச்சுட்டு வந்து இப்படி ஹங் ஓவர் ஆகி கிடக்க என கேட்டார்கள் .அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று சுவாதிக்கு தெரியவில்லை .ஆனால் உண்மையை மட்டும் அவர்களிடம் சொல்லமால் மறைக்க நினைத்தாள் .

அதலாம் பார்டி போயி எதுவும் குடிக்கலாக்கா நேத்து ரொம்ப ஆசையா இருந்துச்சுன்னு நம்ம பாய் கடைல போயி பிரியாணி வாங்கி சாப்புட்டேன் அது உடம்புக்கு ஒத்துக்கல போல என்று பொய் சொன்னாள் .

உனக்கு ஏண்டி இந்த ஆசை அப்படியே பிரியாணி சாப்படனும்னு உனக்கு ஆச இருந்துச்சுனா லீவ் நாள்ல சாப்புட்ருக்க வேண்டியதுதானே .ஏன் இப்படி வீக் டேஸ்ல சாப்புட்டு வேலையவும் கெடுத்துகிற உன் உடம்பையும்கெடுத்துகிற என்று அவர்கள் பேசி கொண்டு இருக்கும் போதே சுவாதிக்கு மீண்டும் குமட்டல் ஏற்பட அவசரமாக பாத் ரூம் போனாள் .

கதவை புட்டி விட்டு வாந்தி எடுத்து விட்டு மூச்சு வாங்கி கொண்டே வெளியே வந்தாள் .என்னடி ரொம்ப உடம்புக்கு முடியாட்டி வா ஹோஸ்பிட்டால் வேணும்னா போவோமா என கேட்டார்கள்.இல்லை வேணாம்க்கா என்று சொல்லி சமாளித்தாள் .

அதன் பின் ஒரு மூன்று நாட்கள் பூட் பாய்சன் ஆனது போல அஞ்சலி அக்காவிடம் சுவாதி நடித்தாள் .அஞ்சலி அக்காவும் வார நாட்கள் ஆனதால் வேலைக்கு போய் விடுவார்கள் .அதனால் ஓரளவு அவர்களுக்கு தெரியமால் மறைத்தாள் .

அன்று சனிகிழமை வந்தது அஞ்சலி அக்காவுக்கும் லீவ் என்பதால் ரூமில் அவளோடு இருந்தார்கள் .அன்றும் அவளுக்கு வழக்கம் போல வாந்தி வருவது போல இருந்தது .ஆனால் வாந்தி எடுத்தால் அஞ்சலி அக்கா கண்டுபுடித்து விடுவார்கள் என்று முடிந்த வரை அடக்கி கொண்டு இருந்தாள் .

Comments

Scroll To Top