ஆண்மை தவறேல் – 34

(Tamil Hot Sex Stories - Aanmai Thavarael 34)

Raja 2013-12-16 Comments

Tamil Hot Sex Stories – அறைக்கதவு திறக்கப்படும் ஓசை கேட்டதுமே டெய்ஸி, அசோக்கின் மடியில் இருந்து படக்கென எழுந்து கொண்டாள். வாசலில் நின்ற இருவரையும் பார்த்து திருதிருவென விழித்தாள். தந்தையையும் மனைவியையும் அத்தகைய சூழ்நிலையில் காணநேர்ந்த அசோக்கோ, அப்படியே தளர்ந்து போனான். தலையை பிடித்துக் கொண்டான். மஹாதேவனும், நந்தினியும் இன்னுமே தாங்கள் கண்ட காட்சியை நம்பமுடியாதவர்களாய் நின்றிருந்தார்கள். மஹாதேவன் தன் மகனையே எரித்துவிடுவது போல பார்த்துக் கொண்டிருக்க, நந்தினியோ விரிந்த விழிகளும், வாய் பொத்திய கையுமாக நின்றிருந்தாள்.

c5

முதலில் சுதாரித்துக்கொண்டது டெய்ஸிதான்..!! அதற்கு மேலும் அந்த இடத்தில் நிற்பது நல்லது அல்ல என்பதை உடனே புரிந்து கொண்டாள்…!! டேபிள் மீதிருந்த தனது ஹேன்ட் பேகை எட்டி எடுத்துக் கொண்டாள்..!! அதுவரை செய்ததெல்லாம் பத்தாது என்று..

“பை அசோக்.. நான் கெளம்புறேன்.. ஸீ யு லேட்டர்..!!”

என்று பதட்டமாய் சொல்லிவிட்டு.. அசோக்கின் நிலையை மேலும் கவலைக்கிடமாக்கிவிட்டு.. அந்த அறையை விட்டு கிளம்பினாள்..!!

மஹாதேவனுக்கும், நந்தினிக்கும்.. அசோக்கை பார்க்க பார்க்க.. ஒரு உச்சபட்ச கோபம், உடலெல்லாம் பற்றிக்கொண்டு எரிந்தது. அவன் செய்ததாக அவர்கள் கருதிய காரியம், அவர்கள் இவருடைய நெஞ்சையுமே குமுற செய்தது..!! இருவருக்குமே அவனுடைய பெண்கள் சகவாசம் பற்றி ஏற்கனவே தெரியும்.. இருந்தாலும் கண்ணுக்கேதிரே அதை காண நேரிடும்போது..???

கணவனுடைய மடியில் இன்னொரு பெண் அமர்ந்து முத்தமிடுவதை கண்ட அதிர்ச்சியில்.. நந்தினிக்கு மயக்கம் வரும்போல் இருந்தது.. நெஞ்சை அடைத்த துக்கத்தில் கண்கள் உடனே கலங்கிப்போயின..!! மஹாதேவனுக்கோ வேறுமாதிரியான கோபம்.. தான் கோவிலாக கருதிய அலுவலகத்தை, கூத்தடிக்கிற இடமாக மகன் மாற்றி விட்டானே என்று கட்டுக்கடங்காத ஆத்திரம்..!! அந்த ஆத்திரத்தை அடக்க முடியாதவராக அசோக்கை பார்த்து கத்தினார்..!!

“ச்ச்சை.. நீயெல்லாம் ஒரு மனுஷனாடா..?? இப்படி ஆபீஸுன்னு கூட பாக்காம அசிங்கமா..!!! உன்னல்லாம் புள்ளைன்னு சொல்லிக்கிறதே எனக்கு வெக்கமா இருக்குடா..!!”

“டாட் ப்ளீஸ்.. நா..நான் சொல்றதை கொஞ்சம்..” அசோக் பரிதாபமாக சொன்னான்.

“பேசாதடா.. என் மூஞ்சிலையே இனி முழிக்காத.. எக்கேடோ கெட்டு ஒழி..!! உனக்கு மனசாட்சின்னு ஒன்னு இருந்தா.. தயவு செஞ்சு இனிமே நீ கூத்தடிக்க, இந்த ஆபீஸை யூஸ் பண்ணாத.. உன்னை கையெடுத்து கும்புட்டுக்குறேன்..!!” என்றவர் நந்தினியிடம் திரும்பி,

“வாம்மா.. போலாம்..” என்றார்.

நந்தினி அவருக்கு எந்த பதிலும் சொல்லாமல், சில வினாடிகள் அப்படியே சிலை மாதிரி நின்றிருந்தாள். அவளுடய கலங்கிய கண்கள் இரண்டும், தலை கவிழ்ந்து நின்றிருந்த கணவனையே வெறித்துக் கொண்டிருந்தன. அப்புறம் விழிகளில் வழிந்த நீரை துடைத்துக்கொண்டே, மாமனாரிடம் மென்மையான குரலில் சொன்னாள்.

“நீங்க போங்க மாமா.. அவர் பசில இருப்பாரு.. நான் சாப்பாடு குடுத்துட்டு வர்றேன்..!!”

மருமகள் சொன்னதை கேட்ட மஹாதேவன், அதற்கு என்ன பதில் சொல்வது என்றுகூட புரியாமல் திகைத்தார். மகனையும் மருமகளையும் ஓரிரு முறை மாறி மாறி பார்த்தார். அப்புறம் அசோக்கை ஏறிட்டு முறைத்து, ‘ச்ச்சை….!!!’ என்று மீண்டும் ஒரு முறை வெறுப்பை உமிழ்ந்துவிட்டு, அந்த அறையில் இருந்து வெளியேறினார்.

வெளியே வாசலுக்கருகிலேயே கற்பகம் தலை கவிழ்ந்தவாறு நின்றிருந்தாள். என்ன நடந்திருக்கிறது என்பதை அவள் முழுமையாக புரிந்து கொண்டிருக்கிறாள் என்று அவளுடைய முகமே காட்டியது. உள்ளே மஹாதேவன் போட்ட சப்தத்திற்கு, ஆபீசில் ஆங்காங்கே ஆட்கள் எழுந்து நின்றிருந்தார்கள். இப்போது அவரை கண்டதும் அனைவரும் மீண்டும் தங்கள் இருக்கையில் அமர்ந்து கொண்டு, வேலை பார்ப்பது மாதிரி நடித்தார்கள்.

“உ..உள்ள நடந்த அசிங்கம்.. வெளில ஸ்ப்ரெட் ஆகாம.. கொ..கொஞ்சம் பாத்துக்கோ கற்பகம்..” இறுகிய குரலில் சொன்ன மஹாதேவன்,

“ம்ம்.. சரி ஸார்..” என்று கற்பகம் சொன்னதை கூட காதில் வாங்காமல் அங்கிருந்து கிளம்பினார்.

அறைக்கு உள்ளே.. தொண்டையை அடைக்கும் துக்கத்தை கட்டுப் படுத்திக் கொண்டு, சாப்பாட்டு கூடையை பிரித்தவாறே நந்தினி சொன்னாள்.

“வாங்க.. சாப்பிடலாம்..”

“ந..நந்தினி.. இங்க என்ன நடந்ததுன்னு..” அசோக் கெஞ்சும் குரலில் ஆரம்பிக்க,

“நான் உங்ககிட்ட இப்போ எதுவுமே கேக்கலையே..?” நந்தினி வெடுக்கென வெட்டினாள்.

“இ..இது.. சுத்தமா எ..எதிர்பார்க்காம..”

“ஆமாம்.. நாங்க திடீர்னு வந்து நிப்போம்னு எதிர்பார்த்திருக்க மாட்டீங்க..!!”

“ஐயோ நந்தினி.. உனக்கு நான் எப்படி சொல்லி..”

“மொதல்ல சாப்பிடுங்க.. அப்புறம் பேசலாம்..!!”

நந்தினி பிடிவாதமாக இருக்கவும், அசோக் களைத்துப் போனான். அப்படியே சோர்ந்து போய் சேரில் அமர்ந்தான். நந்தினி அவனுக்கு உணவு பரிமாறினாள். இருவரும் எதுவும் பேசிக்கொள்ளாமலேயே.. ஒரு இறுக்கமான சூழ்நிலையுடனே.. அசோக் சாப்பிட்டான்..!! அவ்வப்போது மனைவியின் முகத்தை ஏறிட்டு பார்த்தான். அது சலனமற்று கிடப்பதை பார்த்து கலங்கினான். நந்தினியோ கண்களில் துளிர்த்த நீரை, அசோக் அறியாமல், அவ்வப்போது வேறுபக்கமாக திரும்பி துடைத்துக் கொண்டாள்.

ஒரு ஐந்து நிமிடங்கள்.. அசோக் அரைகுறையாக சாப்பிட்டு முடித்தான்..!! நந்தினி உணவு கொண்டு வந்த பாத்திரங்களை மீண்டும் கூடைக்குள் அள்ளிப் போட்டுக்கொண்டு கிளம்பினாள். அசோக் மீண்டும் கெஞ்சலாக ஆரம்பித்தான்.

“ப்ளீஸ் நந்தினி.. நீயாவது நான் சொல்றதை கொஞ்சம் கேளு..”

“எனக்கு இப்போ கேக்குற மூடு இல்ல.. நான் கெளம்புறேன்..” சொல்லிவிட்டு அவள் நகர முற்பட,

“நந்தினி ப்ளீஸ்..” அசோக் அவளுடைய புஜத்தை எட்டி பற்றினான்.

“ப்ச்.. கையை விடுங்க..”

அவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த கோபம், இப்போது நந்தினியிடம் வெளிப்பட்டது. கையை பறித்துக்கொண்டு, கணவனிடம் வெறுப்பை உமிழ்ந்துவிட்டு, அங்கிருந்து நகர முயன்றாள். தான் அவ்வளவு தூரம் கெஞ்சியும் அவள் தன்னை உதாசீனப்படுத்தவும், அசோக்கால் அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவசரமாக பாய்ந்து சென்று நந்தினியின் முன் கை நீட்டி அவளை வழி மறித்தான்.

“சொல்றதை கேட்டுட்டு போடீ.. ப்ளீஸ்..!!” என்று கெஞ்சும் குரலிலேயே சொன்னான்.

“என்ன சொல்லணும்..??” நந்தினி இப்போது சீற்றமாக கேட்டாள்.

“இங்க பாரு.. டென்ஷனாகாத.. கொஞ்சம் பொறுமையா கேளு.. உனக்கு புரியும்..”

“இன்னும் நீங்க சொல்லி புரியிறதுக்கு என்ன இருக்கு.. அதான் நீங்க பண்ற காரியம் ஒவ்வொன்னும்.. சொல்லாமலே எல்லாத்தையும் புரிய வைக்குதே..? மாற மாட்டீங்கல்ல நீங்க.. மாறவே மாட்டீங்கல்ல..??” நந்தினி கத்த,

“கத்தாத ப்ளீஸ்..!!” அசோக் பதறினான்.

“ஏன்.. கத்தினா என்ன..?? இப்படி ஒரு காரியம் நீங்க பண்ணினா.. கத்தாம என்ன பண்றது..??”

“அ..அவசரப்படாத நந்தினி.. இ..இங்க இப்போ நடந்தது.. இட்ஸ் அன் ஆக்ஸிடன்ட்..!!”

“ஆமாம்.. உங்களுக்கு எல்லாம் ஆக்ஸிடன்ட்தான்..!! அன்னைக்கு மொட்டை மாடில நடந்தது ஒரு ஆக்ஸிடன்ட்.. இன்னைக்கு ஆபீஸ்ல நடந்தது ஒரு ஆக்ஸிடன்ட்..!! நீங்கபாட்டுக்கு உங்க இஷ்டத்துக்கு இப்படி ஆக்ஸிடன்டா பண்ணிட்டு போங்க.. எதுக்க வர்ற நாங்கல்லாம் அடிபட்டு செத்துட்டு இருக்குறோம்..!!”

“ஹேய்.. அறிவில்லாம பேசாத..!!”

“எல்லாம் அறிவோடதான் பேசுறேன்..!! இத்தனை நாளா.. நைட்ல கெஸ்ட் ஹவுஸ்ல கூத்தடிச்சுட்டு இருந்தீங்க..!! இப்போ.. பட்ட பகல்ல ஆபீஸ்லேயே கூத்தடிக்க ஆரம்பிச்சுட்டீங்க..!! அவ்வளவுதான..?? இதுக்கெதுக்கு ஆக்ஸிடன்ட் அது இதுன்றீங்க..??”

“ஐயோ நந்தினி..!! நான் அவளை இங்க வர சொல்லல.. அவளா வந்தா.. வேலை வேணும்னு கெஞ்சினா.. தரமுடியாதுன்னு சொன்னதும் கொஞ்சினா..!! திடீர்னு என் மடில உக்காந்து.. நான் சொல்ல சொல்ல கேட்காம..”

“இதை என்னை நம்ப சொல்றீங்களா..??”

“நடந்தது அதுதான் நந்தினி.. நீ நம்பித்தான் ஆகணும்..!!”

“எப்படி நம்புறது..?? நீங்கதான் படுத்தவளுகளைலாம் போட்டோ புடிச்சு ஆல்பம் போட்டவராச்சே..?? ஆயிரம் பேரா அந்த கவுன்ட்டை மாத்தி காட்டுறேன்னு சவால் விட்ட ஆளாச்சே..?? எப்படி நம்புறது..??”

“ஐயோ.. அதெல்லாம் அப்போ.. இப்போ நான் அந்த மாதிரிலாம் நெனைக்கலை..!!”

“எப்படிங்க..?? எப்படி உங்களால இப்படி பேச முடியுது..?? கொஞ்ச நேரம் முன்னாடி ஒரு பொண்ணை மடில வச்சு கொஞ்சிட்டு.. இப்போ அப்படிலாம் நெனைக்கலைன்னு வாய் கூசாம பொய் சொல்ல முடியாது..??” நந்தினி வீசிய வார்த்தைகள் அசோக்கிற்கு எரிச்சலை உண்டு பண்ணின.

“இங்க பாரு.. சும்மா கத்தாத..!! நடந்தது என்னன்னு நான் சொல்லிட்டேன்.. அதை நம்ப மாட்டேன்னு சொன்னா.. தப்பு உன் மேலதான்..!!” என்று சீற்றமாக சொன்னான்.

“ஓஹோ.. தப்பு என் மேலயா..?? பிரம்மாதம்..!! பண்ற தப்பெல்லாம் நீங்க பண்ணிட்டு.. பழியை அழகா அடுத்தவங்க மேல தூக்கி போடுற ஆள்தான நீங்க..?? காலைல கூட உங்க திறமையை பாத்தேனே..?? பிரம்மாதம்..!!!!”

Comments

Scroll To Top