இது மழை மேகம் – 1

(Tamil Hot Sex Stories - Idhu Mazhai Megam 1)

Raja 2016-06-26 Comments

This story is part of a series:

‘ டேய் நிரு.. சாப்பிட போலான்டா.. எனக்கு பசி வயித்த கிள்ளுது !” என்று கொஞ்சம் பரிதாபமாக சொன்னான் நந்தா.

நான் ஜன்னல் வழியாக பார்த்துவிட்டு சொன்னேன்.
” மழை இன்னும் ஓயலடா.. !!”

” இந்த மழை ஓயாது. விடியறவரை இப்படியேதான் நை.. நைனு பேஞ்சிட்டிருக்கும்.. அத பாத்தேன்னா.. அப்றம் பட்டினி கெடந்து சாக வேண்டியதுதான்.!! எந்திரிச்சு வா.. இன்னும் அரைமணி நேரம் போச்சுன்னா.. மெஸ்ஸையும் க்ளோஸ் பண்ணிருவாங்க.. !!” பொருமை இழந்தவனாக சட்டையை எடுத்து மாட்டினான். கண்ணாடி முன்னால் போய் நின்று பரபரவென தலை வாரினான்..!!

நான் நேரம் பார்த்து விட்டு மெதுவாக எழுந்தேன். ஒன்தரை மணி ஆகி விட்டது..! எதுவும் பேசாமல் என் சட்டையை எடுத்து மாட்டினேன். !

ஜன்னல் வழியாக வெளியே பார்த்தேன். எதிரில் இருக்கும் தெரு விளக்கு வெளிச்சத்தில்.. மழை பொழிந்து கொண்டிருப்பது அழகாக தெரிந்தது. !

சட் சட்டென டிவி.. மெதுவாக சுழன்ற பேன் எல்லாத்தையும் ஆப் செய்தான் நந்தா. கையில் பூட்டை எடுத்துக் கொண்டு முன்னால் போனான்.

நான் கண்ணாடி முன்னால் போய் நிற்க…
” இந்த நேரத்துல உன்ன பாக்க எந்த கிளியோ பாட்ராவும் வர மாட்டா.. வாடா.. !!” என்றான்.

” உன்ன பாக்க மட்டும் எந்த கிளியோ பாட்ரா வரானு.. அந்த வாரு வாரின.. ??” நான் சிரித்தபடி கேட்டுக் கொண்டே.. தலை முடியை இரண்டு இழப்பு இழுத்துவிட்டு முன்னால் போனேன். !

என்னை வெளியே இழுத்து விட்டு கதவை அறைந்து சாத்தி.. பூட்டை மாட்டினான்.!

” ஏன்டா மத்யானம் சாப்பிட்ட இல்ல.. ??” என்று கேட்டேன்.

” பத்தலடா.. இப்ப வயிறு கபகபனு இருக்கு.. !!”

லேசான மழை தூரல்தான். ஆனாலும் தலை நனைந்து விடும். பரவாயில்லை..அல்லது வேறு வழி இல்லை.. நனைந்து கொண்டாவது போய்த்தான் ஆக வேண்டும்..!!

படியில் இறங்கினோம். முன்னால் போன நந்தா காம்போண்ட் கேட்டை திறந்து வெளியேற.. நான் அவனுக்கு பின்னால் போக..

” என்னங்க.. !!” என பின்னால் இருந்து குரல் கேட்டது.

திரும்பி பார்க்க.. கேட்டை ஒட்டி இருக்கும் வீட்டின் ஜன்னலில் வினிதாவின் முகம் தெரிந்தது.

” என்னங்க.. ??” நான் அவளை கேட்டேன்.

” கடைக்கா போறிங்க. .??”

” ஆமா.. ஏங்க ..??”

” மெஸ்ஸுக்கா.. ??”

” ஆமாங்க சாப்பிட போறோம்.. !!”

” ஒரு நிமிசம் எனக்கு ஒரு சின்ன ஹெல்ப் பண்றிங்களா.. ப்ளீஸ்.. ??” முகத்தை குழைவாக வைத்துக் கொண்டு கேட்டாள்.

” சொல்லுங்க.. என்ன பண்ணனும் ??”

” வரப்ப.. அப்படியே எனக்கும் ரெண்டு தோசை மட்டும் கட்டிட்டு வந்தர்றிங்களா.. ப்ளீஸ்.. !!” என்றாள்.

” ம்ம்.. சரிங்க . !!”

” தேங்க்ஸ்.. இந்தாங்க காசு.. !!” ஜன்னல் வழியாக பணத்தை நீட்டினாள்.

” பரவால்ல வெய்ங்க..!! ரெண்டு தோசைதான..!! நான் வாங்கிட்டு வரேன்..!!” எனச் சொல்ல..

” ஒரு நிமிசம்.. வாங்கிக்கோங்க.. ப்ளீஸ்.. !!” என்றாள்.

”ஏங்க நாங்க வாங்கி குடுத்தா சாப்பிட மாட்டிங்களா..??”

” ச்ச.. அப்படி எல்லாம் இல்ல..!! சரி.. உங்க விருப்பம்..!! மழைல நனைஞ்சிட்டா போறீங்க.. ?? இருங்க கொடை இருக்கு தரேன்..!!” என அவள் தயாராக எடுத்து வைத்திருந்த குடையை எடுத்து நீட்டினாள்.

” பரவால்ல.. !!” என்றாலும் குடை தேவைப் படலாம் என்பதால்.. ஜன்னல் பக்கத்தில் போய் குடையை வாங்கிக் கொண்டேன்.
”தேங்க்ஸ்ங்க.. !!”

” அயோ.. நான்தான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லனும்..!!” அவள் சிரிக்க..

”பரவால்ல விடுங்க ரெண்டு பேருமே சொல்லிக்கலாம்..!!” எனச் சிரித்து விட்டு.. குடையை விரித்து பிடித்துக் கொண்டு நடந்தேன்.

நந்தா கொஞ்சம் கடுப்பாக என்னை முறைத்தான்.
”ஏன்.. அவ போய் வாங்க மாட்டாளாமா.. ரெண்டு தோசை..??”

” தெரியல.. !!”

” நீ என்ன அவளுக்கு வேலைக்காரனா..?? அவ பெரிய மகாராணி..!! மூஞ்சியும் அவளும்..!!”

நான் சிரித்தபடி அவனுக்கும் சேர்த்து குடை பிடிக்க.. விலகி தள்ளி நடந்தான்.
”இதுல கொடை வேற.. ?? இருக்கற லட்சணத்துக்கு.. ! நீயே புடிச்சுக்கோ.. எனக்கு வேண்டாம்..!!”

நான் நனையாமல் இருக்க எனக்கு மட்டும் குடை பிடித்துக் கொண்டேன்.!!

நான் நிருதி..!! நந்தா என் நண்பன்..!! நாங்கள் இரண்டு பேரும் ஒரே ஊர்க்காரன்கள்..!! எங்கள் ஊர் பக்கத்தில் வேலை கிடைக்காததால் இங்கு ஒரு பேப்பர் மில்லில் ஒரு சுமாரான சம்பளத்தில் வேலை செய்கிறோம்..!! குறைவான வாடகையில் ஒரு ரூம் எடுத்து தங்கியிருக்கிறோம்..!!

எங்கள் காம்போண்டில் ஆறு வீடுகள் இருக்கின்றன.! அதில் நான்கில் குடும்பங்கள் இருக்கிறது..!! அதில் ஒரு குடும்பம்தான் இந்த வினிதாவுடையது.!! அவளுக்கு இரண்டு குழந்தைகள். கணவன் ஒரு லாரி டிரைவர். அதிகமாக வீட்டிலேயே இருக்க மாட்டான்..!!

சரி.. அவளுக்கும் நந்தாவுக்கும் என்ன மோதல் என்று கேட்கிறீர்களா..?? அது சிம்பிள் மேட்டர்தான்..!!
மொட்டை மாடியில் ஒரு முறை அவள் துவைத்த துணிகளை எல்லாம் காயப் போட்டிருந்தாள். நாங்கள் தம்மடிக்க மொட்டை மாடிக்கு போனபோது.. கொடியில் தொங்கிக் கொண்டிருந்த வினிதாவின் பிரா ஒன்று காற்றில் பறந்து வந்து நந்தாவின் காலடியில் விழ.. அதை குனிந்து எடுத்தவன்.. கொடியில் போடாமல் கையில் வைத்து பார்த்தான்.!

அது மிகவும் சின்ன சைஸ் பிரா. அதை பார்த்தவன்..
” என்னடா இது.. கொழந்த புள்ளைங்க போடற சைசா இருக்கு.. ?? இதெல்லாம் ஒரு சைசுன்னு.. இத வேற வாங்கி போடாட்டித்தான் என்ன.. ?? பாவன்ட மனுஷன்.. வண்டிக்கு போய்ட்டு காஞ்சு தேஞ்சு வருவான். இங்க வந்தா.. இத பாத்து எப்படிடா மூடு வரும் அவனுக்கு..??” என அவன் சொல்லி முடிக்க…

” பொருக்கி… மூடு வராமயா நான் ரெண்ட பெத்தேன்.. !!” என சூடாக எங்களுக்கு பின்னாலிருந்து குரல் கேட்டது.
திரும்பி பார்த்தால் வினிதா. !
நான் ஆடிப்போய் நிற்க.. இன்னும் ஏதேதோ வார்த்தைகளை எல்லாம் அள்ளித் தெளித்து விட்டு அவன் கையில் இருந்த அவளது பிராவை லபக்கென பிடுங்கிக் கொண்டாள்.!
அவள் தூணிகளை எடுத்துக் கொண்டு போகும் வரை அவளது அர்ச்சனை ஓயவெ இல்லை. !
வீட்டு ஓனரிடம் சொல்லி எங்களை காலி செய்ய வைப்பதாக எல்லாம் திட்டிக் கொண்டிருந்தாள்..!!

நாங்கள் பேசவே இல்லை. அமைதியாக திட்டு வாங்கிக் கொண்டோம்..! அவள் அதை வெளியே சொல்லவில்லை என்றாலும் அதற்கு பிறகு.. நந்தாவுக்கு அவளைக் கண்டாலே பிடிக்காமல் போய் விட்டது..!
ஆனால் என்னை நேராக பார்க்கும் தருணங்களில் ஒரு சிரிப்பைக் காட்டிவிட்டு போவாள்..!!

வினிதா.. இரண்டு குழந்தைகளை பெற்றிருந்தாலும்.. அழகாகத்தான் இருப்பாள். லீன் பாடி. குட்டி முலைகள். ஆனால் கொஞ்சம் கூடுதல் நிறம் கொண்டவள். ஷார்பபான மூக்கும்.. மெல்லிய அழகான உதடுகளும் கொண்டவள்.! எப்போதும் நீட்டாக குளித்து.. கொஞ்சம் பதவிசாகத்தான் தோற்றம் தருவாள்.! கத்தி பேச மாட்டாள்.! தவறான வார்த்தைகளும் பேச மாட்டாள்..!
அவளது பையன்.. பெண்.. இரண்டு பேரும்… அவளது முக ஜாடையை உரித்து வைத்தது போலதான் இருப்பார்கள். இவளை போலவே.. அவர்களுக்கும் ஈர்க்குச்சி போல உடம்பு..! ஆனால் பையன் சரியான வாலு..!!

நாங்கள்தான் கடைசி. மெஸ்ஸில் சாப்பிட்ட பின் இரண்டு தோசை கட்டிக் கொண்டு.. எங்கள் அக்கவுண்டில் எழுதி விட்டு திரும்பினோம்.!

நந்தா நேராக ரூம்க்கு போய்விட்டான். நான் வினிதா வீட்டு ஜன்னல் பக்கத்தில் போய் நின்று..
”இருக்கிங்களா ?” என குரல் கொடுத்தேன்.

டிவி பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தவள் சட்டென எழுந்து வந்தாள். நான் ஜன்னல் வழியாக நீட்ட வாங்கிக் கொண்டாள்.
”ரொம்ப தேங்க்ஸ்ங்க..!!” என்றாள்.

” யாருக்குங்க தோசை ??” நான் கேட்டேன்.

” எனக்குதாங்க… அவங்கள்ளாம் சாப்பிட்டு படுத்து தூங்கிட்டாங்க..!! மாவு வெச்சிருந்தேன். எனக்கு தெரிஞ்ச அக்கா ஒருத்தங்க வந்தாங்களா.. அவங்களுக்கு தோசை சுட்டு குடுத்தேன்.! அதுல மாவு தீந்து போச்சு.! எனக்கு ஒருத்திக்கு சாப்பாடு வெச்சா.. நெறைய வேஸ்ட்டா போகும்.. அதான் ரெண்டு தோசை வாங்கிக்கலாம்னு.. நானே போலாம்னுதாங்க இருந்தேன்.. ஒரு பக்கம் இந்த மழை வேற.. இங்க கொழந்தைங்க பக்கத்துலயும் யாரும் இல்ல.. ! நல்ல வேள.. அப்பதான் நீங்க வந்திங்க..! உங்களுக்கு சிரமம் குடுத்துருந்தா ஸாரிங்க..!!” அவள் நீளமாக பேசியதும்.. என்னிடம் அன்னியோன்யமாக பேசியதும் எனக்கே சற்று வியப்பாகத்தான் இருந்தது.

Comments

Scroll To Top