ஆண்மை தவறேல் – 37

(Tamil New Sex Stories - Aanmai Thavarael 37)

Raja 2013-12-19 Comments

Tamil New Sex Stories – ஜூஸை அவசரமாக குடித்து முடித்து விட்டு எழுந்தான். மெல்ல நடந்து அவர்கள் அறைக்கு சென்றான். உள்ளே நந்தினி கட்டிலில் அமர்ந்திருந்தாள். சலவை செய்து உலர்த்தப்பட்டிருந்த ஆடைகள் எல்லாம் மெத்தையில் பரவிக்கிடக்க, அதை அழகாக மடித்து வைத்துக் கொண்டிருந்தாள். இவன் உள்ளே நுழைந்ததும் ஒருகணம் நிமிர்ந்து பார்த்தாள். அப்புறம் மீண்டும் துணி மடிக்கும் வேலையில் கவனத்தை செலுத்திக்கொண்டே, கேஷுவலான குரலில் கேட்டாள்.

“என்னப்பா.. இன்னைக்கு ரொம்ப சீக்கிரமே வந்துட்டீங்க..??”

“ஏன்.. வரக் கூடாதா..??” அசோக்கின் குரலில் ஒருவித எரிச்சல்.

“இல்ல.. கெஸ்ட் ஹவுஸ் பக்கம்லாம் போனா.. வர்றதுக்கு பன்னெண்டு மணி ஆயிடுமே.. இன்னைக்கு எட்டு மணிக்குலாம் வந்து நிக்குறீங்களேன்னு கேட்டேன்..?? வேஸ்டா அது..??”

“எது..??”

“அதான்.. இன்னைக்கு வந்த ஐட்டம்..!!”

“அடச்சை.. ஒரு பொண்டாட்டி புருஷன்ட்ட பேசுற மாதிரியா பேசுற..??”

“பார்டா.. இவர் மட்டும் பொண்டாட்டிக்கிட்ட ‘ஒரு ஐட்டத்தோட ஜல்சா பண்ணிட்டு இருக்கேன்’னு சொல்வாராம்.. நான் இப்படி பேசக் கூடாதுக்கும்..??”

“ஏய்.. என்ன ஆச்சு உங்க எல்லாருக்கும் இப்போ..??” அசோக் இப்போது பொறுக்க முடியாதவனாய் கேட்டான்.

“என்ன ஆச்சு.. ஒன்னும் ஆகலையே..??” நந்தினியோ கிண்டலாக சொன்னாள்.

“இல்ல.. என்னமோ நடந்திருக்கு..!!”

“அதான் ஒன்னுல்லன்னு சொல்றேன்ல..?”

“அப்புறம் ஏன்.. எங்கிட்ட எல்லாம் இப்படி பேசுறீங்க..??”

“எப்படி பேசுறோம்..??”

“ந..நல்லா பே..பேசுறீங்க..” சொல்லும்போதே ஏதோ உளறுகிறோமோ என்று அசோக்கிற்கு ஒரு சந்தேகம். நந்தினி பிடித்துக் கொண்டாள்.

“ஐயா ராசா.. உங்ககிட்ட நல்லா பேசுறது ஒரு குத்தமா..??”

“ப்ச்.. அதுக்கில்ல.. ஆபீஸ்ல நடந்த அந்த மேட்டர்.. யாருக்கும் என் மேல கோவம் இல்லையா..??”

“அதான் உங்க மேல எந்த தப்பும் இல்லைன்னு சொன்னீங்கள்ல..?? அப்புறம் என்ன..??”

“இல்ல.. நான் அப்போ சொன்னதைத்தான் நீங்க நம்பலையே..?? அதுக்கப்புறம் என்னமோ நடந்திருக்கு.. அதான் எல்லாம் இப்படி பிஹேவ் பண்றீங்க..!! என்னாச்சு..?? என்ன வச்சு ஏதாவது காமடி கீமடி பண்றீங்களா..??”

“ச்சேச்சே.. அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க..!!”

“அப்போ.. என்ன நடந்ததுன்னு சொல்லு..!!”

“கண்டிப்பா தெரிஞ்சுக்கனுமா..??”

“ஆமாம்..!!”

நந்தினி இப்போது சற்று நிதானித்தாள். ஒரு சில வினாடிகள் அசோக்கின் கண்களையே கூர்மையாக பார்த்தாள். அப்புறம் அடுக்கி முடித்த துணிகளை எல்லாம் கைகளில் அள்ளிக்கொண்டு கட்டிலை விட்டு எழுந்தாள். கேஷுவலாக சொன்னாள்.

“எல்லா உண்மையும் அவங்ககிட்ட சொல்லிட்டேன்..!!”

“எல்லா உண்மையும்னா..??”

“அதான்.. நம்ம காலேஜ் மேட்டர்.. நீங்க போட்ட அக்ரீமன்ட் மேட்டர்.. எல்லாம்..!!” நந்தினி சொல்ல, அசோக்குக்கு சுர்ரென்று கோவம் வந்தது.

“ஏய்.. உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்காடி..?? எதுக்கு அதெல்லாம் போய் அவங்ககிட்ட சொன்ன..??”

“பின்ன என்னங்க..?? ஆளாளுக்கு என் புருஷனை போட்டு திட்டிட்டு இருந்தா..?? எனக்கு கோவம் வந்துடுச்சு.. அதான் உண்மையை சொல்லிட்டேன்..!! அப்புறந்தான் எல்லாம் இப்போ சும்மா இருக்குறாங்க..!!” நந்தினி கூலாக சொல்ல, அசோக் பற்களை கடித்தான்.

“உன்னை..????? அதெல்லாம் அவங்கட்ட சொல்லக் கூடாதுன்னு உன்கிட்ட சொல்லிருக்கனா இல்லையா..??” அசோக் கோவமாக கேட்க,

“எப்போ சொன்னீங்க..??” நந்தினியோ அப்பாவி மாதிரி திருப்பி கேட்டாள்.

“அதான்டி.. கல்யாணத்துக்கு முன்னாடி கண்டிஷன் போட்டப்போ..!!”

“அப்டிலாமா சொன்னீங்க..?? எனக்கு சுத்தமா ஞாபகமே இல்ல.. மறந்து போச்சு..!!”

கேஷுவலாக சொல்லிவிட்டு நந்தினி அந்த அறையை விட்டு வெளியேற, அசோக் கடுப்புடன் அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தான். ‘கொழுப்பை பாரு இவளுக்கு..’ என்று அவளுடைய பின்புறத்தையே வெறித்துக் கொண்டிருந்தான்.

அத்தியாயம் 29

அன்று இரவு பத்து மணி. வீட்டில் அனைவரும் இரவு உணவு அருந்தி முடித்திருந்தனர். சாப்பிட்டு முடித்ததும் நந்தினி கிச்சனில் பிசியாகி விட, அசோக் தங்கள் அறைக்குள் சென்று புகுந்து கொண்டான். பால்கனிக்கு சென்றவன், இருண்டு போன ஆகாயத்தை வெறித்துப் பார்த்தவாறு நின்றிருந்தான். சலனமற்ற வானில்.. ஜொலிக்கும் நிலவும், மினுக்கும் நட்சத்திரங்களும்.. மெலிதாக வீசிய தென்றல் காற்றும்.. எப்போதும் போலவே அவன் மனதை வருடி சாந்தப்படுத்தின..!! ஒரு சிகரெட் எடுத்து பற்ற வைத்துக் கொண்டான். வெள்ளை வெள்ளையாக.. வளையம் வளையமாக.. புகை விட்டான்..!!

வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் அவனிடம் நடந்து கொண்ட முறை, அவனுடைய மனதுக்குள் ஒரு சந்தேகத்தை கிளப்பியிருந்தது. எல்லோருமாய் சேர்ந்து ஏதோ ஒரு திட்டம் தீட்டி, அதன்படி செயல்படுகிறார்களோ..?? இவள் வேறு எல்லா உண்மையையும் சொல்லிவிட்டேன் என்கிறாள்..!! கல்லூரி காலத்தில் இவள் அப்படி நடந்து கொண்டதற்கு இவள் மீது யாருக்கும் கோவம் இல்லையா..?? கல்யாணத்துக்கு நான் போட்ட அக்ரீமன்ட் பற்றி தெரிந்ததில், யாருக்கும் என் மீது வருத்தம் இல்லையா..?? அவர்கள் முகத்தில் இருந்து எதையுமே கண்டு பிடிக்க முடியவில்லையே..?? மிக தெளிவாக, இயல்பாக இருக்கிறார்களே..??

ஒருவகையில் அசோக் இவ்வாறு குழம்பினாலும், இன்னொரு வகையில் அவர்களுடைய நடத்தை அவனுக்கு சற்று நிம்மதியாகவே இருந்தது. வீட்டில் இருப்பவர்களின் பார்வையை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்று கலங்கிப்போய் வந்தவனுக்கு, எல்லோரும் இயல்பாக அவனை அணுகிய விதம், ஆறுதலையே அளித்தது. ஆனால் நந்தினியின் மேல் இருந்த கோவம் கொஞ்சம் கூட குறையவே இல்லை. அது அப்படியேதான் இருந்தது..!!

“என்னங்க.. இங்க வந்து நின்னுட்டீங்க..??”

சத்தம் கேட்டு அசோக் திரும்பி பார்க்க, நந்தினி பல்லிளித்துக்கொண்டே பால்கனி நோக்கி வந்து கொண்டிருந்தாள். ‘வந்துட்டாயா.. கொஞ்ச நேரம் கூட நிம்மதியா இருக்க விட மாட்டா..’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட அசோக், சலிப்பாக வேறுபக்கம் பார்வையை திருப்பிக்கொண்டான்.

e4

“என்னங்க.. ஃபிஷ் நல்லாருந்துச்சா..??” நந்தினி கேட்டதற்கு, அசோக் கொஞ்ச நேரம் கழித்துதான் பதில் சொன்னான்.

“ந..நல்லாருந்துச்சு..!!”

“ம்ம்.. ஸாரி..!!”

“அதுக்கெதுக்கு ஸாரி கேக்குற..??”

“ஹையோ.. அதுக்கு ஸாரி கேக்கலைங்க..!!”

“அப்புறம்..??”

அசோக் கேட்க, நந்தினி இப்போது முகத்தை அப்படியே குழந்தை மாதிரி மாற்றிக்கொண்டு, ஒருமாதிரி குழைந்தவாறே சொன்னாள்.

“உங்களை நம்பாம.. மதியம் அப்படி பிஹேவ் பண்ணிட்டேன்ல.. அதுக்கு..!!”

“ஓஹோ.. இப்போதான் ஞானம் பொறந்ததோ..??”

“இப்போ இல்ல.. அப்போவே பொறந்துடுச்சு..!!”

“எப்போ..??”

“ஆபீசை விட்டு வெளிய வந்ததும்..!!”

“ஆபீசுக்கு வெளில நாங்க ஒன்னும் போதிமரம்லாம் நட்டு வைக்கலையே ..??”

“ஐயோ..!! ஆபீஸ் விட்டு வெளில வந்ததும்.. நீங்க பேசுனதுலாம் கொஞ்சம் பொறுமையா யோசிச்சு பாத்தேன்.. அப்போவே புரிஞ்சதுன்னு சொன்னேன்..!!”

“அப்படி என்ன யோசிச்ச.. அப்படி என்ன புரிஞ்சது..??”

“இல்ல.. நீங்க அவ்வளவு கெஞ்சுனீங்கன்னா.. அவ்வளவு கோவப்பட்டு பேசுனீங்கன்னா.. நீங்க சொன்னது உண்மையாத்தான் இருக்கணும்னு புரிஞ்சது..!!”

சொல்லிவிட்டு நந்தினி அசோக்கின் கண்களையே குறுகுறுவென பார்க்க, அவனும் அவளுடைய கண்களையே கொஞ்ச நேரம் கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தான். அப்புறம் மீண்டும் வேறுபக்கமாய் திரும்பிக்கொண்டு புகைவிட ஆரம்பித்தான். நந்தினி இப்போது சற்றே அசோக்கை நெருங்கி நின்று கொண்டாள். வலது கையில் சிகரெட்டை பிடித்திருந்தவன், இடது கையை பால்கனி சுவற்றில்தான் ஊன்றியிருந்தான். இப்போது நந்தினி மெல்ல அந்த கையை தனது கையால் பற்றினாள்.

“கோவமா..??” என்று குழைவாக கேட்டாள்.

“ப்ச்.. அதுலாம் ஒண்ணுல்ல..!!” அசோக் அவனுடைய கையை அவளுடைய கைகளுக்குள் இருந்து உருவிக் கொண்டான்.

“இல்ல.. கோவந்தான்.. பாத்தாலே தெரியுது..!!”

“சரி.. கோவந்தான்.. அதுக்கு என்ன இப்போ..??”

“நான்தான் ஸாரி கேட்டுட்டேன்ல..??”

“உன் ஸாரிலாம் நீயே வச்சுக்கோ.. எனக்கு வேணாம்..!!”

அசோக் எரிச்சலாக சொல்லிவிட்டு அமைதியானான். நந்தினி இப்போது அவனை இன்னும் கொஞ்சம் நெருங்கி நின்று கொண்டாள். கொஞ்ச நேரம் அவனுடைய அமைதியாக கணவனின் முகத்தையே ஓரக்கண்ணால் ரசித்துக் கொண்டிருந்தவள், அப்புறம் மெல்லிய குரலில் சொன்னாள்.

“எ..எனக்கு உங்ககிட்ட ஒன்னு சொல்லணும்.. சொல்லவா..??”

“என்ன..??”

அசோக் ஒருமாதிரி வேண்டா வெறுப்பாகவே கேட்டான். ஆனால் அவன் அப்படி கேட்டதுமே நந்தினியின் முகத்தில் குப்பென ஒரு வெட்கம் வந்து அப்பிக்கொண்டது. தலையை பட்டென குனிந்து கொண்டாள். அவளுடைய மூச்சு சீரற்று போயிருக்க, மார்புகள் வேகவேகமாய் ஏறி இறங்கின. அவளிடம் ஏற்பட்ட மாற்றத்தை அசோக் வித்தியாசமாக பார்த்துக் கொண்டிருக்கும்போதே, நந்தினி முகத்தை நாணிக்கோணிக்கொண்டு, தயங்கி தயங்கி சொன்னாள்.

“ஐ லவ் யூ..!!” அவள் அப்படி சொல்வாள் என்று அசோக் எதிர்பார்த்திரவில்லை.

“என்னது..??” என்றான் முகத்தை கோணலாய் சுளித்தவாறு.

“ஐ லவ் யூ..!!”

நந்தினி மீண்டும் வெட்கத்துடன் சொன்னாள். அவ்வளவுதான்..!! அசோக்கிற்கு சுருக்கென ஒரு கோவம்..!! அவனுடைய இடது கையை சரக்கென உயர்த்தி கத்தினான்.

Comments

Scroll To Top