பயில்வான் ராவுத்தர் தாத்தாவும் ஊர் திண்ணையும்

(Payilvan Ravuthar Thathavum Oor Thinaium)

maamu 2018-03-02 Comments

எங்க ஏரியாவுல ராவுத்தர் தாத்தாவை பத்தி தெரியாதவங்க யாருமே கிடையாது. கூப்பிடுறது தாத்தானாலும் அவரு பெரிய பயில்வான். அந்த காலத்துல குஸ்தி சண்டை, கம்பு சுத்துறதுல பெரிய ஆளு. பள்ளவாசலுக்கு எதிரே ஒரு சின்ன குடிசை தான் அவரோட வீடு. உறவுனு யாரும் கிடையாது. பள்ளிவாசலுக்கு வர்றவங்க அவரைத் தேடி வந்து பசிக்கு சாப்பாடு, காசு கொடுத்திட்டு போவாங்க. அதை கூட அவர் போய் யாருகிட்டேயும் கேட்டது கிடையாது.

அதே மாதிரி கையில கொடுக்கவும் முடியாது. தர்மம் பண்றவங்க அவருக்கு தெரியாமத்தான் அவர் குடிசையில இல்லாதப்ப வச்சிட்டு போவாங்க. ஆனா டெய்லி குளிச்சி, புத்தம் புதுசு போல பைஜாமா, வேஷ்டி கட்டிக்கு புதுமாப்ள மாதிரி தான் இருப்பாரு. சைக்கிள்ல தான் சுத்துவாரு. அந்த குடிசையில் குரானோடு, ராமாயணம், மஹாபாரதம் உட்பட பல மதநூல்களும் ஒரு மதன நூலும் முக்கியமா இருக்கும். அது தான் வாத்ஸ்யானின் காமசூத்ரா புத்தகம்.

அவருக்கு சமஸ்கிருதம் படிக்கத் தெரியும். அந்த புத்தகம் சமஸ்கிருதம் என்பதால் யாரும் அதை படிக்கமுடியாமல் வயசு வித்தியாசமின்றி அவருகிட்டே விளக்கம் கேட்பாங்க. அவரும் சிரிச்சுகிட்டே இதுவரைக்கும் எவனும் குரான்ல கூட விளக்கம் கேட்டது இல்ல. ஆனா இதுல மட்டும் கரெக்டா கேட்குறீங்க. அப்போ குரான்ல எல்லாம் விளங்கிடுச்சா. அதை கரைச்சு குடிச்சீட்டீங்களான கிண்டல் பண்ணிட்டு தான் காமசூத்திரத்துக்கு விளக்கம் சொல்வாரு.

அதே போல் நோய் நோடினா ஜாதி மத பாகுபாடு இல்லாமல் பல பேரு அவரைத் தேடி வருவாங்க வெள்ளிக்கிழமை மட்டும் அவரு ஓதி குணப்படுத்துவாரு. இல்லேனா மருத்துவம் சொல்வாரு. பகல்ல குடிசையில ரெஸ்ட் எடுத்தாலும் ராவுல ஆம்பளை இல்லாத வீட்டு திண்ணையில காவலுக்கு படுத்திருப்பாரு. அதுவும் அவங்களே கூப்பிட்டாத்தான் போய்ப் படுப்பாரு. பலபேரு குழந்தை பாக்கியம் கேட்டு வந்தா புருஷன் பொண்டாட்டியா வாங்கனு அனுப்பி வைப்பாரு.

அப்படி ஜோடியா வர்றவங்க நாடிய மட்டும் பிடிச்சு பார்த்துட்டு ம்ஹும்…வாய்ப்பே இல்ல திண்ணையில படுக்க கூப்பிடு அப்புறம் பாரு என்று சொல்லி அனுப்புவார். வாய்ப்பு இருந்தால் அவசரப்படாதே இன்னும் ஆறு மாசம் கணக்கு இருக்கு அது சரிபடலேனா உனக்கும் திண்ணை தான் என்பார். அப்படி யாராவது அழைத்து ராவுத்தர் திண்ணையில் படுத்த அந்த வீட்ல சீக்கிரமே ஏதோ நல்ல காரியம் நடக்கப்போகுதுனு அர்த்தம். பெரும்பாலும் தொட்டில் சத்தம் தான் அது. ஆனால் இந்த ராவுத்தர் தாத்தா ட்ர்ட்மென்டை யாரும் தவறாக கண்டது இல்லை. அதெல்லாம் அடுத்த வீட்டு சங்கதியாக பேசிக் கொள்ள மாட்டார்கள்.

சில பெண்களே கூட பேசும் போது இன்னும் ஏண்டி காத்துகிட்டு இருக்கே, ட்ரீட்மென்ட் அது இதுனு காசை கரியாக்காதே, நம்ப ராவுத்தர் தாத்தாகிட்டே போ ஒரு ராவுல உன் கவலைய தீர்த்திடப்போறாரு என்று தான் பேசுவார்கள். வாக்கப்பட்டு வெளியூர் போன பெண்கள் கூட வந்து வீட்டில் தங்கி, ராவுத்தர் தாத்தாவை திண்ணைக்கு வரவைத்து, புகுந்த வீட்டுக்கு தெரியாமலேயே பிரச்சனையை தீர்த்து கொண்டு போவதும் உண்டு. பிள்ளைபேரு மட்டுமா பிறந்த பிள்ளைகளுக்கு பேரு வைப்பதும் கூட ராவுத்தர் தாத்தா தான். அவருக்கு தானே அந்த உரிமையும் கூட.

அப்படி எங்க ஏரியா ராவுத்தர் தாத்தா பலபேரோட பிள்ளைப்பேறு பிரச்சனையை தீர்த்து வைத்து இருக்கிறார். அதே போல் பிரசவத்துக்கு முன்பு அவர் ஓதி அனுப்பினால் சுகப்பிரசவம் தான். திண்ணையில் படுக்க கூப்பிட்டு, திரும்பும் போதே பிள்ளை பிறக்கும் பிறை, தேதியை கூட புட்டு புட்டு வைத்துவிட்டு தான் போவார். இஸ்லாத்தில் இறைத்தூதர் நம்பிக்கை மட்டுமே உண்டு. அல்லா தான் இறைவன். ஆனால் அவனுக்கு உருவம் கொடுத்து வழிபட மாட்டார்கள். ஆனால் எங்க ஏரியா ராவுத்தர் தாத்தா இறைவனின் திருவுருமாகத்தான் நடமாடிக்கொண்டு இருந்தார் எங்க சாலம்மா வீட்டு திண்ணையில் படுக்கும் வரை.

எல்லோரையும் போல சாலம்மா அழைத்து தான் ராவுத்தர் அவள் வீட்டு திண்ணையில் படுத்தார். ஆனால் சாலம்மா மாசமான பிறகு தான் ஏரியாவில் பெரிய பிரச்சனை உருவானது. சாலம்மாவும் தாத்தாவைப்போல் தான் ஆனால் திருமணமாகி புருஷனை இழந்தவள். பிள்ளைகள் கிடையாது. ஆனால் கடைசிகாலத்தில் வாரிசு இல்லாமல் அனாதை ஆகிவிடக்கூடாது என்று தான் ராவுத்தர் தாத்தாவிடம் புலம்பி இருக்கிறாள்.

தாத்தாவும் அவள் நாடி பிடித்து பார்த்துவிட்டு, ஒண்ணும் குறையில்லே இன்னும் 15 வருஷத்துக்கு உனக்கு ஆயுசு கெட்டி. நாளைக்கே புள்ளைய பெத்துக்கோ ஆண் வாரிசு தான் உனக்கு. உன்னோட கஷ்டம் தீர்ந்தாச்சுனு நினைச்சுக்கோ என்று சொல்ல அன்று இரவே ராவுத்தர் தாத்தாவை சாலம்மா திண்ணைக்கு படுக்க் அழைத்து விட்டாள். ராவுத்தர் தாத்தா இன்று யார் வீட்டு திண்ணையில் படுக்கிறார் என்பது பிளாஷ்நியூசாக ஏரியாவில் பரவிவிடும்.

அன்று சாலம்மா வீட்டில் படுத்த விபரம் மொத்த ஏரியாவுக்கும் தெரிந்தாலும் பலபேர் அவளுக்கு வேறு என்ன குறையோ என்று தான் யோசித்தார்கள். அவளுக்கு பிள்ளை வரம் கொடுக்கத்தான் ராவுத்தர் சாலம்மா வீட்டு திண்ணையில் படுத்திருக்கிறார் என்று பலரால் யூகிக்க முடியவில்லை. மேலும் தாத்தா சும்மா கூட பகலில் பலர் வீட்டு திண்ணையில் படுப்பதும் உண்டு. அப்படித்தான் தாத்தா படுத்திருப்பதாக பலர் நினைத்து இருக்கிறார்கள்.

ஆனால் வீரியமான தாத்தாவின் விதை வரம் குழந்தையாக மாறி சாலம்மாவின் கர்ப்பத்தில் வளர்ந்து வயிற்றை நிரப்பிய பிறகு தான் ஏரியா மக்களை முகம் சுழிக்க வைத்து விட்டது. ஊர் கூட்டம் கூடியது அதெப்படி அனாதையான அதுவும் கல்யாணமாகி புருஷனை இழந்த சாலம்மாவுக்கு ராவுத்தர் தாத்தா குழந்தை பேறு கொடுக்கலாம் என்று பஞ்சாயத்து தீப்பொறியாக கிளம்பியது. ஊர் கூட்டம் நடத்திய பல பெரியவர்களின் வீட்டில் ராவுத்தர் தாத்தாவோட குழந்தை விதை தான் வளர்ந்து நிற்கிறது என்பது வேறு விஷயம். ஆனாலும் ஊரில் அழுத்தத்தால் அவர்கள் ராவுத்தர் தாத்தாவை விசாரிக்கவேண்டிய கட்டாயத்தில் இருந்தார்கள்.

ஊர் கூட்டத்தில் பெரும்பாலும் பெண்கள் மீது பிராது இருந்தால், அவளை முன்னால் நிறுத்த மாட்டார்கள். வீட்டு முகவரி, இன்னார மகள், மனைவி என்று பெயரைச்சொல்லித்தான் அவள் மீது உள்ள பிராதை விசாரிப்பார்கள். மேலும் இங்கே பிராது ராவுத்தர் தாத்தா மீது தான் என்பதால் அவர் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தார். ராவுத்தர் தாத்தா எதற்கும் கலங்காக பயில்வான் ஆயிற்றே. கம்பீரமாக சைக்கிளில் வந்து இறங்கினார். முதலில் கூட்டத்தாரிடம் இது நான் சுக்கு காபி கொடுக்கிற டைம். ஊர் மரியாதைக்கு உடனே வந்துட்டேன். முதல்ல ஒரு சுக்கு காப்பியை ஆர்டர் பண்ணுங்க என்றார் தாத்தா கேஷுவலாக.

ஊர் அதிர்ச்சியோடு ராவுத்தர் தாத்தாவை பார்த்தாலும் அவர் ரத்தினச் சுருக்கமாக விளக்கத்தை சொல்லி முடித்தார்.

இதோ பாருங்க நான் இந்த ஏரியாவுக்கு பிழைக்க வந்தவன் தான். அதுக்காக யாருக்கும் கட்டுபட்டவன் இல்லை. ஏதோ பல வருஷம் உங்க முன்னாடி வாழ்ந்த மரியாதைக்கு தான் வந்தேன். அல்லாவுக்கு மட்டும் தான் கட்டுப்படுவேன். நான் பண்ணது கூட அல்லாவின் ஆணை தான். அதுபடி தான் உங்களோட பலபேர் திண்ணையில படுத்திருக்கேன். அது கூட நீங்க கூப்பிட்டுத்தான் நானா யாரு வீட்டு திண்ணையிலும் படுத்தது கிடையாது.

இதே சாலம்மா என்கிட்டே தீர்வுக்கு வராம இந்த ஊர் கூட்டத்துல நான் அனாதையா சாவ விரும்பல. படுத்த படைக்கை ஆகிட்டா என்னை யாரு பார்த்துப்பானு வந்து நின்னிருந்தா என்ன தீர்ப்பு கொடுத்திருப்பீங்க. அதுக்கு பதில் சொல்லுங்க நான் விளக்கம் சொல்றேன் என்றார்.

ஊர் அமைதியாகிவிட்டாலும், இல்ல தாத்தா இது தப்பான உதாரணம் ஆகிடக்கூடாது என்று ஒருவர் பேச ஆரம்பித்த போது, எது தப்பு, எது சரினு யாரு முடிவு பண்றது. அப்படிப்பார்த்தா நான் திண்ணையில படுத்ததே தப்பு தான். படுக்க கூப்பிட்டதும் தப்பு தான் என்றார். ஆனால் அதற்கு ஊர் அமைதி ஆகிவிட, சரி எப்போ நானே பிரச்சனை ஆகிட்டேனோ இதுக்கு நானே முடிவு கட்டுறேன்.

சாலம்மா இனிமே தனி, நான் தனி கிடையாது. அவளை நான் கட்டிக்கிறேன். இது வரைக்கும் பொதுநலத்தோடு வாழந்துட்டேன். அது தப்புனு உணர்றேன். நானும் சாலம்மாவைப்போல அனாதை தான். எனக்கும் இப்போ எதிர்காலத்தை பத்தி பயம் வந்துடுச்சு. அதனால் நான் நாளைக்கு விடியறதுக்குள்ள சாலம்மாவோட இந்த ஊரை விட்டு போயிடுறேன். நல்லவங்க, பெரியவங்க இதுவரைக்கும் என் மேல் அன்பு ஆதரவு காட்டினதுக்கு நன்றி. சாலம்மாவோட வீட்டை கூட வித்து பள்ளிவாசலுக்கு நன்கொடையா கொடுத்திடுங்க.

Comments

Scroll To Top