ஆட்டோ சங்கர் 3(வாசகர் கதைகள்)

Vatrama 2014-10-08 Comments

சுந்தரி (என்ற கீதசுந்தரி) என் மீது அன்பாக இன்பத்தை அள்ளி தந்தாள் . அவள் கவிதை நன்றாக எழுதுவாள், குமுதத்தில் அடிக்கடி அவள் எழுதிய கவிதைகள் வரும் . 10 ம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் வங்கியிருந்தாள் , வறுமையின் காரணமாக இந்த தொழிலுக்கு சுடலை ஏமாற்றி கூட்டிவந்தான் .நான் படிப்பை தொடர்ந்து படிக்க சொல்லி பக்கத்தில் இருந்த் பள்ளியில் சேர்த்து விட்டேன் . பள்ளியில் படிப்பு ,விளையாட்டு போட்டிகளில் நிறையா பரிசுகள் வாங்கினாள் .

(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

இந்த கதையை எழுதியவர் : Vatrama

4

அதன் பின் ஆறு மாதம் எனக்கு இறங்கு முகம் ஏழாம் இடத்தில் சனி திசை! காரணம், தயாநிதி என்ற சப்-இன்ஸ்பெக்டர் திருவான்மியூருக்கு மாற்றலாகி வந்தார். பெரியார் நகரில் 2 பங்களாவில் சோதனை போட்டு , விபசார நடவடிக்கையை நிறுத்தி, என்னை மொட்டை போட்டு நடு ரோட்டில் வைத்து, அடித்து உதைத்து வழக்கு போட்டார். உடனே ஒரு (மாஜி) மந்திரி தலையிட்டு என்னை விடச்சொல்லி சப்போர்ட் செய்ய, ‘விட முடியாது’ என்று மறுத்துவிட்டார் தயாநிதி. விளைவு? தயாநிதிக்கு டிரான்ஸ்ஃபர்!
புது சப்-இன்ஸ்பெக்டர் வந்து என்னை விடுதலை செய்தார் .

இதை விட அதிர்சியான விடயம் என் கீதசுந்தரி தீக்குளித்தாள். மாலை 4 மணி அளவில் அவள் பிணமானாள். சுடலைதான் சுந்தரியை விபசார விடுதிக்கு அழைத்து வந்து எனக்கு அறிமுகப்படுத்தியவன். இதனால் அவன் அவளிடம் கள்ளத்தனமாக பேசிக்கொண்டு வந்தான். இதை நான் பலமுறை கண்டித்து இருக்கிறேன். நான் ஜெயிலுக்கு போய்விட்டு வீட்டுக்கு வந்தபோது சுந்தரியை சுடலை கட்டாயப்படுத்தி கற்பழித்து விட்டான் , அவள் மனமுடைந்து தீக்குளித்து தற்கொலை செய்துக்கொண்டாள். சுந்தரியின் மரணம் பெரிய இழப்பாக இருந்தது.அவள் மீது வைத்திருந்த அன்பின் காரணமாக பெரியார் நகரில் கட்டிய பங்களாவுக்கு “கீதசுந்தரி” என்று பெயர் சூட்டினேன் அதை கீதசுந்தரியின் நினைவு இல்லம் போல் வைத்தேன் .

எனக்கு ஏற்பட்ட இந்தப் பிரச்னையால் மனம் ஒடிந்து நிறையக் குடித்தேன். இதனால் ‘தொழில்’ பாதித்தது. எனக்கு பதில் தொழிலை சுடலை கவனித்து வந்தார். அடுத்து சுமதியை சுடலை கடத்தி வந்தான் . என் மனம் ஆறுதல் அடைய அவளை 3வது மனைவியாக கட்டிக்கொண்டேன் .

அன்றைய சபாநாயகர் முனு ஆதியிடம் ஆரம்பிக்கிறது அரசியல் பிரமுகர்களுடநான தொடர்பும் சினிமா நடிகைகளின் சப்ளையும், எம்.வி.ஆர் இறந்த தருவாயில் இதிமுக வினர் இரண்டு கோஷ்டியாய் பிரிந்த சமயம் அனைவருக்கும் பெண்கள் சப்ளை செய்தேன் . பணம் மழையாய் கொட்டியது என்னை அவ்வப்போது போலீஸ் பிடிக்கும்போது எல்லாம், ‘முறைப்படி பணம்’ தந்து வெளிவந்துவிடுவேன். அதையும் மீறிப்போனால், அரசியல் பிரமுகர் தலையிட்டு வெளியே அழைத்து வந்துவிடுவார். இதனால் பலரும் போலீஸ் பிரச்னை எனில், என்னிடம் வருவார்கள். அதைத் தீர்த்துவைப்பேன் , இப்படியாகக் கொஞ்சம் ‘ஹீரோ’ ஆனேன். எனது அடாவடிதனத்துக்கு தம்பி மோகனும், மைத்துனர் எல்டினும்தான் தளபதிகளாக இருந்து செயல்பட்டார்கள் . “தம்பியுடையான் படைக்கு அஞ்சான்” என்ற பழமொழியின் அடிப்படை விளக்கமாகவும் ஆனி வேராகவும் அமைந்த சகோதர பாசத்தைப் பறைசாற்றுவதுக்கு என் நெஞ்சில் அவன் பெயரை பச்சை குத்திக்கொண்டேன் .

5

லலிதா (வயது 19) என்ற ‘புது கிராக்கி’ பெங்களூரில் இருந்து வந்தாள். எனக்கு லலிதாவைப் பார்த்த மாத்திரத்தில் பிடித்துவிட்டது. லலிதா-ஒரு காபரே டான்சர், இவள் அழகில் மயங்கி ,அவள் மடியில் கிடந்தேன் .லலிதா காமக்களேபரத்தில் கைதியானவளோ கட்டுகடங்காமல் திரிந்தாள், அவளுடனே சுற்றினேன் . சாராயம் குடித்து வந்து கும்மாளம் போடுவது லலிதாவுக்கு பிடிக்கவில்லை. என் முரட்டுத்தனத்துக்கு லலிதாவினால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அவளை சமாளித்து கட்டுப்படுத்த முடியவில்லை . என்னை தவிர வேறு யாரும் பேசக்கூடாது. லலிதா எனக்கு மட்டும்தான். அவளுக்கு தனி வீடு தந்து தங்கவைத்தேன் .அவளை எனது 4_வது மனைவி ஆக்கிக்கொண்டான். காதலுக்கு அடையாளமாக ஆயிரம் சின்னங்கள் இருந்தாலும்,அவரவர் மனதில் இன்றும் இருக்கும் காதல் மட்டுமே அனைவருக்கும் அழியா சின்னமாகிறது. நான் லலிதா பெயரை நெஞ்சில் பச்சை குத்திக்கொண்டேன் . அவளுக்காக நான் என்ன வேண்டுமானலும் செய்வேன் . பெண்ணாசை, மண்ணாசை, பொன்னாசை ஆகிய மூன்றுவிதமான ஆசைகளால் உலகம் கெட்டுப் போகிறது என்கிறது தர்ம சாஸ்திரங்கள். இந்த மூன்றும் இன்று மட்டுமல்ல; எல்லா யுகங்களிலும் வாழ்ந்தவர்களைஅழித்திருக்கிறதுஅழித்துக்கொண்டிருக்கிறது .ஈஸ்வர பக்தி மிகுந்திருந்தாலும் பெண்ணாசையால் இராவணன் அழிந்தான். எவ்வளவு எடுத்துச் சொன்னாலும், முன்வினைப் பயனால் இவை தொடர்ந்து கொண்டே போகின்றன. என்னால்
பெண்ணாசையை கட்டுப்படுத்த முடியவில்லை . எனக்கு சுடலைக்கும் பெண்களால் பிரச்சனை வந்தது . அவன் என் 4 மனைவி லலிதாவுடன் கள்ள உறவு வைத்துக்கொண்டான் .சுடலை லலிதாவை கடத்திக்கொண்டு பல்லாவரத்தில் உள்ள ஒரு வீட்டில் ரகசியமாக வைத்து இருந்தான்.இதை தெரிந்து கொண்டு சுடலையிடம் சமாதானமாகப் பேசி, லலிதாவை மீண்டும் பெரியார் நகருக்கு அழைத்து வந்து குடும்பம் நடத்தினேன்.

6

சுடலை எனக்கு போட்டியாக தனியாக விபசார தொழில் செய்ய ஆரம்பித்தான் அதோடு தொழிலில் ஏற்பட்ட போட்டி நெருக்கடிக்கு உள்ளாக்கியது. புது பெண்கள் , வாடிக்கையாளர்பள் சுடலையிடம் சென்றார்கள் . என் மனைவி சுந்தரியை கற்பழித்து சாவுக்கு காரணமாகவும் , லலிதாவுடன் கள்ளகாதல் வைத்ததுக்காகவும் , தொழில் போட்டிக்காகவும் நான் சுடலையை கொலை செய்ய முடிவு செய்தேன் .நண்பர்களின் துதி பாடல்களும் என்னை சிக்கலில் மாட்டி விட்டன. அக்டோபர் மாதம் சுடலை என் வீட்டுக்கு வந்தான். அன்று அமாவாசை தினம். சுடலையை பார்த்ததும் எனக்கு சரியான ஆத்திரம். அவனை தீர்த்துக்கட்டும்படி என் தம்பி மோகன் , எல்டினிடமும் கூறினேன். அவனுக்கு சாராயத்தை ஊற்றிக் கொடுத்து போதை ஏற்றி கழுத்தை நெரித்து கொலை செய்தோம்.
பிணத்தை அப்புறப்படுத்த சோம்பல்பட்டு(?) வீட்டின் ஜன்னல்களையும், கதவுகளையும் மூடிவிட்டு இரண்டு கேன்களில் பெட்ரோல் வாங்கி சுடலையின் பிணத்தை எரித்தோம் . இரவு சுமார் 10 மணிக்கு எரிக்க ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாகப் பெட்ரோலை ஊற்றி காலை 6 மணி வரை எரித்து வெறும் சாம்பலாக்கிவிட்டான். அந்தச் சாம்பலை எடுத்து வந்து பாபு மற்றும் நண்பர்களிடம், ”இதுதான் சுடலைன்னு சொன்னா, ஆச்சர்யமால்ல..?” என்று கேட்டபடியே, சாம்பலைக் கடலுக்குக் கொண்டுபோய் கரைத்துவிட்டேன். சுடலைக்கு உறவினர் யாருமே கிடையாது. எனவே, சுடலை காணாமல் போனதுபற்றி யாருமே போலீஸில் தெரிவிக்கவில்லை.

NEXT PART

What did you think of this story??

Comments

Scroll To Top