இதயப் பூவும் இளமை வண்டும் – 62

(Idhayapoovum Ilamaivandum)

Raja 2015-04-03 Comments

This story is part of a series:

kamavari ”ஏன்.. இல்லேன்னு சொல்லப் போறியா.. நீ..?” என திருப்பிக் கேட்டாள் கவிதாயினி.

”தெரியல..!” என்று புகையை அவள் முகத்தில் ஊதினான் சசி.

கையால் விசிறினாள்.

Story : Mukilan

”கருமண்டா.. நாறுது..”

”ஏய் ஒரு தம் அடிச்சுப்பார்ரீ.. புடிச்சுப்போகும்..”

”மொத அத தூக்கி வீசுடா..” என அவனை விட்டு தள்ளி உட்கார்ந்தாள்.

சிகரெட்டை ஆழமாக இழுத்து.. புகையை அவள் மீது ஊதினான்.

”வேணான்டா ப்ளீஸ்.. எனக்கு மூச்சு அடைக்குது..”

”ஓகே.. ஓகே.. கூல்..!!” இரண்டு பப் இழுத்து விட்டு சிகரெட்டை நசுக்கி.. ஜன்னல் வழியாக வெளியே வீசினான்.
எழுந்து போய் தண்ணீர் எடுத்து வாயைக் கொப்பளித்தான். அவன் தண்ணீர் குடிக்க..
கவி கை நீட்டினாள்.
”குடுடா…”

அவளிடம் கொடுத்தான்.
”சாப்பிட்டியா.. கவி..?”

”ம்..ம்ம்..!!” அண்ணாந்து தண்ணீர் குடித்துக்கொண்டே தலையாட்டினாள்.

”என்ன.. செஞ்ச..?”

”டிபன்டா..! மத்யாணம் எங்கம்மா மட்டன் எடுத்துட்டு வந்து செய்யும்..!” எழுந்தாள் கவி ”சரிடா.. நா போறேன்.!”

அவள் இடுப்பை வளைத்தான்.
”ஏய்.. இரு கவி..”

”இல்லடா.. டைமாச்சு…”

அவளை நெஞ்சில் சாய்த்து அணைத்தான்.
”நானும் வரட்டுமா..?”

”வேணான்டா..! நாங்க கேர்ள்ஸ் மட்டும் போவோம்..!”

”ம்..ம்ம்..! ஓகே..!” அவள் உதட்டைக் கவ்வி உறிஞ்சினான்.

அமைதியாக இருந்தாள் கவிதாயினி.
அவன் கை அவள் மார்பை இருக்க.. மெதுவாக பின்னால் நகர்ந்தாள்.
அவளே விலகி…
”நா போறண்டா… பை ..” என்றாள்.

அவள் கையைப் பிடித்தான்.
” எப்ப வருவ..?”

”தெரிலடா.. ஈவினிங்க்குள்ள வந்துருவேன்..” என அவள் முன்னால் போனாள்.
கதவுக்கு வெளியே போய்.. அவனிடம் திரும்பி..
”உன் பிரெண்டுடா..” என்றாள்.

”யாரு..?” எட்டிப் பார்த்தான் சசி.

”ராமு..!!” என்று விட்டு வாசலில் இருந்த ராமுவைப் பார்த்துச் சிரித்தாள் ”எப்படி இருக்கீங்க..?”

”நல்லாருக்கேன்.. நீங்க. .?”

” ம்..ம்ம்..! உள்ள வாங்க..” என்று விட்டு.. ”பைடா மாமு.. ஈவினிங் பாக்கலாம்..!” என சசிக்கு கையசைத்துவிட்டுப் போனாள்.

”பை.. கவி..” அவனும் கையசைத்தான் ”உள்ள வாடா..” என ராமுவை அழைத்தான்.

”என்ன பண்ற..?” ராமு உள்ளே வந்தான் ”தப்பான நேரத்துல வந்துட்டேனோ..?”

”ச்ச.. இல்லடா..! நீ வேற.. சும்மா வந்து பேசிட்டு போறா..”

உள்ளே வந்த ராமு நீட்டாக ட்ரஸ் பண்ணியிருந்தான். ஸ்பிரே வாசணை கொஞ்சம் தூக்கலாக இருந்தது.
”உங்கம்மா..டா..?”

”குமுதா வீட்டுக்கு போயிருக்கு.. உக்காருடா..”

உட்கார்ந்தான் ராமு.
”சாப்பிட்டாச்சா..?”

”ம்..நீ..?”

”ஓ..! குளிக்கலயா..?”

”இல்லடா.. சோம்பலா இருந்துச்சு.. சாப்பிட்டு அப்படியே படுத்துட்டேன்..”

” வெளில போலாமா..?”

”எங்க. .?”

”சினிமா.. கினிமா…?”

”நா குளிக்கனும். .”

” குளிச்சிட்டு வா.. போலாம்..! வீட்லருந்த செம போரா இருக்குடா..”

வாசலில் பேச்சுக்குரல் கேட்டது. சசி எட்டிப் பார்த்தான்.
கவியும்.. புவியும் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள்.
புவி அவனைப் பார்த்தாலும்.. பார்க்காதது போல.. அவன் காதில் விழவேண்டும் என்பது போல கோஞ்சம் எரிச்சலோடு சத்தமாகப் பேசினாள்.

”யாரது.?” எனக் கேட்டான் ராமு.

”பக்கத்து வீட்டு புள்ளைக..! சரி.. உக்காரு குளிச்சிட்டு வந்தர்றேன்..” என்றுவிட்டு வெளியே போனான் சசி.

புவியின் பக்கத்தில் தங்கமணியும் நின்றிருந்தாள்.

”ஹாய்.. தங்கமணி..” என்றான் சசி.

”ஹாய்.. ண்ணா..” புன்னகைத்தாள்.

”எப்படி இருக்க. .?”

”நல்லாருக்கண்ணா…”

”நசீமா..?”

”வீட்ல இருந்தாண்ணா…”

அவனைக் கண்டுகொள்ளாத புவியை ஒரு பார்வை பார்த்துவிட்டு பாத்ரூம் போனான் சசி.

புவி.. அவனுக்கு காதல் என்பதை உணர்த்தியவள். தன்னை வெறுத்த போதும்.. தன்னால் வெறுக்க முடியாத அளவு அவன் உள்ளத்தை ஆட்சி செய்யும் பெண்.!
இதுதான் காதல் எனறால்… காதல் இவ்வளவு கொடியதா என்ன..?

சசி குளிக்கும்போது.. புவி ராமுவிடம் பேசுவது கேட்டது.

”யாருமில்லையா..?” புவி.

”சசி குளிக்கறான்..” ராமு.

”அவங்கம்மா…?”

”இல்ல…”

”இன்னிக்கு லீவா..?”

”சண்டே இல்ல…”

அதற்குமேல் சசிக்கு தெளிவாக எதுவும் கேட்கவில்லை.
கேட்டருகே.. முணுமுணுப்பாகப் பேசுவது கேட்டது.
யார்.. யாருடன் என்று தெரியவில்லை.

சசி குளித்துவிட்டு பாத்ரூமிலிருந்து வெளியே போனபோது.. வாசலில் யாரும் இல்லை. வீட்டிற்குள் போனான் ராமு டிவி பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனோடு பேசியவாறே.. உடை மாற்றிப் புறப்பட்டான்.

வெளியே போய்க் கதவைப் பூட்டும்போது.. புவி தலைவாரியவாறு கதவருகே நின்றிருந்தாள். சசியை மதிக்கவே இல்லை.

போகும்போது.. ராமு ”மஞ்சு இருந்தா நல்லாருக்கும்..” என்றான்.

”எதுக்கு. .?” சசி.

”கம்பெனிக்கு..” சிரித்தான்.

”அப்ப நா.. எதுக்கு..?”

”அட.. அவ ரெண்டு பேருக்குமே கம்பெனி தருவா..”

”என்னடா சொல்ற..?”

” ஆமாடா..”

”அப்படின்னா..?”

” அது ஒன்னும் பிரச்சினை இல்லைடா.. பிட்டு போட்டு பாத்தேன்..! அவ எல்லாத்துக்கும் கம்பெனி தரேன்ட்டா…”

”அப்ப உன் லவ்வு..?”

”நாந்தான் சொல்லலையாடா.. அதெல்லாம் டைம் பாஸ்னு.. இப்ப அவ வேற ஒருத்தன..லவ் பண்றாடா..! எனக்கு தெரிஞ்சு.. நானும் தாராளமா பண்ணிக்கோனு சொல்லிட்டேன்.! ” என்றான்.

”அப்படியா..?”

”ம்..ம்ம்..! இப்ப ட்ரை பண்ணிபாக்லாமா..?”

”பண்லாங்கறியா..?”

”ம்..ம்ம்..! அவ வீட்டுக்கு போ.. நேரா…”

”பிரகாஷ் இருந்தான்னா..?”

”அவன் இருக்க மாட்டான்..! நட பாக்லாம்..”

”அவகிட்ட போன் இருக்குமில்ல..?”

”கூப்பிட்டேன்டா.. சுட்ச் ஆப்ல இருக்கு..! அவ மொபைல்ல சார்ஜே நிக்கறதில்லேனு சொல்லிட்டிருந்தா…”

சசிக்கு அதில் முழு உடன்பாடு இல்லை. அதனால் ராமு கடை முன்பாக நின்றுகொண்டான்.
மளிகைக்கடை.. டீக்கடை எல்லாம் லீவ்.!

”நீயும் வாடா..” ராமு கூப்பிட்டான்.

”இல்லடா.. நா எங்கம்மாகிட்ட சொல்லிட்டு வந்தர்றேன். நீ போய் கேட்டுட்டு வா..!” என்றான் சசி.

”ம்.. நீ பயப்படற..! சரி இரு.. நானே பாத்துட்டு வரேன்..!” என்றுவிட்டு எதிர் சந்துக்குள் போனான் ராமு.!

காம்பௌண்டுக்குள் நுழைந்தான் சசி. அண்ணாச்சி வீட்டுக்கதவு திறந்திருந்தது. சோபாவிலேயே உட்கார்ந்திருந்தார் அண்ணாச்சி.
உள்ளிருந்து மட்டன் குழம்பு வாசணை கமகமத்தது.!
மாடிப்படிகளில் ஏறி.. மேலே போனான்.
குமுதா.. அம்மா.. இருதயாவின் அம்மா.. மூன்று பேரும் குமுதா வீட்டில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.
இருதயா.. குழநதை மதுவுடன் விளையாடிக்கொண்டிருந்தாள்.
சசியைப் பார்த்ததும்…
”ஐ.. மாமா வந்துட்டாங்க.. பாரு…” என்று சிரித்தாள்.

அவளோடு பொதுவாகப் பேசிவிட்டு.. அம்மாவிடம் சாவியைக் கொடுத்துவிட்டு..
”நா சினிமா போறேன்..!” எனச் சொல்லிவிட்டு வெளியேறினான்.

அவன் படிகளில் இறங்கும்முன்.. இருதயா ஓடிவந்தாள்.
”ஒரு நிமிசம்..”

நின்றான் ”என்ன இருதயா..?”

”பஸ் ஸ்டாண்ட் பக்கம்தான போறீங்க..?”

” ஆமா.. ஏன்..?”

” ஒரு சின்ன ஹெல்ப்.. என் மொபைலுக்கு.. ரீசார்ஜ் பண்ணனும்..! ஈஸி பண்ணிருங்களேன்.. ப்ளீஸ்..”

” ஓகே.. எவ்ளோ…?”

”ஐம்பது..! இங்க கடையெல்லாம் லீவு.. அதான் உங்கள டிஸ்டர்ப் பண்றேன். ஸாரி..!” என நூறு ரூபாயை நீட்டினாள்.

சசி பணம் வாங்கவில்லை.!
”நெம்பர்..?”

”நோட் பண்ணிக்கோங்க..” என நெம்பர் சொன்னாள்.
அதை தன் மொபைலில் ஏற்றிக்கொண்டான் சசி.

”எனக்கு ஒரு ரிங் விடுங்க.. உங்க நெம்பர் சேவ் பண்ணிக்கறேன்..” என்றாள்.

ரிங் விட்டான் சசி.
”நீ எப்ப மொபைல் வாங்கின..?”

”நா வாங்கல.. எங்க அங்கிள் வாங்கி குடுத்தாங்க…”

” ஓ..!”

”இந்தாங்க.. பணம்..” என நீட்ட…

அதை மறுத்தான் சசி.
”வேண்டாம் வெய்..! நா பண்ணிவிடறேன்.! பை..!!” அவன் கீழே இறங்க..
அவனை மறுபடி அழைத்தாள் இருதயா.

”ஒரு நிமிசம்..ஒரு நிமிசம்..”

பாதிப்படிகளில் இறங்கியவன் நின்றான்.
”என்ன…?”

அவளே இறங்கி வந்தாள். ”மொதல்ல பணத்தை வாங்கிக்கோங்க.. ப்ளீஸ்..” என பணத்தை.. அவன் சட்டைப் பாக்கெட்டில் திணித்து விட்டாள் இருதயா…..!!!!

-வளரும்……!!!!

What did you think of this story??

Comments

Scroll To Top